Thursday, March 31, 2011

டாய்லெட் பேப்பரால் முகம் துடைக்கும் மானம் கெட்டவர்கள்


கடந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக கமிஷன் அமைத்த ஜெயலாலிதாவை ஆதரித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரம் செய்தது. ஆனால் அப்போது திமுக வின் சிறுபான்மைப் பிரிவாக இருந்த மமகட்சியினர் அதாவது தமுமுகவினர், ஜெயலலிதா அமைத்த ஆணையத்தை வேஸ்ட் பேப்பர் ஆணயம் என்றும், அது டாய்லட் பேப்பர் தான் என்றும் மிகவும் மட்ட ரகமாக விமர்சனம் செய்தனர். மேலும், இந்த டாய்லட் பேப்பர் மலம் கழித்துவிட்டு துடைத்துப் போடத்தான் உதவும் என்றும் பிரச்சாரம் செய்தனர்.
அப்போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமானால் அதற்கென்று ஆணையம் அமைக்கப்பட்டு அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் தான் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முஸ்லிம்கள் மத்தியில் விளக்கி பெருவாரியான முஸ்லிம் வாக்குகளை அதிமுகவின் பக்கம் திருப்பி அதிமுகவை ஒரு பலமான எதிரணியாகசட்டமன்றத்தில் அமர வைத்தது.
அப்போது ஜெயலலிதா அமைத்த அந்த ஆணயத்தை டாய்லட் பேப்பர் என்று கூறியவர்களின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டுக்காக அதிமுக பொதுச் செயலாலர் ஜெயலலிதா என்ன செய்துள்ளார் என்று ராஜ் டிவி சார்பில் அதன் செய்தியாளர் நிஜந்தன் கேட்கப்பட்ட கேள்விக்கு மமகட்சியின் ஒருங்கினைப்பாளர் அளித்த பதில் இவர்கள் மானம் கெட்டும், மதிகெட்டும் எந்த அளவிற்கு முச்சந்தியில் நிற்கின்றார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது.
ஆம்! முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டுக்காக அதிமுக பொதுச் செயலாலர் ஜெயலலிதா என்ன செய்துள்ளார் என்றால், அந்த அம்மையார் தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக முதன் முதலில் ஆணையம் அமைத்தவர் என்று சொல்லி தங்கள் கேவலத் தனத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.
2006 ஆம் ஆண்டு மலம் கழித்துவிட்டு துடைத்துப் போடத்தான் உதவும் இந்தப் பேப்பர் என்று எந்த டாய்லட் பேப்பரைப் பற்றி குறை கூறினார்களோ அதே டாய்ல்ட் பேப்பர் தான் தற்போது 2011 ஆம் ஆண்டு இவர்களுக்கு முகம் துடைக்க பயன்பட்டுக் கொண்டிருக்கிறதென்றால் இவர்களின் நாற்றமெடுத்த கதையை நாம் யாரிடம் சொல்வது?
தாங்கள் வாங்கிய மூனு சீட்டுக்காக தங்கள் மானத்தை மட்டுமல்ல யாருடைய மானத்தையும் அடகு வைக்க தயங்க மாட்டார்கள் என்பதனை மற்றுமொரு முறை நிரூபித்துள்ளனர் மானம் கெட்ட மக்கள் கட்சியினர்.

அதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் அண்ணன் பாக்கர்


அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் பிசியாக இருக்கும் காரனத்தால் கட்சி அலுவல்களைத் தன்னால் பார்க்க முடியாது என கருதி பொய்யன் சமாத்தின் நிறுவனரும்,நிரந்தரத்தலைவருமான அண்ணன் பாக்கர் அவர்களை புதிய பொதுச்செயலாளராக‌ நியமித்து உத்தரவிட்டார். ஆனால் இந்த செய்தி வேறு யாருக்கும் தெரியாது. எந்த பத்திரிகையிலுமோ டிவியிலுமோ வரவில்லை.
அண்ணன் பாக்கர் அவர்கள் அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்றவுடன் செய்த வேலை என்ன தெரியுமாபுரட்சித்தலைவி அம்மா அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் முஸ்லீம்கள் இடஒதுக்கீடு பற்றி ஒரு வார்த்தை கூட இடம்பெறாதது கண்டு மிகுந்த மனவேதனை அடைந்தார். உடனடியாக தன்னுடைய "பெர்சனல்" சகாக்களிடம் கலந்து ஆலோசனை செய்தார். அந்த ஆலோசனையின் முடிவில் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. அதாவது அதிமுகவின் முன்னாள் பொதுசெயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அறிவிக்காமல் விட்ட முஸ்லீம்கள் இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவோம் என்ற ஒரு வாசகத்தை ஒரு பேப்பரில் எழுதி அதை ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையின் ஏதாவது ஒரு பக்கத்தில் வைத்து பின் அடித்து விடுவது என முடிவுசெய்யப்பட்டது.
அண்ணனின் இந்த அற்புதமான முடிவை அவரது சகாக்களும் மனமார ஏற்றுக்கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்குடீயும்சமோசாவும் வழங்கப்பட்டன. அதிமுகவின் புதிய பொதுச்செயலாளரின் இந்த முடிவை தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டி அதை ஒரு பேப்பரில் எழுதி பின் அடித்துக் கொள்ளலாம் என நினைத்து அந்த இடத்திலே தேட அங்கே எந்த பேப்பரும் கிடைக்கவில்லை. உடனே அனைவரும் ஆலோசனையில் ஆழ்ந்த போது, அங்கிருந்த சிந்தனை சிப்பிசயனைடு குப்பி அண்ணன் செங்கி அவர்கள் சமோசா மடித்து வந்த பேப்பரில் எழுதி இப்போதைக்கு ஒட்டிக்கொள்வோம் என ஆலோசனை கூறஇந்த அருமையான ஆலோசனையை ஏற்றுக்கொண்ட கழகத்தின் புதிய பொதுச்செயலாளர் அண்ணன் அவர்கள் அதை அமுல்படுத்த உத்தரவிட்டார்.
உடனடியாக சிந்தனைப்புயல் அண்ணன் செங்கி அவர்கள் இடஒதுக்கீடு சம்பந்தமாக கீழ்க்கண்ட வாசகங்களை எழுத ஆரம்பித்தார்.
"சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மூலம் அதிமுக ஆட்சிக்காலத்தில் தான் சட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. ஆனால்2006ம் ஆண்டில் கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றபின்,இஸ்லாமியர்கள் இடம்பெறாத வகையில் இந்தச் சட்டம் திருத்தப்பட்டது. மேலும் கருணாநிதி தன்னிச்சையாக இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத இடைஒதுக்கீட்டை அறிவித்தார். என்றாலும் இது முறையாக அமுல்படுத்தப்படவில்லை.
அதிமுக ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீட்டு விகிதம் உயர்த்தி அறிவிக்கப்படும். மேலும் அது முறையாக அமுல்படுத்தப்படுகிறதா என்பதும் கண்கானிக்கப்படும். இஸ்லாமியர்களின் இதர கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும்..."
என்றவாறு வாசகங்களை எழுதி அதை புரூஃப் பார்க்க தொண்டியப்பாவிடம் கொடுக்கப்பட்டது. ஆஹா..அற்புதமான அறிக்கை என பாராட்டிய தொண்டியப்பா அவர்கள் அதை அதிமுகவின் புதிய பொதுச்செயலாளர் அண்ணன் பாக்கரிடம் கொடுத்து கையெழுத்துப் போடுங்கள்முன்னாள் பொதுச்செயலாளர் அம்மா அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஏதாவது ஒருபக்கத்தில் வைத்து பின் அடித்து விடலாம் என சொல்லவும்அதிமுக கழகத்தின் புதிய பொதுச்செயலாளர் அண்னன் பாக்கர் அவர்கள் அதிலே கையெழுத்திட,அதிமுகவின் புதிய தேர்தல் அறிக்கை தயாரானது. அதை முன்னாள் பொதுச்செயலாளர் அம்மா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் வைத்து பின் அடிக்கலாம் என நினைத்த போது அங்கே ஸ்டாப்ளரை காணவில்லை,ஸ்டாப்ளரை தேடுங்கப்பா என உத்தரவிட உடனே கழகத்தின் புதிய பொதுச்செயலாளர் அண்ணன் பாக்கர் அவர்கள்அதெற்கெல்லாம் நேரமில்லை. நாம் சமுதாய மக்களுக்கு இதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என சொல்லஉடனே செங்கி அவர்கள் எச்சிலைத் தொட்டு அந்த‌ பக்கத்தை ஒட்டினார்.
உடனடியாக இந்த செய்தியை நம் சமுதாய இதழான மக்கள் ரிப்போர்ட் இல்லை இல்லை சமுதாய மக்கள் ரிப்போர்டில் போட்டு விடலாம் என உடனடியாக செய்தி தயார் செய்யப்பட்டது. அந்த செய்தி இந்த வார சமுதாய மக்கள் ரிப்போர்ட் பத்திரிகையில் 2ஆம் பக்கத்தில் வந்திருக்கிறது. ஆனால் இவர்கள் எச்சில் தொட்டு ஒட்டி புதிதாக வடிவமைத்த அந்த தேர்தல் அறிக்கை யாருக்காவது கிடைத்தால் தயவுசெய்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள்.

இவர்கள் பதவிக்காக‌ எதுவேண்டுமானலும் செய்வார்கள்!!!


இந்த மானங்கெட்டவர்கள் பதவிக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். நேற்றைக்கு திட்டித்தீர்த்த அம்மா இன்றைக்கு அன்புச் சகோதரி ஆகிவிட்டார். இந்த கேவலப்பட்ட வாத்தியார் வெறும்சீட்டுக்காக அம்மாவிடம் அடிமமி சாசனம் எழுதிக்கொடுத்து விட்டார். பதவிக்காக எதுவேண்டுமானாலும் செய்யும் இந்த சமுதாய துரோகளையா நம் சமுதாயம் ஆதரிக்கப்போகிறது?இவர்களை விட இவர்களின் அடிவருடி பொய்யன் கூட்டத்தின் அட்டகாசம் அதிகரித்தேவிட்டது.


Wednesday, March 30, 2011

கடைசி நேரத்தில் வந்து சீன் போட்ட பொய்யன்


எல்லாம் ஒரு விளம்பரம் தான் என சொல்வார்கள். அதே போல அந்த மாதிரி தான் வந்திருக்கிறது பொய்யன் தளத்தில் பள்ளி மீட்ட செய்தியும்.
சென்னை பாரிமுனையில் உள்ள பள்ளியில் என்ன நடந்தது என்பதை ததஜ தளத்தில் விலாவாரியாக எழுதியிருக்கிறார்கள். அதாவது இந்த சம்பவம் திங்கள் கிழமை லுஹர் தொழுகை நேரம் துவங்கியது முதல் ததஜ சகோதரர்கள் களத்திலே நின்றார்கள். இந்தப் பள்ளி சுன்னத் வல் ஜமாத் முறைப்படி நடந்த தொழுகை நடந்த பள்ளி. எனவே பள்ளி பூட்டப்பட்ட தகவல் அனைத்து ஜமாத்தினருக்கும் தான் போயிருக்கிறது. ஆனால் யாருமே களமிறங்காத போது தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு இந்த செய்தியை கொண்டு வந்திருக்கிறார்கள். சமுதாய மானம் காக்க புறப்பட்டு கேவலப்பட்டு நிற்கின்ற தமுமுகவினர் தேர்தல் வேலைகளில் மட்டும் குறியாக இருப்பதால் இதை அவர்கள் துளியும் கண்டுகொள்ளவில்லை.
மற்ற ஜமாஅத்தினருக்கும் தகவல் போய் யாருமே வராத நிலையில் தான் போனா போகுது தவ்ஹீத் ஜமாத்காரனுக்கு சொல்லி விடுங்க என்று தகவல் கொடுத்திருக்கிறார்கள். பள்ளிவாசலுக்கு ஒரு பாதிப்பு என்றதும் உடனடியாக அந்தப் பகுதி பூக்கடை கிளை உறுப்பினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு,வடசென்னை செயலாளர் ஆலம்தென்சென்னை செயலாளர் கமர்தீன்மாநில செயலாளர் சாதிக் ஆகியோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அடுத்த நிமிடம் அவர்கள் அங்கே களத்தில் ந்ன்றார்கள். அப்போது எங்கே போனார் டிரஸ்ட் சமாத்தின் தலைவர்.
இரவு வரை காவல் இருந்து அதன் பின்னர் 11 மணிக்கு மேல் அவர்கள் பள்ளியை இடிக்க களமிறங்கிய போது எங்கே போனார் பொய்யன் சமாத்தின் தலைவர்அதெல்லாம் பரவாயில்லை மறுநாள் காலை அந்த இடம் கொந்தளிப்பாக இருந்ததே! அப்போது எங்கே போனார் இந்த சீன் போடும் ராசா! எஸ்டிபியை களத்திற்கு வந்தார்கள் என்பது உண்மை. அதேநேரம் பொய்யன் சமாத்தின் மாவட்டத்தலைவர்களும்தமுமுக சகோதரர்களும் வந்தார்கள் என்பது பச்சைப் பொய்.
அதெல்லாம் இருக்கட்டும் டிரஸ்ட்டு சமாத்தின் தலைவரின் அலுவலகம் ஏறத்தாழ( ஏற்கனவே ஏறத்தாழவுல வாங்கின அடியால ஒரு அரைலூசு ஒழிஞ்சே போயிடுச்சி) 3 கிலோ மீட்டர் இருந்தும் இரண்டு நாட்களாய் அங்கே நடக்கும் பிரச்சனைகள் தெரியாமலா இருந்தது இந்த சமாத்து டிரஸ்ட் தலைவருக்கு. மற்ற "வேலைகளுக்கெல்லாம்" கூடவே செல்லும் சமாத்து டிரஸ்ட் தலைவர் வலது இடது கரங்கள் எங்கே போனார்கள்ஆமாம். எல்லாம் முடிந்து செவ்வாய்கிழமை லுஹர் தொழுகை நேரத்தில் குண்டர்களை கைது செய்யச்சொல்லி ததஜ மாவட்டமாநில‌ நிர்வாகிகளும்SDPI தொண்டர்களும் சாலையிலே தொழுகை நடத்தி காவல்துறையை முற்றுகையிட்ட போது ஜெயா டிவி காரர்களுக்கு திடீரென இஸ்லாமியர்களின் மீது பாசம் பொங்கி அவர்கள் அதை கவரேஜ் செய்த போது அந்த இடத்தில் ஜெயா டிவிக்கு பேட்டி கொடுத்தது எஸ்டிபிஐ காரரும்வடசென்னை ததஜ செயலாளர் ஆலமும் தான்.
அப்போதெல்லாம் எங்கே போனார் என தெரியவில்லை இந்த டிரஸ்ட் தலைவர். பொதுமக்கள் கும்பலாக கூடி காவல்துறையினரோடு வாக்குவாதம் செய்து கொண்டிருபோது அங்கே வந்த‌ கருப்பு கலர் ஸ்கார்பியோ காரில் தான் சூனா பானா வந்து இறங்கினார். கையில் கேமிரா சகிதமாக இன்னிக்கு வின்டிவிக்கு அரைமணி நேர ஸ்லாட் கிடைத்துவிட்டது என மனதுக்குள் நினைத்து சீன் போட ஆரம்பித்தார். யாரோ கத்துகிறார்கள் என மக்கள் திரும்பிப்பார்க்க உடனே அவரோடு வந்த போட்டோ கிராபர் ஒரு தடவை கிளிக் செய்தார். ஆனால் பாக்கரை யாரும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. யாருமே கண்டுகொள்ளாத போது அங்கே ஏற்கனவே சமாதானக்கூட்டம் நடந்து கொண்டிருந்த சேரில் வந்து அமர்ந்தார். இது தான் நடந்தது.
இதைவிடுத்து என்னவோ இவர் தான் இரவு முழுவதும் கால் கடுக்க நின்றது போல கதை விடுகிறார். இவர்கள் கடும் பொய்யர்கள் என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி வேண்டும்.
“களத்திற்கு வந்து மக்களை கட்டுப்படுத்திய பாக்கருக்கு காவல் துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். நீண்ட நாளுக்குப்பின் பாக்கரின் பேச்சுக்கு த.த.ஜ.வினர் உற்சாகமாக தக்பீர் முழக்கம் இட்டதும்,அவரோடு கை குலுக்கி ஸலாம் சொன்னதும் நெகிழ்ச்சியான சம்பவமாக அமைந்தது.
இதெல்லாம் எந்த ஊரில் நடந்தது என்று சொன்னால் விசாரிக்க நன்றாக இருக்கும். வெலாசம்... வெலாசம்...
பள்ளியை மீட்டது யார் என்பதிலே யாருக்கும் பெருமையோ தலைக்கணமோ இல்லை. இருக்கவும் கூடாது. எல்லாப்புகழும் இறைவனுக்கே! ஆனால் கல்யாண‌ வீட்டில் இரவுமுழுவதும் காய்கறி வெட்டிபாத்திரம் கழுவி,விறகுவைத்து அடுப்பெரித்து அந்தப்புகையோடு கிடந்து செத்து மதியம் சாப்பாடு செய்து முடித்தவுடன்வெள்ளையும் ஜொல்லையுமா ஒருத்தன் வருவான். வந்தவன் சும்மா இருக்க மாட்டான். இரவு பூரா வேலை பார்த்தவர்களே சும்மா நிற்பார்கள். ஆனால் சரியா மதியம் 1 மணிக்கு வரும் இவன் ஆடும் ஆட்டம் தாங்காது. அதை எடுத்து இங்க வை. இதை எடுத்து அங்க வை. சமயல்னா அந்த புளி இருக்கே புளிஅதைக்கரைத்து அதில இஞ்சி பூண்ட போட்டுஅப்றம் கொஞ்சம் நெய்ய ஊத்திஎன்னப்பா சமயக்காரரே! நான் சொன்ன மாதிரி தானே எல்லாம் பண்ணி இருக்கே! என்னப்பா நான் சொல்றது சரிதானே! ஹூம்..சூனா பானா..உன்ன அசசிக்க முடியாதுடா.. கெளம்பு.. கெளம்பு..
உனக்கு ஏன் இந்த வேல?
குறிப்பு: பின்னூட்டம் இடும் பொய்யனின் அடிவருடிகள் அல்லது மாமாகாரர்கள் தங்களின் உண்மையான பெயரில் வந்து பின்னூட்டமிட்டால் வெளியிட நன்றாக இருக்கும். நீங்களே கள்ளத்தனம் செய்து கொண்டு நாங்கள் கள்ளத்தனம் செய்கிறோம் என்றால் உங்களை லூசு என்பார்கள். என்ன மிஸ்டர். செங்கி. ஓகே தானே!

Tuesday, March 29, 2011

கேடுகெட்ட தானம் தானே இது?


பொய்யன் "பெர்சனல்" உதவியாளர் தளத்திலும் அதை அப்படியே காப்பி எடுத்து மறுவாந்தி எடுக்கும் பொய்யன் தளத்திலும் இன்றைக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது.
"கேடுகெட்ட தானம் இது தானோ?" என்ற பெயரில் செய்தி வெளியாகி உள்ளது. அது என்ன கேடு கெட்ட் தானம் என்று நாமும் இன்று காலை முதல் எங்க ஏரியாவில் இருக்கும் அனைத்து தமிழாசிரியர்களையும்தமிழறிஞர்களையும் கேட்டுவிட்டோம். ஆனால் அவர்கள் இப்படி ஒரு வார்த்தையை நாங்கள் கேள்விப்பட்டதில்லை என சொல்லிவிட்டார்கள். அப்பறம் தான் தெரிந்தது அது கேடு கெட்ட தானம் இல்லையாம். கேடு கெட்ட தனமாம். எல்லாத்துக்கும் கால் போடுவது போல இதற்கும் கால் போட்டு விட்டார் "பெர்சனல்". கால் போடுவது தான் அவர்களுக்கு பிரச்சனையே இல்லையே!
செய்திக்கு வரலாம். அதாவது கழுதை கூட திங்க யோசிக்கும் மக்கள் ரிப்போட் பத்திரிக்கையில் வந்த ஒரு காணமல் போனவர் பற்றிய அறிவிப்பு செய்தியை நாம் கிண்டல் செய்து விட்டோமாம்
காணாமல் போனவர் பற்றிய செய்தி போடும் போது ஏம்பா இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்தவர்னு போட்டிருக்கியேன்னு நாம கேட்டால் அது ஒரு அடையாளமாம். ஒரு கூட்டத்தில் தெரியாத ஒருவரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்தவர் என எந்த அடையாளத்தை வைத்து கண்டுபிடிப்பது. ததஜவில் இருப்பர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது. அப்படி முளைத்திருந்தால் வேண்டுமானால் சொல்லலாம். இவர் தவ்ஹீத் ஜமாத்தில் இருந்தவர் என்று போட்டால் கூட்டத்தில் கொம்பு முளைத்தவர்களையா பார்த்து தேடலாம்.
இப்ப உதாரணத்திற்கு பாக்கர் காக்கா காணாமல் போய்விட்டார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு மக்கள் ரிப்போர்டில் எப்படி விளம்பரம் போடுவீர்கள்?
இப்படித்தான் போடவேண்டும்
இந்த மாதிரி போட்டால் லூசு என்பார்கள்
ஒரு நல்ல டாக்டரா பாருங்க மிஸ்டர். செங்கி.

Monday, March 28, 2011

அடாடா! இம்ச தாங்கமுடியலடா!!


அவதூறு பரப்புவதையும் அண்ணன் ஜமாத்துக்குப்பின்னாடி பூதக்கண்ணாடி கொண்டு அலைவதையுமே தங்களின் முழு நேரத்தொழிலாகக் கொண்டுள்ள மன்மதனும் மன்மதனின் சேனைகளும் குவைத்திலிருந்து கும்மியடிக்கும் சின்ன மன்மதனும் மறுபடி மறுபடி பலகேள்விகளைக் கேட்டு அவர்களுக்கு போதிய பொழுதுபோக்கு இல்லை என்பதை மீண்டும் நிறுபித்திருக்கிறார்கள். அவர்கள் கேட்கும் ஒவ்வொரு டப்பா கேள்விக்கும் ஏற்கனவே பதில் கொடுத்திருக்கிறோம். ஆனாலும் இவர்களின் சொத்தை வாதங்களை கொத்தி எடுத்தால் தான் நன்றாக இருக்கும் என்பதால் நாமும் வேலை மெனக்கெட்டு இவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டியிருக்கிறது.
திமுகவிற்கு அண்ணன் ஜமாத்தினர் திடீர் என ஆதரவு என்று பொய்யன்டிஜே டிரஸ்ட் தளத்திலும்எல்லா செய்திகளையும் தின்று மறுவாந்தி எடுக்கும் மன்மதனின் "பெர்சனல்" ஆலோசகர் தளத்திலும் செய்திகள் வந்திருக்கின்றன.
அண்ணன் ஜமாத்தைப் பொருத்தவரை எல்லாரிடமும் இருந்து 100% மாறுபட்டது என்பது அங்கிருக்கும் அடிப்பொடிகள் முதல் அடிவருடி சேணைகள் வரை எல்லாருக்குமே நன்கு தெரியும். இருந்தாலும் எதையாவது சொல்லி கிண்டி விட்டால் தான் அவர்களுக்கு பொழுது போகும் என்ற அடிப்படையில் தான் மறுபடி மறுபடி வாயைக்கொடுத்து புண்ணாக்கிக் கொள்கிறது இந்த பொய்யன் கூட்டம்.
திமுகவை ஆதரிக்க என்ன காரணம்? என அண்ணன் ஜமாஅத் தெளிவாக விளக்கி விட்டார்கள். ஆனாலும் நாங்க புடிச்ச நாயிக்கு 3 கால் தான் என விடாப்பிடியாக இயங்கும் இயக்கத்திற்கு அதையே பதிலாக கொடுத்து விட்டு,அவர்கள் கேட்டுள்ள எக்ட்ரா கேள்விகளுக்கு இங்கே நாம் விடையளிக்கிறோம்.
மத்தியில் இட ஒதுக்கீடு விஷயத்தில் தொடர்ந்து துரோகமிழைக்கும் காங்கிரஸ் விஷயத்தில் இவர்களின் நிலை என்ன?
மத்தியில் துரோகமிழைக்கும் காங்கிரஸ் துரோகி தான் என்பது தான் எங்கள் நிலையும். ரோஸ்டர் முறையிலு குழப்பம் இருக்கிறது என கருணாநிதியே சொல்லியும் கூடஅதெல்லாம் இல்லை ரோஸ்டர் முறை தான் சிறந்தது என நியாயப்படுத்தினார்களே உங்கள் சகாக்கள் அவர்களைப் போல இவர்கள் நியாயப்படுத்த மாட்டார்கள். மத்திக்கு காங்கிரஸ் ஓட்டுக் கேட்டு வரும் போது அவர்களுக்கு வேட்டுவைக்கும் செயல்திட்டங்கள் அவர்களிடம் தயாராகவே இருக்கிறது. ஆனால் முன்பைவிட குறைந்த‌ மைனாரிட்டியில் போட்டியிடும் கருணாநிதியை மட்டும் ஆதரித்தால் அவர் படுதோல்வி அடைய வாய்ப்பு இருப்பதால் கூட்டணிக்கு ஆதரவு என்ற முடிவை எடுத்துள்ளது ததஜ. கலைஞரை ஆதரிக்கும் போது அவரிடம் சென்று ஈஈஈஈஈஈஈஈ என இளிக்கவில்லை. அவர்களின் துரோகங்களை அவர்களிடமே பட்டியலிட்ட பிறகு தான் அவர்களிடம் இந்த நிலையே அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா இரு முஸ்லிம்களை மட்டுமே நிறுத்தியுள்ளார் என முறுக்கிக்கொண்ட இவர்கள்ஒரு முஸ்லிமை கூட நிறுத்தாத பாமக விஷயத்தில் நிலை என்ன?
அறிவுச்சுடர் அப்பாஸின் ஆற்றலைக்கண்டு வியப்பாகத்தான் இருக்கிறது. நாம ஏற்கனவே கேட்டதுமாதிரி உங்களில் யாருக்கும் கொஞ்சம் கூட சிந்திக்கும் அறிவையும்சுயமாக முடிவெடுக்கும் திறனையும் இறைவன் கொஞ்சம் கூட வைக்கவில்லையா என மீண்டும் கேட்கிறோம். பாமக என்பது முழுக்க முழுக்க வன்னியர்களுக்காக அமைக்கப்பட்ட ஜாதிய சங்கம்பின்னர் அது கட்சியாக மாற்றப்பட்டது. அந்த அமைப்பின் நோக்கம் முழுக்க முழுக்க வன்னியர்களின் இடஒதுக்கீடு சம்பந்தமாக துவக்கப்பட்ட கட்சியில் எப்படி முஸ்லீம்களுக்கு இடமளிப்பார்கள்முஸ்லீம் லீக்கில் மாற்றுமதத்தவரை ஏன் நிறுத்தவில்லை என கேட்க முடியுமாபாமகவில் முஸ்லீம்கள் உறுப்பினராக இருப்பதும்,முஸ்லீம்களுக்கு சீட்டை எதிர்பார்ப்பதும் முட்டாள் தனம் என்பது பைத்தியக்காரர்களுக்கே தெரியும் போது மன்மதன் ஜமாஅத்தினருக்கு தெரியாமல் போனது ஏனோநல்ல பிஞ்சி வெண்டக்காயை வாங்கி மோர்குழம்பு செஞ்சி சாப்பிட்டா அறிவு நல்லா வளருமாம். அதே மாதிரி தயிரில் சக்கரை கலந்து சாப்பிட்டாலும் நல்ல அறிவாற்றல் வருமாம்! பொய்யன் டிரஸ்டில் உள்ள எல்லாரும் இதை டிரை பண்ணலாமே!
* சிறுத்தைகள் மற்றும் இதர கட்சிகள் விசயத்தில் இவர்களின் நிலை என்ன?
சிறுத்தைகள் வேகமாக ஓடும். வண்டலூர் ஜூவில் இருக்கிறது. அதைப்போய் பார்ப்பதில் எவ்விதமான குற்றமும் இல்லை என்பது அவர்களின் நிலைபாடு.
* மமக மற்றும் முஸ்லிம் லீக் கட்சியை ததஜ கணக்கிலேயே எடுப்பது கிடையாது என்று எழுதிய இவர்கள்முஸ்லிம்லீக் விசயத்தில் எடுக்கும் நிலை என்ன?
ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு சொல்லிய பதில் இதற்கும் பொருந்தும்.
* முஸ்லிம் லீக்கை கணக்கிலெடுக்க இப்போது இவர்கள் முன் வந்தால் அதே நிலையில் உள்ள மமகவை மட்டும் புறக்கணிப்பது ஏன்?
முஸ்லீம் லீக் போன்ற கட்சிகளின் அடிமைத்தனத்தை ஒழிக்கப்போகிறோம் சமுதாய மானம் காக்கப்போகிறோம் என சொல்லி சந்தி சிரிக்கும் மமகவினரை ஒப்பிடும் போது முஸ்லீம் லீக் எவ்வளவோ பரவாயில்லை. அட இன்னமும் சொல்லனும்னாசுன்னத் ஜமாத்காரர்கள் விவரம் தெரியாமல் பேசுகிறார்கள் எனலாம்ஆனால் நீங்கள் எல்லாம் தெரிந்து கொண்டே அதை மறைத்துவிட்டு தவ்ஹீதை ஒழிக்க வேண்டும் என களமிறங்குகிறீர்கள். அதுபோலத்தான் லீக்குக்கும் மாமாவுக்கும் உள்ள வேறுபாடு
ஆகதனிநபர் ஜமாஅத்தின் முடிவுவேறு வழியின்றி எடுக்கப்பட்டதாகவும்,வலிமையான சமுதாய நலன் புறந்தள்ளப் பட்டதும் உள்ளங்கை நெல்லிக்கனியாக 'சிந்திப்பவர்களுக்குபுலப்படும்.

அப்படியா! இப்ப நான் கேக்குற கேள்விக்கு பதில அடிச்சிவிடுங்க பார்க்கலாம்
* இட ஒதுக்கீடு 7 சதவிகிதம் வேண்டும் என கேட்ட நீங்கள் திடீரென அந்தர்பல்டி அடித்து அமைப்பின் பெயர்கொடி என எல்லாவற்றிலும் ததஜவை காப்பியடித்தது போல இந்த தேர்தல் நிலைப்பாட்டிலும் ததஜவை காப்பியடித்த காரணம் என்னஒருவேளை 5 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்தால்நாங்கள் தான் கடிதம் எழுதினோம்நாங்கள் தான் போன் பேசினோம்நாங்கள் தான் எஸ்எம்எஸ் அனுப்பினோம் என சொல்லிக்கொள்ளும் உங்களையும் நம்பி சில அப்பாவிகள் நிற்கிறார்களே அவர்களின் நிலை என்ன?
* நீங்கள் அம்மாவுக்கு எழுதிய கடிதம் தவிர்த்து வேறு எந்த வகையில் அதிமுகவை தொடர்பு கொண்டீர்கள்?
எந்த கட்சி தருகிறதோ என சொன்ன நீங்கள் அதிமுகவிற்கு மட்டும் கடிதம் எழுதிய காரணம் என்னகலைஞருக்கு உங்களால் எழுதப்பட்டதாக நீங்கள் வெளியிடப்பட்டிருக்கும் கடித்ததில் தேதி இல்லையே! அது எப்படி ஒரு முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் தேதி இல்லாமல் போகும். அதை நீங்கள் அனுப்பினீர்களா அல்லது எழுதி நீங்களே வைத்துக்கொண்டீர்களா?
* அவ்வாறு எழுதிய கடிதத்திற்கு இன்று வரை எந்த விதமான பதிலோ தகவலோ வராத நிலையில் அதிமுகவுக்கு ஆதரவு என்ற நிலையை எடுப்பதற்கு என்ன காரணம்?
* அஇஅதிமுக உங்கள் கோரிக்கையான(?) 5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஒப்புதல் தெரிவித்து விட்டார் என சொல்லுக்கொள்ளும் நீங்கள் அதற்கான ஆதாரத்தை வெளியிடத்தயாராஎத்தனைமுறை உங்களை அதிமுக பிரமுகர்கள் சந்தித்தார்கள் அல்லது நீங்கள் எத்தனை முறை அவர்களைச் சந்தித்தீர்கள் என்ற விபரங்களை வெளியிடத்தயாராஅப்பறம் என்ன காரணத்திற்காக அதிமுகவை ஆதரிக்கிறீர்கள என விவரம் சொல்ல தயாரா?
(திருச்சி பிரச்சாரத்தில் சொல்வதற்கு முன்னரே நீங்கள் அம்மாவுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது குறிப்பிடத்தக்கது)
* அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு குறித்து எதுவுமே வெளிவராத நிலையில்இடஒதுக்கீடும் தேவையில்லை ஒரு மண்ணாங்கட்டியும் தேவையில்லை. இப்போதைய தேவை கழகத்தின் நிரந்தர தலைவரும்துணைப்பொதுச்செயலாளரும் எம்மெல்லே ஆனால் போதும் என வாய்மூடி மௌனித்து இருக்கும் மானங்கெட்ட மாமா கட்சியை நீங்கள் ஆதரிப்பது ஏன்?
* முஸ்லீம்களை திட்டமிட்டு கொன்று குவித்த விடுதலை பிலிகளை கேவலம் ஓட்டுப்பிச்சைக்காக ஆதரிக்கும் மாமாக்களும் அவர்களுக்கு விளக்குப்புடிக்கும் உங்களுக்கும் சிறுத்தைப் பற்றி பேச என்ன அறுகதை இருக்கிறது?
முஸ்லீம் வேட்பாளர்களை ஆதரிப்போம் என்று வாய்கிழிய சொல்லும் நீங்கள் ராமநாதபுரத்தில் போட்டியிடும் மமகவை விட வலுவான கட்சியான எஸ்டிபியை ஆதரிக்கப்போகிறீர்களா அல்லது மமகவுக்குத் தான் உங்கள் ஆதரவாகாரணம் மமகவிற்கு முன்பாகவே எஸ்டிபிஐ அங்கே மணுத்தாக்கல் செய்துவிட்டார்கள்.
ஏற்கனவே எஸ்டிபிஐ ராமநாதபுரத்தில் நின்றுவிட்டதால் முஸ்லீம் சமுதாயத்தின் நன்மை கருதி வாத்தியாரை வாபஸ் வாங்கச்சொல்வீர்களா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே உங்களால் பதில் தர முடியாது. ஏற்கனவே அப்துல் முஹைமீன் என்ற அரைலூசு குவைத் விவகாரத்தில் மூச்சித்தினறி கதவிடுக்கில் மாட்டிய எலியாய் தவிக்கும் போது அதே மாதிரி இன்னொரு எலி மாட்டிக்கொண்டு முழிக்கப்போகிறது

Friday, March 25, 2011

கேரளாவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா



பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா மற்றும் எஸ்.டி.பி.ஐ  எனும் பயங்கரவாத அமைப்பு நடத்திய வெறிச்செயல்களை நமது பிளாக்கில் ஒவ்வொன்றாக இனி காண்போம்.
1) எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இண்டியா பற்றி மக்கள் சொல்வதை கேளுங்கள்.


                   
                                                      THANKS TO  TNTJ KUMARI

எஸ்.டி.பி.ஐ யின் காட்டுமிராண்டித்தனம்



இது கேரளாவில் நடந்த சம்பவம். இஸ்லாத்தை பற்றி தவறாக எழுதிய ஒரு புரபஸருக்கு எதிராக கேரள முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். இதை கண்டித்து நாமும் நமது உணர்வு இதழில் எழுதி இருந்தோம். அவரை கைது செய்ய வேண்டும் என்று பிரச்சாரத்தையும் மேற்கொண்டோம். கேரள முஸ்லிம்கள் ஆக்ரோஷமாக போராடியதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார். சஸ்பண்ட் செய்யப்பட்டார். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த விரும்பிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அந்த புரபஸரை நடுரோட்டில் வைத்து கையை வெட்டி விட்டு ஓடி விட்டனர். இஸ்லாத்திற்காக இவர்கள் இதை செய்திருந்தால் வெட்டியவர்கள் தைரியமாக போலீசில் சரணடைந்திருக்க வேண்டும். இவர்கள் வழக்கம் போல கோழைகளைப் போன்று வெட்டிவிட்டு தலைமறைவாகி விட்டதால் அப்பாவிகள் கைது செய்யப்பட்டனர். நபியை இழிவு படுத்தியவர்களை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒருவரை கொலை செய்யவோ கைகளை வெட்டவோ மார்க்கம் நம்மை அனுமதிக்கவில்லை. அப்படி அனுமதி இருக்குமானால் இன்றைக்கு நம்மை தாக்கியவர்களின் கைகளை நாமும் அவர்களது உடலில் விட்டு வைத்திருக்க மாட்டோம்.




பொன்னாடை போர்த்தும் பன்னாடைகள்


நாகர்கோவிலில் ஜாக் அமைப்பின் ஆதரவுடன் நடக்கும் இஸ்லாமிக்சானல் என்ற கேபிள்டிவியில் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சிதொகுப்பாளராகவும் இருப்பவர் ஐதுரூஸ்ஃபிர்தௌஸி.
சமீபத்தில் பெரியார்தாசன் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சிஇஸ்லாமிக் சானல் சார்பாகநாகர்கோவிலில் நடத்தப்பட்டதுஅந்தநிகழ்ச்சியின் இறுதியில் வாழ்த்துரைவழங்கியவர்களுக்குபொன்னாடை(?!) போர்த்தப்பட்டது.
டிவி சானலின் உரிமையாளர் இன்னாருக்கு பொன்னாடைபோர்த்துவார் என ஐதுரூஸ்ஃபிர்தௌஸி தொகுத்து வழங்க ஜாக்பேச்சாளர் எம்.சி.முஹம்மதுஎஸ்.கமாலுதீன் மதனி,ஃபிர்தெஸியாகல்லூரி முதல்வர் செய்யது முஹம்மது மதனிதமுமுக மாநிலசெயற்குழுஉறுப்பினர் காதர் மைதீன் என பலருக்கு அவர்பொன்னாடை போர்த்தி கைகுலுக்கினார்.
இறுதியாக வாழ்த்துரை வழங்கிய -------- என்ற ஆலிமாவுக்குபொன்னாடை போர்த்துவார்என ஐதுரூஸ் ஃபிர்தௌஸி அறிவிக்கடிவி உரிமையாளர் தனது கையில் ஆடையை வைத்துக்கொண்டுஆலிமாவைத் தேட நல்ல வேளையாக அவர் உள்ளே மறைந்துகொண்டார்.இல்லையெனில் பலருக்கு மத்தியில் அந்த ஆலிமாவுக்குஅவர் பொன்னாடை போர்த்திஇருப்பார்ஒரு சிறுமியிடம் அந்தஆடை கொடுக்கப்பட்டது.
மதீனாவில் படித்த ஜாக் அறிஞர்கள் கூட இந்த புகுழுக்கும்பொன்னாடைக்கும் அடிமையாகி விட்டனர்.
ஜாக் தாயிகள் அனைவரும் அந்த நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டுதானிருந்தனர்.

கமாலுத்தீன் மதனிக்கு பொன்னாடை போர்த்தும் கண்கொள்ளாக் காட்சி



ஸையித் முஹம்மது மதனிக்கு பொன்னாடை போர்த்தும் காட்சி



இன்னொரு ஜாக் மவலவிக்கு பொன்னாடை



ஆலிமாவுக்கு பொன்னாடை போர்த்த காத்திருக்கும் கேபிள் டிவி உரிமயாளர்



அரசியல்வாதிகளுடன் போட்டி போட்டு புகழ் போதையில் தட்டழியும் இவர்களையும் குர் ஆன் ஹதிஸ் பேசுவோர் என்று நீனைத்து ஆதரவளிப்போர் சிந்தியுங்கள்
நன்றி: onlinepj.com

Thursday, March 24, 2011

இஸ்லாமிய இன துரோகி ஜெயலலிதா - ஹைதர் அலி பரபரப்பு பேட்டி


முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருப்பது போல காட்டிக் கொண்டு பொய்களைப் புனைந்து பேசி வருகிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாள ஹைதர் அலி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ஹைதர் அலி செய்தியாளர்களிடம் கூறுகையில்குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை மதவாத பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்து மக்கள் மன்றத்தில் அம்பலமாகிப் போன ஜெயலலிதாஇப்போது முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல அறிக்கை வெளியிட்டுஅதிலும் வழக்கம் போலவே பொய்களைப் புனைந்துள்ளார்.
இஸ்லாமிய சமயக் கோட்பாடுகள் பற்றியும்,முஸ்லிம்களின் உணர்வுகள் பற்றியும் ஜெயலலிதா நரேந்திர மோடியின் அரசியல் தோழி குற்றம் சாட்டியுள்ளார்.
அறிவார்ந்த விமர்சனத்திற்கும்ஜெயலலிதாவிற்கும் அறவே சம்பந்தம் இருக்காது என்பதை அவரது இந்த அறிக்கை அறுதியிட்டு உறுதி செய்துள்ளது.
பாபர் பள்ளிவாசலை இடிக்க தமிழ்நாட்டிலிருந்து ஆட்களை அனுப்பிய ஜெயலலிதா,
ஜெயலலிதாகனவுக் காட்சிகளிலும் கற்பனைக் காட்சிகளிலும் நடித்தவர். அந்த முன் அனுபவம் இப்போது அவருக்கு கைகொடுக்கிறது போலும்.
இறையில்லமான பாபர் பள்ளிவாசலை இடிக்க ஆதரவு கொடுத்தவர் ஜெயலலிதா என்பதும், 1992ம் ஆண்டில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் பங்கேற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் பாபர் பள்ளிவாசலை இடிக்கும் கரசேவையை ஆதரித்த ஒரே முதலமைச்சர் இவர்தான் என்பதும் நாடறிந்த உண்மை.
மதத்தின் புனிதத்தன்மையை பாழ்படுத்துவது பற்றி ஜெயலலிதா பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்குச் சமமானது.
இஸ்லாமிய இறைக் கோட்பாட்டுத் தத்துவம் பற்றி ஜெயலலிதா கூறியுள்ளார். திரைக்கோட்பாடுதில்லானா நாடகங்கள் பற்றித் தெரிந்த அவருக்கு இஸ்லாமின் இறைக் கோட்பாடு பற்றி என்ன தெரியும்இஸ்லாம் இறைக்கோட்பாட்டை அவர் படித்திருந்தால் முதலில் இதுபோன்ற அறிக்கையை வெளியிட்டிருக்கவே மாட்டார்.
வாக்குறுதிகளைப் பற்றி ஜெயலலிதா வாய்க்கூசாமல் பேசுகிறார். 1999ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில்...
நான் ஒரு தவறு செய்துவிட்டேன். அதைத் தவறு என்று ஒத்துக்கொள்ளும் துணிவு எனக்குண்டு. பாஜகவுடன் நான் தேர்தல் உறவு வைத்ததுதான் வாழ்வில் நான் செய்த பெரும் தவறு. எதிர்காலத்தில் ஒருபோதும் பாஜகவுடன் உறவு வைத்துக் கொள்ளவே மாட்டேன் என்று மாநாட்டில் கலந்து கொண்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மத்தியில் வாக்குறுதி அளித்த ஜெயலலிதா,அதன்பிறகு பாஜகவுடன் எப்படியெல்லாம் உறவாடினார் என்பதை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை.
குஜராத்தில் 2002ல் நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலைகள் நரேந்திர மோடியின் ஆசியுடனேயே நடைபெற்றது என்று சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்த குஜராத் உள்துறைச் செயலாளர் கூறியுள்ளார்.
ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்துலட்சக்கணக்கான முஸ்லிம்களை சொந்த நாட்டில் அகதிகளாக்கிய மாபாதக நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தனி விமானத்தில் பறந்து சென்றுபூச்செண்டு கொடுத்து வாழ்த்தியவர்முஸ்லிம்களின் உணர்வுகள் குறித்துப் பேசுவது வேதனையான வேடிக்கைதான்.

2001
ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்காலம் முடியும்வரை முஸ்லிம்களை ஏமாற்றிவிட்டார்.
ஆந்திர முதல்வர் டாக்டர் ராஜசேகர ரெட்டிமுஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதைக் கடுமையாக கண்டனம் செய்துஎனது தலைமையில் முஸ்லிம்கள் அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டத்திற்கு ஆளானவர் ஜெயலலிதா.
ஒரு முன்னாள் முதல்வர்தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் பொறுப்பற்ற முறையில் அறிக்கை வெளியிட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இனிமேலாவது அவர் பொறுப்புடன் நடந்து கொள்வார் என்று நம்புகிறேன் என்றார் ஹைதர் அலி.
- thatstamil
அய்யா தான் சமுதாயக்காவலர் எனச்சொல்லிக்கொண்டு இருந்த போது தட்ஸ்தமிழுக்கு நிரந்தர பொதுச்செயலாளர் அளித்த பேட்டி

Wednesday, March 23, 2011

தவ்ஹீத் சகோதரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ABCD (SDPI PFI etc..) ரவுடி கும்பல்


ஜிஹாத் எனும் பெயரால் இளைஞர்களை வழிகெடுத்து வரும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியாவின் போக்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் குமரி மாவட்ட நிர்வாகிகள் நோட்டீஸ் விநியோகம் செய்து வந்தனர்.
அந்த நோட்டீஸில் உள்ள உண்மைச் செய்திகள் மக்களுக்கு சென்று விட்டால் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியா, எஸ்.டி.பி.ஐ என பலர் பெயர்களில் உலா வரும் இவர்களின் சுயரூபம் வெளிப்பட்டு விடுமென்பதால் வெலவெலத்துப் போன அவர்கள் டி.என்.டி.ஜே நிர்வாகிகளை கொலை செய்ய திட்டமிட்டு நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
நோட்டீஸ் விநியோகிக்க சென்றவர்கள் இரண்டே இரண்டு பேர் தான். இரண்டு பேர் மட்டும் தான் நோட்டீஸ் கொடுப்பதை அறிந்து கொண்ட இந்த ரவுடிகள் கூட்டமாக சேர்ந்து இருவரை கோழைத்தனமாக தாக்கி உள்ளனர்.
விமர்சனத்தை விமர்சனத்தால் எதிர்கொள்ள தயங்கும் இந்த கோழைகள், அந்த இரண்டு நிர்வாகிக்ளையும் அடித்து உதைத்த பின்னர் இறந்து விட்டதாக நினைத்தார்களோ அல்லது இறந்துவிட்டால் பிரச்சனையாகிவிடும் என நினைத்தார்களோ அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டனர்.
கொலைவெறி தாக்குதலுக்குள்ளான இரண்டு முஸ்லிம் சகோதரர்களும் நாகர்கோவில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிட்சை பெற்று வருகின்றனர். இறைவனின் கருணையால் ஜாஃபர், நாசர் என்ற அவர்கள் இருவரின் உயிருக்கு ஏதும் பாதிப்பு ஏற்படவில்லை. அல்ஹம்துலில்லாஹ்!
ஆனால் கொலைமுயற்சியில் ஈடுபட்ட ரவுடிகளான பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இண்டியாவின் கொள்கைவாதிகள் இப்போது தலைமறைவாகி விட்டனர்.
டி.என்.டி.ஜே நிர்வாகிகள் வெளியிட்ட அந்த நோட்டீஸில் ‘இவர்கள் முஸ்லிம் சகோதரன் என்று கூட பார்க்காமல் அடிப்பார்கள், தாக்குவார்கள். ஆனால் பாதிப்படைந்தவர் புகார் கொடுத்தால் அதை எதிர்கொள்ள திராணியின்றி தலைமறைவாகி விடுவர்’ என்று போடப்பட்டிருந்தது. அதை இவர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.
இவர்களின் இந்த கீழ்த்தரமான செயலினால் குமரி மாவட்ட முஸ்லிம்கள் ‘சொந்த சகோதரனை கொல்ல துடிக்கும் இவர்கள் ரவுடிகக் கும்பல் தான் என்று உணர ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் பிற மாவட்டங்களில் முஸ்லிம்களை கொல்வதும் அடித்து உதைப்பதும் அராஜக செயல்கள் செய்வதும் குமரி மாவட்ட முஸ்லிம்களுக்கு இதுநாள் வரை தெரியாமல் இருந்தது.
இந்த சம்பவத்தின் மூலம் இவர்கள் முஸ்லிம்களுக்கு பகிரங்க எதிரிகள், இவர்கள் தீவிரவாதிகள் தான் என்பதை ஊருக்கு காண்பித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!
குறிப்பு : கொலைவெறி தாக்குதலுக்குள்ளாகி மூன்று நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல்நிலை சற்று தேறிவரும் அந்த இரண்டு சகோதரர்களுக்காக துஆ செய்யவும்.

சாயம் வெளுக்கும் மமக‌


கொஞ்சம் கொஞ்சமாய் வெளுக்க ஆரம்பித்து விட்டது மமகவின் சாயம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக‌ அரசியலில் இறங்கமாட்டோம் என தமுமுக வழி களம் கண்டவர்கள் இன்றைக்கு சைத்தானின் ஆசையில் மதிமயங்கி எப்படியாவது ஒரு பதவியைப் பிடித்து விடவேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக தாங்கள் பூசியிருந்த இஸ்லாமிய சாயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே எஸ்டிபிஐ அமைப்பு தங்களுக்கு கொள்கை குத்துப்பாடல்களை அமைத்து பீப்பி ஊதி ஊர்வலம் வருவதைப் போல இவர்களும் தங்களுக்கென ஒரு கொள்கைப்பாடல்களை வடிவமைத்து கொஞ்சமாக தங்களின் முகத்திரையை விளக்கினார்கள்.
கலைஞரிடம் 2 சீட்டு வாங்குவதற்காக அவருக்கு நன்றி அறிவிப்பு என்ற பெயரில் பாராட்டு விழா நடத்தி அவருக்கு சோப்பு போட்டு வக்ஃப் வாரியத்தையும் வளைத்துக்கொண்டு அம்மா தான் இஸ்லாமியர்களின் துரோகி,மோடியின் தோழி என பேட்டி கொடுத்து வந்தவர்கள் கடைசியாக 2 சீட்டு கொடுக்காமல் கலைஞரால் கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளப்பட்டு நிர்கதியாக நின்ற போது தான் அவர்களுக்கு நினைவுக்கு வந்ததாம் கலைஞரின் இஸ்லாமிய துரோகங்கள்.
பின்னர் அம்மா செய்த துரோகங்கள் எல்லாம் மறந்து போய் இன்றைக்கு அன்புச்சகோதரி ஆகிவிட்டார் அம்மா. அன்றைக்கு சமுதாயக் காவலராக இருந்த கலைஞர் இன்றைக்கு சமுதாய துரோகி ஆகிவிட்டார். கலைஞர் தான் கைது செய்தார்கலைஞரின் துரோக வரலாறு என ஏகப்பட்ட செய்திகளை தங்களின் அதிகாரப்பூர்வ தளத்திலும்பத்திரிகையிலும் இப்போது போட்டு கிழிகிழி என கிழிக்கிறார்கள். கலைஞர் செய்ததாக இவர்கள் சொல்லும் துரோகம் அனைத்தும் இவர்கள் நன்றி அறிவிப்பு மாநாடு நடத்தி பாராட்டு விழா நடத்தி பல்லைக்காட்டியதற்கு முன்பேகலைஞர் தான் சமுதாயக் காவலர் என ஊர் ஊராய் போஸ்டர் ஒட்டி பேனர் வைப்பதற்கு முன்பே நடந்த நிகழ்ச்சிகள் தானே! அதெல்லாம் அப்போது எப்படி மறந்து போனதுஇரண்டு சீட்டு தரவில்லை என்றதும் இஸ்லாமிய இன காவலர் என உங்களால் அடையாளம் காணப்பட்ட கலைஞர் இப்போது துரோகியாகிவிட்டார். துரோகியாகக் காட்டப்பட்ட அம்மா இன்றைக்கு அன்புச்சகோதரி ஆகிவிட்டார்.
இப்படியே இவர்களின் பச்சை அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்து இன்றைக்கு முழுமையான அரசியல்வாதிகளாக ஆகிவிட்டார்கள். இவர்கள் தேர்தல் செலவுகளைச் செய்வதற்கு அப்பாவி மக்களிடம் கட்டாய வசூல் செய்ய உத்தரவிட்ட இந்த கட்டப்பஞ்சாயத்துக் கழகம் இப்போது நிர்ணயித்து இருக்கும் தொகை ஒரு கிளைக்கு குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாய். இதை கழகத்தின் நிரந்தரத்தலைவரே நிதி தாரீர் என்ற பெயரில் அவரின் கழக அப்பாவித்தொண்டர்களுக்கு பகிரங்கமாக தெரிவித்து விட்டார். பாவம் இவர்கள்! பத்தாயிரத்துக்கு குறையாமல் நிதி சேகரிக்க சாதாரண கிராமப்புற கிளைகள் என்ன செய்வார்கள்?.
இந்த இடியைத் தாங்கிய மமகவின் அப்பாவித்தொண்டர்களின் இதயங்களுக்கு மேலும் ஒரு பேரிடியாக இன்றைக்கு வந்து விழுந்து மமக தலைவர்களின் சாயத்தை முழுமையாக நீக்கிய செயல். அது அவர்கள் தளத்தில் வெளியிட்டுள்ள தலைவர்களின் ஆளுயர பிரம்மாண்ட போஸ்கள். இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை. அப்பாவி மமகவினரே! அவர்கள் போட்டோக்களை வெளியிட்டு உங்களை பிரம்மாண்ட பேனர் வைக்குமாறு பணித்திருக்கிறார்கள். இதோ இவர்கள் தங்களுடைய முழு கட் அவுட்களை வைக்க, சொல்லாமல் சொல்லி வந்துள்ள புகைப்படங்களை அப்படியே கட் அவுட்டாக வைக்காமல் நாமும் கொஞ்சம் அதிலே வசனம் கலந்து வைத்தால் நன்றாக இருக்கும் என்ற சிந்தனையின் விளைவு தான் கீழ்கண்ட வசனப்படங்கள். அப்பாவி மமக தொண்டர்கள் இதையும் கட் அவுட் வைக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.












 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons