Thursday, November 29, 2012

அதிரையில் பயங்கரம்! கல்லூரி மாணவன் படுகொலை!!


அதிரையில் பயங்கரம்! கல்லூரி மாணவன் படுகொலை SDPI சேர்ந்தவர் வெறிச்செயல்!!

அதிரை கீழத்தெருவில் வசித்து வரும் முஹம்மது நூஹு அவர்களின் மகன் ஹாஜா [வயது 20], என்ற சகோதரனை கத்தியால் குத்தி படுகொலை செய்த SDPI சேர்ந்த சமுதாய துரோகி!!

23-11-2012 மாலை சுமார் 5.45 மணியளவில் காட்டுப்பள்ளி தர்ஹா அருகே தனியாக நின்றுகொண்டு இருந்த ஹாஜாவை முதுகுக்கு பின்னால் சென்ற காதர் முஹைதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டான்.

இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவனை அருகில் நின்றவர்கள் அரசு மருத்துவனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கே போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவர்களால் முதலுதவி மாத்திரம் செய்யப்பட்டு மேற்கொண்டு சிகிச்சையளிக்க தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

உடலில் பல்வேறு இடங்களில் பலமாக காயம் ஏற்பட்டதால் மருத்துவர்களின் சிகிச்சைகள் பலனின்றி 24-11-2012 அதிகாலை சுமார் 4.45 மணியளவில் தஞ்சையில் உயிர் பிரிந்தது பிரத பரிசோதனையடுத்து உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறிப்பு: கடந்த ஆண்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை Y. அன்வர் அலி அவர்களை வீடு புகுந்து தாக்கிய இந்த ABCD அமைப்பை சேர்ந்தவர்களில் ஐந்து பேரில் ஒருவன் தான் இந்த கொலையாளி காதர் முஹைதீன் எனபது குறிப்பிடத்தக்கது!


முஸ்லிமை கொலை செய்பவனுக்கு நிரந்தர நரகம்!

நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் 4:93

நன்றி: உணர்வு வார இதழ்.


படுகொலை செய்யப்பட்ட ஹாஜா

அதிரையில் இந்த வன்முறையை கண்டித்து ஒட்டபட்டு இருக்கும் போஸ்டர்

Tuesday, November 13, 2012

இது என்ன கோயில் பூசாரிகளை போல்




இது என்ன கோயில் பூசாரிகளை போல் முன்னாள் படையல்களை வைத்துக்கொண்டு காட்ச்சியளிக்கின்றனர்.. இவர்கள் யார்?.. அல்லாஹ்வுக்கே இடைத்தரகர்களா நஹூதுபில்லாஹ்

வழிக்கெட்ட தரீக்க மதத்தை விட்டும் முஸ்லீம் உம்மத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக

Friday, November 2, 2012

காணவில்லை...காணவில்லை.. முகமூடியை காணவில்லை...


காணவில்லை...காணவில்லை.. முகமூடியை காணவில்லை... ஆம் ஜாக்கின் முகமூடியை தான் காணவில்லை.. கண்டெடுத்தவர்கள் சென்னை புதுபேட்டையில் அமைந்திருக்கும் ஜாக் தலைமை அலுவலகத்தில் ஒப்படையுங்கள்.

இத்தனை நாள் தவ்ஹீத் என்ற முகமூடி போட்டு கொண்டு, இந்த பேரணி ஊர்வலங்கள் முஸ்லிம்களின் இரத்தங்களை ஓட்டும், முஸ்லிம்களின் சொத்துக்களை அழிவில் கொண்டு சேர்க்கும். எனவே, இவைகள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவை அல்ல என்று வியாக்கியானம் பேசி நாம் நடத்தும் உரிமையை மீட்டெடுக்கும் போராட்டங்களை விமர்சனம் செய்வதோடு மட்டுமில்லால் அதில் கலந்து கொள்ளும் எம் சகோதரிகளையும், தாய்மார்களையும் கொச்சையாக மோசமாக பேசி பித்னா செய்வதையே தொழிலாக கொண்டவர்கள் இன்று குமரியில் கிறிஸ்த்தவர்களுடன் சேர்ந்து மார்க்கம் அனுமதிக்காத உண்ணா விரத போராட்டம் (பார்க்க : தினத்தந்தி குமரி எடிசன் 14.09.2012), 



தென்காசியில் 28.09.2012 அன்று மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் (பார்க்க போஸ்டர்) செய்து அவர்களுடைய முகமூடியை தொலைத்து விட்டார்கள். இனி எந்த முகமூடி போட்டு ஊரை ஏமாற்றுவார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஜாக் சகோதரர்களே சிந்திக்க மாட்டீர்களா?

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (அல்குர்ஆன் - 61:2,3)

சிந்தியுங்கள் மக்களே..




இஸ்லாத்தின் பேரில் நடக்கும் இந்த கூத்து எங்கள் மாவட்டத்தில் நடக்குகின்றது என்று நினைக்கும் பொழுது ரொம்பவே வேதனையாக உள்ளது.
இவர்கள் நடத்தும் சந்தனகூட்டிற்கு முஸ்லிம்கள் வருவது குறைந்து போவதினால் இது மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வா சைத்தான் பக்கம் என்று அழைக்கின்றது.

இதை விட கொடுமை என்னவென்றால் கபூர் வணங்கிகள் வெளிநாட்டில் இருந்து டிக்கெட் போட்டு விமானம் ஏறி வந்து வழிகேட்டிற்கு புக் பண்ணிட்டு போவாங்க.

சிந்தியுங்கள் மக்களே..!! முஸ்லிம்களாகிய நாம் முட்டாள்கள் இல்லை.சிந்திப்பீர் ..!! இணைவைப்பில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்.நீங்கள் இந்த வழிகேட்டில் கலந்துகொண்டாலே வழிகேட்டிற்கு ஆதரவு கொடுப்பது போல்தான்.அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து தப்பித்துகொள்ளுங்கள்..
 —

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons