Wednesday, August 8, 2012

மணித நேயத்திற்கு எதிராக செயல்பட்ட ம.ம.க மற்றும் த.மு.மு.க கட்சியினர்


நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பஷீரப்பா தெருவை சார்ந்த ஹயாத் முகம்மது ஈஸா (வயது 19) என்பவர் தினக்கூலி அடிப்படையில் பிளம்பிங் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். 

இவர் கடந்த 03.08.2012 வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சமாதானபுரம் அருகில் உள்ள ஹோண்டா மோட்டார் வாகன புதிய கட்டிடத்தின் மாடியில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் கயிறு கட்டி வேலை செய்து கொண்டிருந்த போது ஆர்க் கன்சல்டிங் பில்டர்ஸ் நிறுவனத்தின் கட்டிட பொறியாளர் குமார் மற்றும் மேற்பார்வையாளர் அருள்இ ஆகியோரின் கவனக்குறைவால் கயிறு அறுந்து விழுந்து தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

உடனடியாக அவரது உடல் அருகில் உள்ள பெல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

சம்பவத்தை கேள்விபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளையம்;இ பாளையங்கோட்டை கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெல் தனியார் மருத்துவமனையில் பெருந்திரளாக குழுமினர். 

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். மேலும் கட்டிட பொறியாளர் குமார்இ பார்ட்னர் ஆதித்தன் மற்றும் கட்டிட மேற்பார்வையாளர் அருள்இ ஆகியோரிடம் இறந்து போனவர் குடும்பத்திற்கு ரூ.20இ00இ000ஃ- (இருபது இலட்சம்) உடனடியாக வழங்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் கட்டிட பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோருக்கு ஆதரவாக அ.தி.மு.க-வின் முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க நெல்லை மாவட்ட த.மு.மு.க மற்றும் ம.ம.க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து இப்பிரச்சினையில் தலையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தார்கள் விரும்பாத நிலையில் நஷ்ட ஈட்டுத் தொகையை குறைக்கும் வகையிலும்இ பிரச்சினையை திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இந்த செயல்பாடு சம்பவ இடத்தில் குழுமியிருந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உறவினர்கள் ஊர் ஜமாஅத்தார்கள் மற்றும் இன்னபிற முஸ்லிம் அமைப்புகள் மத்தியில் மிகப்பெரும் வெறுப்பையும்இ கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இறந்தவரின் குடும்பத்தாருக்கு இருபது லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கை விடுத்த போது, மாமா கட்சியினர் தங்களது கூட்டணிக் கட்சியான அதிமுக நிர்வாகிகளிடம், ‘இவர்களுக்கு (தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு) அவ்வளவு விபரம் போதாது. 

ஒரு லட்சம் கொடுத்து பிரச்சனையை முடித்து விடுங்கள்’ என்று கூறியுள்ளனர். நஷ்டஈட்டுத் தொகையைக் குறைப்பதன் மூலம் கம்பெனி முதலாளிக்கு லாபம் ஏற்படுத்திக் கொடுத்தால் அதற்காக குறிப்பிட்ட தொகையைக் கமிஷனாகக் கொடுப்பார்கள் என்பது தான் இதற்குக் காரணம்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பத்தாருக்கு ஆதரவாகக் களமிறங்க வேண்டியவர்கள், கமிஷனைக் கருத்தில் கொண்டு, முதலாளிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கிய த.மு.மு.க மற்றும் ம.ம.க நிர்வாகிகளுடைய நடவடிக்கைகளைக் கண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உறவினர்கள் மற்றும் ஊர் ஜமாஅத்தார்கள் கடும் வெறுப்படைந்தனர். 

தேவையில்லாமல் நீங்கள் இதில் தலையிட வேண்டாம் உடனடியாக இந்த இடத்திலிருந்து வெளியேறிவிடுகள் என்று தமுமுகவினரை விரட்டி, காரிதுப்பும் அளவிற்கு தமுமுக மற்றும் மமக மாவட்ட நிர்வாகிகள் நடந்து கொண்டனர்.

இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் இன்னபிற முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கபட்ட குடும்பத்தாருக்கு ரூ.6இ00இ000ஃ- (ஆறு இலட்சம்) வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

மறுநாள் இறந்தவரின் உடல் முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளையம் கிளை ஆம்புலன்ஸ் மூலம் இறந்தவரின் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேற்கண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மணிதநேய பணியை பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களும் ஊர் ஜமாஅத்தார்களும் மற்றும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்கள்.

அல்லாஹ்விற்காக இந்தக் காரியத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தொடர்ந்து ஈட்டுத்தொகை கிடைப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட மாமா கட்சியினர், பத்திரிகையாளர்களிடம் தாங்கள் தான் இறந்தவருக்கு ஆதரவாக முற்றுகையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

இதனால் மறுநாள் வெளியான ஒரு தமிழ் நாளிதழில் நமது ஜமாஅத் சகோதரர்கள் முற்றுகையிட்டிருந்த படத்தை வெளியிட்டு தமுமுக, மமகவினர் முற்றுகையிட்டதாக செய்தி வெளியிட்டது. 

மாமா கட்சியினரின் இந்த துரோகச் செயலையும் பத்திரிகையில் செய்தியைத் திரித்துக் கூறிய இழிசெயலையும் கண்டு மக்கள் கொதித்துப் போயினர்.

இவர்களின் கட்ட பஞ்சாயத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது ...

இவர்களின் இந்த இழிவான செயல்களுக்கு இறைவன் மிக விரைவில் ஒரு முற்று புள்ளி வைப்பான் ..இன்ஷா அல்லாஹ்...

Saturday, August 4, 2012

ஜமாத்தே இஸ்லாமி , இக்வான் சகோதரர்களுக்கு மனம் திறந்த மடல்

உலக முஸ்லிம்களை காபிர்கள் என்று சொல்லும் வழிகெட்ட கொள்கையை கொண்டுவந்ததே வழிகெட்ட இக்வானிய கூட்டம்தான். செய்யித் குதுப் உலக முஸ்லிம்கள் அனைவரும் காபிர்கள் ஆகிவிட்டனர் என்றார் ஆனால் இன்று வந்த வழிகெட்ட கர்ளாவி செய்யித் குதுப் வழிகேடர் என்றார். மேலும் வழிகேட்ட மவ்தூதி தஜ்ஜாலின் வருகையை மறுத்துள்ளார், எவருமே மறுக்க முடியாத தஜ்ஜாலின் வருகை பற்றிய "முதவாதிரான" ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் தவறாக சொல்லிவிட்டதாக நபி (ஸல்) அவர்களை பிழை காண்கிறார் மவ்தூதி.

இக்வாங்களின் தலைவர் உமர் தில்மிசாணி கபுர்வணக்கம் செய்வது சரி என்கிறார். எடுத்த எடுப்பில் யாரையும் நாம் வழிகேடு என்று சொல்லவில்லை உசூல் விதிகளை பேணி ஆய்வு செய்து அதில் பிழை வந்தால் வழிகேடு அல்ல ஆனால் இஸ்லாத்தில் "மா உளிம பி அத்தீனி பிள்ளரூரா " என்ற மிகவும் அறியப்பட்ட விடயங்களில் அத்து மீறி இஜ்திஹாத் செய்து வலிகேடான பத்வா சொல்லும் கூட்டத்தையே நாம் வழிகேடு என்று சொல்கிறோம்.

பன்றிக்கொழுப்பு ஹராம் என்று அறியப்பட்டது அதை ஹலால் என்று கர்ளாவி சொல்கிறார், கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்து சொல்வது ஹராம் இதை கூடும் என்று கர்ளாவி சொல்கிறார், அல்லாஹ்வுக்கு அர்ஷ் எனும் சிம்மாசனம் உள்ளது என்று கருத்து வேறுபாட்டுக்கு அப்பாற்பட்ட விடயத்தை செய்யித் குதுப் இல்லை என்கிறார், இது இது வழிகேடு இல்லையா ? நன்மை தீமை அளக்கும் மீசான் எனும் தராசு பற்றி அல்லாஹ் சொல்லியிருக்க அது இல்லை என்று செய்யித் குதுப் அல்லாஹ்வுக்கு பாடம் சொல்லிகொடுக்கிறார் இது வழிகேடு இல்லையா ?..............

பெண்களுக்கு கைகொடுப்பது ஹராம் என்று அறியப்பட்ட விடயம் ஆகும் அதை கூடும் என்று கர்ளாவி சொல்கிறார் இது வழிகேடு இல்லையா ? இந்த வழிகேட்டை சாதாரண மஸாயில் பிரச்சினை என்று வழிகெட்ட மன்சூர் சொல்கிறார் இது வழிகேடு இல்லையா ? சியோநிசத்துடன் முஸ்லிம்களுக்கு மார்க்க ரீதியான பிரச்சினை இல்லை அரசியல் ரீதியான பிரச்சினைதான் உள்ளது என்று யூத சியோனிச கொள்கைக்கு வக்காலத்து வாங்குகிறார் கர்ளாவி இது வழிகேடு இல்லையா 
?.....

பன்றி கொழுப்பு , இசை, கிறிஸ்மஸ் வாழ்த்து , புத்தாண்டு வாழ்த்து, பெண்களுக்கு கை கொடுத்தல், என்பவை ஹலால் என்று சொல்லும் ஜமாத்தே இஸ்லாமி இக்வான் அதை எதிர்க்க ஒன்றும் இல்லை என்று இந்த கூட்டம் கருதினால் இவ்வாறான எந்த வழிகேடும் இல்லாத தவ்ஹீதை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் ?......

உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜாஹிலிய கால காபிர்கள் நிலையை அடைந்த காபிர்கள் என்று செய்யித் குதுப் சொன்னது வழிகேடு இல்லை என்று ஜமாத்தே இஸ்லாமி கூட்டம் கருதினால் இவ்வாறான் எந்த வழிகேடும் இல்லாத தவ்ஹீதை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் ?......

கபுர்வணக்கம் சரி என்று சொல்லும் இக்வானின் தலைவர் உமர் தில்மிசாணி வழிகேடர் இல்லை என்றால் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது வழிகேடு இல்லை என்றால் இந்த இணைவைப்புக்கு எதிராக எந்த பிரச்சாரமும் செய்யாத இக்வான்கள் இப்படியான ஷிர்க் இல்லாத தவ்ஹீத் வாதிகளுடன் ஏன் எதிர் பிரச்சாரம் செய்கின்றனர் ?.......

மேலே சொன்ன வற்றில் பன்றி கொழுப்பு, இசை, கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வது , புத்தாண்டு கொண்டாடுவது கூடும் கபுர்வனங்குவது சரி என்று சொல்வது தஜ்ஜாலின் வருகை இல்லை என்று சொல்வது, அன்னிய பெண்ணுக்கு கைகொடுப்பது கூடும், அல்லாஹ்வின் அர்ஷ் அல்லாஹ்வின் மீசான் இல்லை என்று சொல்வது பாரதூரமாக எதிர்க்க வேண்டிய விடயங்கள் இல்லை என்றால் மற்ற விடயங்களை விட பாலஸ்தீன விடயத்தில் அதிக தீவிரம் காட்டும் ஜமாத்தே இஸ்லாமி இக்வான்கள் பலஸ்தீனை ஆக்கிரமித்திருக்கும் சியோனிச யூதர்களுடன் மார்க்க ரீதியான பிரச்சினை எதுவும் இல்லை என்று யூசுப் கர்ளாவி சொன்னதை கூட ஏற்றுகொள்வீர்களா ? அது வழிகேடு இல்லையா ?......

இவை எல்லாம் வழிகேடு இல்லை என்றால் எதற்காக கிளை விடயமான அரசியலில் அதிக தீவிர போக்கு கொண்டு மாற்று கட்சிகளை தீவிரமாக விமர்சிக்கின்ரீர்? அதற்காக சண்டை பிடிகின்ரீர், கிளை விடயமான அரசியலில் பேதம் கொண்ட சகோதரர்களை கொலை செய்கின்றீர் ?.....

இதுதான் உங்கள் கொள்கை என்றால் ஜமாத்தே இஸ்லாமி இக்வான்கள் வழிகேடர்கள் என்று சொல்வதில் கடுகளவு சந்தேகம் கூட எமக்கு கிடையாது, நீங்கள் இந்த கொள்கை சரி என்று வாதிக்கும்வரை உங்கள் கொள்கை வழிகேடே ......!

எப்போது இஸ்லாத்தின் அடிப்படையை சாதாரண மஸாயில் என்றும் இஸ்லாத்தின் கிளை விடயமான அரசியலை அடிப்படை போன்ற எண்ணத்துடனும் ஏற்று அதன்படி உங்கள் வழிகெட்ட தாவாவை செய்துவருகிண்றீர்களோ அப்போதே நீங்கள் வழிகேடர்கள் என்பதில் சந்தேகம் இல்லை ....!

அல்லாஹ் இவர்களுக்கும், இவர்களை நம்பியவர்களுக்கும் நேர்வழியை வழங்க வேண்டும் என பிராத்திக்கின்றேன் 





நன்றி -உங்கள் சகோதரன் : அஹ்மத் ஜம்ஷாத்

நக்கிப்பிழைக்கும் தமுமுக


பாகிஸ்தானில், கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது என்று ஒரு பொய்யை பரப்பி, அதன் மூலம் இங்குள்ள பெரும்பான்மை சமூகத்தை தூண்டி விடக்கூடிய விஷமமான செயலை கடந்த வாரம் தினத்தந்தி செய்தது.
அங்குள்ள இந்து பெண்கள் ஆயிரக்கணக்கில் கடத்தப்பட்டு முஸ்லிம்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள் என்றும், இந்தியாவில் முஸ்லிம்கள் எல்லா சலுகைகளையும் பெற்று சந்தோஷமாக வாழ்கிறார்கள் எனவும் கூறி, தனது பாஜக ஊதுகுழல் வேலையை வெளிப்படையாகவே செய்திருக்கிறது தினத்தந்தி !
இது குறித்து தமிழக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தினத்தந்தியை முழுமையான முறையில் புறக்கணித்து, அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற இறுமாப்புடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரண்டு மாத செயல் திட்டம் வகுத்துள்ளது, அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், அரசியலில் கால் பதித்து அதன் மூலம் கிடைக்கும் விளம்பரத்தையும் சுயலாபத்தையுமே தமது ஒரே லட்சியமாக கொண்டு செயல்பட்டு வரும் தமுமுக போன்ற கேடுகெட்ட இஸ்லாமிய பெயர்தாங்கிகள், வழக்கம் போல இதற்கும் முட்டுக்கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.


தினத்தந்தியை கண்டித்தது போலவும் இருக்க வேண்டும் என்பதற்காக அதிரடியாக "தினத்தந்திக்கு தமுமுக மறுப்பு"என்று தலைப்பு இட்டு விட்டு, உள்ளே மிகவும் மென்மையான முறையில் தங்கள் மறுப்பை சொல்லிய விதத்தை படிக்கும் எவரும் புரிவார்கள், இவர்களின் கேடு கெட்ட பச்சோந்தித்தனத்தை.
மேலும்,
ஹிந்துக்களிடையே ஒரு வெறுப்பை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களை தூண்டி விட வேண்டும் என்று விரும்புகிற ஆர்எஸ்எஸ்ஸுக்கும், பாஜகவுக்கும் ஊதுகுழலாக செயல்பட்டு தங்களது காவி சிந்தனையை வெளிப்படையாகவே காட்டியுள்ள   தினத்தந்தியின் அந்த செய்திக்கு இந்த கேடுகெட்ட தமுமுக கொடுத்த மறுப்பின் லட்சணம்..

""பாகிஸ்தானில் வாழும் எமது தொப்புள் கொடி உறவான சிறுபான்மை இந்துக்கள் சந்திக்கும் இன்னல்களை குறித்து அத்தலையங்கம் கவலை தெரிவித்தது நியாயமே. அதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.""

முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதோ பற்றியோ, நமது மார்க்க கொள்கை கேலிக்குரியதாக ஆக்கப்படுவது பற்றியோ எள்ளளவும் அக்கறையில்லாதவர்கள் தான் இந்த தமுமுகவினர் என்பதை கடந்த பல வருடங்களாக பல சம்பவங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன. 

முஸ்லிம்களுக்கான இட ஒதிக்கீட்டை கூட தர விரும்பாமல் அரசியல் கட்சிகள் இழுத்தடித்த போது அதை கண்டு முஸ்லிம் சமுதாயமே வெகுண்டேழுத போது, இந்த கழிசடைகள் மட்டும், அது ரோஸ்டர் முறையில் கிடைக்கும் என்று கூறி அப்போதைய திமுக அரசுக்கு வால் பிடித்து சுயலாபம் அடைந்தது முதல், 
பாபர் மஸ்ஜித் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்பது முதல், 
தானே புயல் பாதிப்பிற்கு அம்மா செய்துள்ள நிவாரண உதவிகளை பார்க்கிற போது எங்கள் ஊரிலும் இது போன்று புயல் வந்து ஊரையெல்லாம் அடித்துக்கொண்டு போகாதா என்று ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படுகிறான் என்று கூறி ஜெயலலிதாவின் வாலை நக்கியது வரை, இவர்களின் அரசியல் ஜால்ரா பட்டியல் மிக நீளம்.

அந்த பட்டியலில் இப்போது தினத்தந்தியின் விஷமதனதிற்கு இவர்கள் அடித்துள்ள ஜால்ராவும் இடம் பிடித்துள்ளது. 
இந்த சமுதாயம் இவர்களை துடைப்பக்கட்டையால் துரத்துகிற காலம் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் தெரிகிறது.. இன்ஷா அல்லாஹ்!

இஸ்லாத்திற்கு எதிராக வேகமாக வளர்ந்து வரும் ஒரு கட்சி !


தமுமுகவும் அதன் செல்லப்பிள்ளையான மமகவும் திருந்துவார்கள் என்கிற கொஞ்ச நஞ்ச எதிர்ப்பார்ப்பையும் தவிடு பொடியாக்கும் வண்ணம் இவர்களது சமீபத்திய செயல் அமைந்துள்ளது.

இஸ்லாத்திற்கு எதிரான, அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் மாபாதக செயலை தலைமை தாங்கி நடத்தி, நரக படுகுழிக்கு தங்களை முன்பதிவு செய்து வருகின்றனர் இவர்கள். இணைப்பை பார்க்கவும்.

அல்லாஹ்வுக்கு இணை வைத்தால் என்ன? ஓட்டு கிடைக்கிறதா? அதை மட்டும் பார், என்பது தான் அவர்கள் பைலாவோ என்னவோ..

ஆர்எஸ்எஸ் , சிவசேனா பட்டியலில் இந்த சமுதாயத்தை இது போன்ற நயவஞ்சகர்களிடம் இருந்தும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
புனித ரமளானில் அனைவரும் இதற்காக துஆ செய்யுங்கள்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons