Sunday, March 17, 2013

நிறைவேறியது இலங்கைக்கு எதிரான தீர்மானம்.........!!



அப்பாவி மக்கள் மீது இலங்கை ராணுவம் இறுதிகட்டப் போரில் நடத்திய அட்டூழியங்களை கண்டித்து ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து ஓட்டளித்த செய்தி அறிந்த அதேவேளையில், 

விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் குறித்து, இங்குள்ள முஸ்லிம் அமைப்புக்கள் குரல் கொடுக்கவில்லை என இலங்கை முஸ்லிம்கள் வேதனை தெரிவித்துள்ளனர்,

புலிகள் கொலைவெறியும், இரத்த தாகமும் பிடித்தவர்கள் இலங்கையின் பல பிரதமர்களை முக்கிய அதிகாரிகளை கொன்றுள்ளனர் இலங்கையில் அப்பாவி புத்த மக்கள் வாழும் பலப் பகுதிகளில் குண்டுகளை வீசி கொன்றவர்கள், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள்,

1990 ஆகஸ்டு 1ம் தேதி அக்கரைப் பற்று கிராமத்தில் 40 முஸ்லீம்கள் கைகள் பிணைத்து கட்டப்பட்டு தலையில் சுட்டு வீழ்த்தியவர்கள்.

அதே ஆகஸ்டு 2ம் தேதி அதே பாணியில் மஜீத் புரத்தில் 15 முஸ்லீம்களை சுட்டு வீழ்த்தியவர்கள்.

அதே ஆகஸ்டு 3ம் தேதி காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்ட 103 முஸ்லீம்களை குருவிகளை சுடுவதுபோல் சுட்டு வீழத்தியவர்கள்.

தொடர்நது இடைவிடாமல் மூன்று நாட்கள் கொலைவெறி புலிகளால் நடத்தப்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் மீதான வெறியாட்டததை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

1985ல் தொடங்கி இலங்கை ராணுவத்தினரின் கிடிக்கிப் படிக்குள் புலிகள் சிக்கும் வரை அவர்களால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

1987ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி யாழ்பானத்திற்குள் நுழைந்து முஸ்லீம்களுக்கு 2 மணிநேரம் மட்டும் கால அவகாசம் கொடுத்து உடுத்திய ஒருத் துணியுடன் கையில் ஐம்பது ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேற்றியவர்கள். 1990ல் மன்னார் முஸ்லீம்களை இதே பாணியில் வெளியேற்றியவர்கள்.

இதெல்லாம் அமெரிக்காவுக்கு தெரியாமலில்லை, இலங்கைக்கு எதிராக ஓட்டளித்த நாட்டவருக்கும் தெரியாமலில்லை, தமிழ்நாட்டு வை.கோ.வுக்கும் தெரியாமலில்லை, சீமானுக்கும் தெரியாமலில்லை. கலைஞருக்கும் தெரியாமலில்லை, ஆனாலும் இனம் இனத்துடன் இணைந்தது.

இவர்களுக்கு உள்ள இன உணர்வும் கூட புலிகளுக்குக் கிடையாது அவர்களிடத்தில் ஊட்டப்பட்டது எல்லாம் கொலைவெறியும், இரத்த தாகமும் தான் அவர்களை எதிர்த்தால் யாராக இருந்தாலும் வேட்டையாடி விடுவார்கள் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து புலிகள் அமைப்பை நிறுவிய எம்.ஜி.ஆர் எதிர்த்திருந்தாலும் கூட சுட்டுத் தள்ள முயற்சி எடுத்திருந்திருப்பார்கள் இவர்களின் குணத்தை அறிந்து பணம் போனாலும் பரவா இல்லை தலை தப்பினால் போதும் என்று எம்.ஜி.ஆர் சும்மா இருந்து விட்டார்.

தமிழீழ விடுதலை எனும் ஒரே சிந்தனையில் செயல்பட்ட மாத்தையா, சபாரத்தினம், பத்மநாபா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் என்று இந்த காட்டுமிராண்டிகளால் படுகொலை செய்யப்பட்டோர் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

அதனால் இந்த ஆதரவு தீர்மானத்தால் கொலைவெறிப் பிடித்த இந்த காட்டுமிராண்டிகள் மீண்டும் வளர மட்டார்கள் என்பதற்கு உலக நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு எதிராக திரட்டிய அமெரிக்கா உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்.

இது தான் அப்பாவி தமிழர்கள் இலங்கையில் மீண்டும் நிம்மதியாக வாழ வழி வகுக்கும்.

புலிகள் மீண்டும் வளர விடாமல் தடுப்பதற்கான திட்டத்தை வகுத்து இலங்கை அரசிடம் ஐ.நா. கொடுக்க வில்லை என்றால் மீண்டும் இலங்கை இரத்த பூமியாவதை எத்தனை நூரு அமெரிக்கா தலையிட்டாலும் தடுக்க முடியாது

Sunday, March 10, 2013

எஸ்.டி.பி.ஐ அமைப்பினரின் சமுதாய(?) பணி




கோவை கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. கோவில் அருகில் செயல்பட்டு வந்த இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சமுதாயத்திற்காக பாடுபடுவோம் என்று ஒட்டு பொறுக்கிய (எந்த சமுதாயத்திற்கு?) எஸ்.டி.பி.ஐ-யினர் கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் விளைவாக இன்று டாஸ்மாக் கடை அகற்றபட்டதாம். இதற்காக இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் காவல்துறைக்கு நன்றி தெரிவித்து கோவை முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இத்தகைய கொள்கைக் (?) குன்றுகளிடமிருந்து வல்ல இறைவன் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons