Friday, March 25, 2011

எஸ்.டி.பி.ஐ யின் காட்டுமிராண்டித்தனம்



இது கேரளாவில் நடந்த சம்பவம். இஸ்லாத்தை பற்றி தவறாக எழுதிய ஒரு புரபஸருக்கு எதிராக கேரள முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். இதை கண்டித்து நாமும் நமது உணர்வு இதழில் எழுதி இருந்தோம். அவரை கைது செய்ய வேண்டும் என்று பிரச்சாரத்தையும் மேற்கொண்டோம். கேரள முஸ்லிம்கள் ஆக்ரோஷமாக போராடியதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார். சஸ்பண்ட் செய்யப்பட்டார். ஆனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கலவரத்தை ஏற்படுத்த விரும்பிய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அந்த புரபஸரை நடுரோட்டில் வைத்து கையை வெட்டி விட்டு ஓடி விட்டனர். இஸ்லாத்திற்காக இவர்கள் இதை செய்திருந்தால் வெட்டியவர்கள் தைரியமாக போலீசில் சரணடைந்திருக்க வேண்டும். இவர்கள் வழக்கம் போல கோழைகளைப் போன்று வெட்டிவிட்டு தலைமறைவாகி விட்டதால் அப்பாவிகள் கைது செய்யப்பட்டனர். நபியை இழிவு படுத்தியவர்களை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஒருவரை கொலை செய்யவோ கைகளை வெட்டவோ மார்க்கம் நம்மை அனுமதிக்கவில்லை. அப்படி அனுமதி இருக்குமானால் இன்றைக்கு நம்மை தாக்கியவர்களின் கைகளை நாமும் அவர்களது உடலில் விட்டு வைத்திருக்க மாட்டோம்.




0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons