Sunday, March 17, 2013

நிறைவேறியது இலங்கைக்கு எதிரான தீர்மானம்.........!!



அப்பாவி மக்கள் மீது இலங்கை ராணுவம் இறுதிகட்டப் போரில் நடத்திய அட்டூழியங்களை கண்டித்து ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து ஓட்டளித்த செய்தி அறிந்த அதேவேளையில், 

விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் குறித்து, இங்குள்ள முஸ்லிம் அமைப்புக்கள் குரல் கொடுக்கவில்லை என இலங்கை முஸ்லிம்கள் வேதனை தெரிவித்துள்ளனர்,

புலிகள் கொலைவெறியும், இரத்த தாகமும் பிடித்தவர்கள் இலங்கையின் பல பிரதமர்களை முக்கிய அதிகாரிகளை கொன்றுள்ளனர் இலங்கையில் அப்பாவி புத்த மக்கள் வாழும் பலப் பகுதிகளில் குண்டுகளை வீசி கொன்றவர்கள், இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொன்றவர்கள்,

1990 ஆகஸ்டு 1ம் தேதி அக்கரைப் பற்று கிராமத்தில் 40 முஸ்லீம்கள் கைகள் பிணைத்து கட்டப்பட்டு தலையில் சுட்டு வீழ்த்தியவர்கள்.

அதே ஆகஸ்டு 2ம் தேதி அதே பாணியில் மஜீத் புரத்தில் 15 முஸ்லீம்களை சுட்டு வீழ்த்தியவர்கள்.

அதே ஆகஸ்டு 3ம் தேதி காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளியில் இஷாத் தொழுகையில் ஈடுபட்ட 103 முஸ்லீம்களை குருவிகளை சுடுவதுபோல் சுட்டு வீழத்தியவர்கள்.

தொடர்நது இடைவிடாமல் மூன்று நாட்கள் கொலைவெறி புலிகளால் நடத்தப்பட்ட அப்பாவி முஸ்லீம்கள் மீதான வெறியாட்டததை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளோம்.

1985ல் தொடங்கி இலங்கை ராணுவத்தினரின் கிடிக்கிப் படிக்குள் புலிகள் சிக்கும் வரை அவர்களால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

1987ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி யாழ்பானத்திற்குள் நுழைந்து முஸ்லீம்களுக்கு 2 மணிநேரம் மட்டும் கால அவகாசம் கொடுத்து உடுத்திய ஒருத் துணியுடன் கையில் ஐம்பது ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேற்றியவர்கள். 1990ல் மன்னார் முஸ்லீம்களை இதே பாணியில் வெளியேற்றியவர்கள்.

இதெல்லாம் அமெரிக்காவுக்கு தெரியாமலில்லை, இலங்கைக்கு எதிராக ஓட்டளித்த நாட்டவருக்கும் தெரியாமலில்லை, தமிழ்நாட்டு வை.கோ.வுக்கும் தெரியாமலில்லை, சீமானுக்கும் தெரியாமலில்லை. கலைஞருக்கும் தெரியாமலில்லை, ஆனாலும் இனம் இனத்துடன் இணைந்தது.

இவர்களுக்கு உள்ள இன உணர்வும் கூட புலிகளுக்குக் கிடையாது அவர்களிடத்தில் ஊட்டப்பட்டது எல்லாம் கொலைவெறியும், இரத்த தாகமும் தான் அவர்களை எதிர்த்தால் யாராக இருந்தாலும் வேட்டையாடி விடுவார்கள் கோடிக் கணக்கில் பணம் கொடுத்து புலிகள் அமைப்பை நிறுவிய எம்.ஜி.ஆர் எதிர்த்திருந்தாலும் கூட சுட்டுத் தள்ள முயற்சி எடுத்திருந்திருப்பார்கள் இவர்களின் குணத்தை அறிந்து பணம் போனாலும் பரவா இல்லை தலை தப்பினால் போதும் என்று எம்.ஜி.ஆர் சும்மா இருந்து விட்டார்.

தமிழீழ விடுதலை எனும் ஒரே சிந்தனையில் செயல்பட்ட மாத்தையா, சபாரத்தினம், பத்மநாபா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் என்று இந்த காட்டுமிராண்டிகளால் படுகொலை செய்யப்பட்டோர் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

அதனால் இந்த ஆதரவு தீர்மானத்தால் கொலைவெறிப் பிடித்த இந்த காட்டுமிராண்டிகள் மீண்டும் வளர மட்டார்கள் என்பதற்கு உலக நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு எதிராக திரட்டிய அமெரிக்கா உத்தரவாதத்தை அளிக்க வேண்டும்.

இது தான் அப்பாவி தமிழர்கள் இலங்கையில் மீண்டும் நிம்மதியாக வாழ வழி வகுக்கும்.

புலிகள் மீண்டும் வளர விடாமல் தடுப்பதற்கான திட்டத்தை வகுத்து இலங்கை அரசிடம் ஐ.நா. கொடுக்க வில்லை என்றால் மீண்டும் இலங்கை இரத்த பூமியாவதை எத்தனை நூரு அமெரிக்கா தலையிட்டாலும் தடுக்க முடியாது

Sunday, March 10, 2013

எஸ்.டி.பி.ஐ அமைப்பினரின் சமுதாய(?) பணி




கோவை கோட்டை மேடு பெருமாள் கோவில் வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. கோவில் அருகில் செயல்பட்டு வந்த இந்த டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி சமுதாயத்திற்காக பாடுபடுவோம் என்று ஒட்டு பொறுக்கிய (எந்த சமுதாயத்திற்கு?) எஸ்.டி.பி.ஐ-யினர் கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் விளைவாக இன்று டாஸ்மாக் கடை அகற்றபட்டதாம். இதற்காக இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் காவல்துறைக்கு நன்றி தெரிவித்து கோவை முழுவதும் போஸ்டர் ஒட்டி உள்ளனர். இத்தகைய கொள்கைக் (?) குன்றுகளிடமிருந்து வல்ல இறைவன் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.

Saturday, February 16, 2013

சாபத்தை பெற்றுத் தரும் மவ்லிதும்!! ஷஃபாஅத்தை பெற்றுத் தரும் ஸலவாத்தும்




அல்லாஹ்வின் இறுதித் தூதரான முஹம்மது (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் யாரும் அடைய முடியாத இடத்தை அடைந்திருக்கின்றார்கள். அவர்களுக்காக உயிரையே அர்ப்பணிக்கக் கோடான கோடி மக்கள் காத்திருக்கின்றனர்.

ஒருவர் மீது அன்பு கொண்டு விட்டால் அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரைப் புகழ ஆரம்பித்து விடுவது மனித இயல்பு! அப்படிப் புகழும் போது மனிதன் வரம்பு கடந்து விடுகின்றான். தான் நேசிப்பவரைக் கடவுள் அந்தஸ்திற்குக் கொண்டு சென்று விடுகின்றான். அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த வாசலை அடைக்கின்றார்கள்.

"கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் (ர-) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : புகாரி 3445

நபி (ஸல்) அவர்கள் என்ன காரணத்திற்காக அஞ்சி, தம்மைப் புகழக் கூடாது என்றார்களோ அந்தக் காரணத்தை, புகழ்ச்சியில் வரம்பு மீறுதலை இந்தச் சமுதாயம் அப்படியே நிறைவேற்றுவதை நாம் பார்க்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் புகழ்வதாகக் கூறி இயற்றப்பட்ட மவ்லிதுகள் புகழ் மாலைகளல்ல, பொய் மாலைகள் தான் என்பதையும் இவற்றை ஓதினால் சுவனம் கிடைக்காது, நரகம் தான் பரிசாகக் கிடைக்கும் என்பதையும் இந்த இதழில் விரிவாகக் கண்டோம்.
அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேறு வாய்ப்பே இல்லையா? என்றால் நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவதற்கு அல்லாஹ் ஒரு வடிகாலைத் தந்துள்ளான். அது தான் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக் கூடிய ஸலவாத்.

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்! (அல்குர்ஆன் 33:56)

இந்த வசனத்தைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதருக்காக ஸலவாத், ஸலாம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது. இதற்காக நமது சொந்த வார்த்தைகளைக் கொண்டு புகழ் மாலை தொடுக்கும் போது நிச்சயமாக அது யூத, கிறித்தவர்கள் புகுந்த பாதையில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். பாழாய்ப் போன ஷிர்க் என்னும் பெரும் பாவத்தில் நம்மைப் புதைத்து விடும். அதனால் தான் மேற்கண்ட வசனம் இறங்கியவுடன் நபித் தோழர்கள் ஸலவாத் சொல்வது எப்படி என்று நபி (ஸல்) அவர்களிடமே கேட்டு, கற்றுக் கொள்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "அல்லாஹும்ம ஸல்- அலா முஹம்மதின் வ அலா ஆ- முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆ- இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆ- முஹம்மதின் கமா பாரக்த அலா ஆ- இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று சொல்லுங்கள்'' என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)
நூல் : புகாரி 4797

"எங்கள் தொழுகையில் நாங்கள் எவ்வாறு ஸலவாத் சொல்வது?'' என்று நபித்தோழர்கள் கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் இந்த ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்ததாக முஸ்னத் அஹ்மதில் ஹதீஸ் (16455) இடம் பெற்றுள்ளது. தொழுகை அல்லாத சமயங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ ஸல்லல்லாஹு அலா முஹம்மது வ ஸல்லம் என்றோ கூறுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.
(பார்க்க: நஸயீ 2728)

ஒன்றுக்கு பத்து.

"யார் அல்லாஹ்விடம் என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆச் செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 577

அதான் முடிவில் அருள்மிகு ஸலவாத்..

முஅத்தினின் அதானை நீங்கள் செவியுறும் போது, அவர் சொல்வது போன்றே நீங்களும் சொல்லுங்கள். பிறகு நீங்கள் என் மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில் நிச்சயமாக என் மீது யார் ஸலவாத் சொல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பத்து தடவை அருள் செய்கின்றான். பிறகு எனக்காக வஸீலாவைக் கேளுங்கள். நிச்சயமாக அது சுவனத்தில் உள்ள தகுதியாகும் (அல்லது வீடாகும்).

அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்கே தவிர வேறு யாருக்கும் அது கிடைக்காது. (அதை அடையும்) அடியாராக நான் ஆகவேண்டும் என்று ஆதரவு வைக்கின்றேன். யார் எனக்காக அந்த வஸீலா வேண்டி பிரார்த்திக்கின்றாரோ அவருக்கு என்னுடைய பரிந்துரை ஏற்பட்டு விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ்(ரலி)
நூல்: முஸ்லிம்

பாங்கு சொல்லப்படும் போது அதற்குப் பதில் கூறி, அதன் இறுதியில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும், அவர்களுக்காக வஸீலா வேண்டி பிரார்த்தனையும் செய்பவருக்கு மறுமையில் நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் உறுதியாகி விட்டது என்பதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பரிந்துரைக்காக மக்கள் அலை மோதும் மறுமை நாளில் நமக்குப் பரிந்துரையைப் பெற்றுத் தரும் சாதனமாக இந்த ஸலவாத் அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத்தைப் பெற்றுத் தரும் இந்த ஸலவாத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் மவ்லிதுகளை இனியும் ஓதலாமா?

நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டப்படுதல்.

ஒரு தொண்டன் தனது தலைவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தனது தலைவருக்கு தனது அன்பின் பரிமாணம் தெரிய வேண்டும் என்பதற்காக மிகப் பெரிய முயற்சிகளை மேற்கொள்வதைப் பார்க்கிறோம். உடல் உறுப்புக்களைச் சேதப்படுத்துதல், தன்னையே அழித்துக் கொள்ளுதல் போன்ற ஆபத்தான அழிவுப் பாதையை இதற்காகத் தேர்ந்தெடுக்கின்றான். இஸ்லாம் இந்த உளவியல் ரீதியான பிரச்சனையை உரிய வகையில் கையாள்கின்றது.


உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, "நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ்,
நூல் : அபூதாவூத் 883

"நிச்சயமாக பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : நஸயீ 1265

அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் மவ்லிதுகளை விட்டு விட்டு, அவனது அருளை அள்ளித் தரும் ஸலவாத்தைக் கூறுவோம். அளப்பரிய நன்மைகளை அடைவோம்.

குறிப்பு: நமது ஸலவாத், ஸலாம் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றோ அல்லது இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது. நீங்கள் சொல்லும் ஸலவாத்தை நான் கேட்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இதற்கென நியமிக்கப் பட்டிருக்கும் மலக்குகள் மூலம் இது தனக்கு எடுத்துக் காட்டப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்பாகும். வேறு யாருக்கும் இது கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜஸாக்கல்லாஹ்..,

எம். ஷம்சுல்லுஹா (ரஹ்மானி) & ஆன்லைன் பி.ஜே.
 

Friday, February 8, 2013

தமுமுக தவ்ஹீத்வாதிகளே உஷார் ???? உஷார் ?????? உஷார் ??????




திக என்று தங்களை சொல்லிக் கொள்ளும் சிலர் ஜாதிகளை ஒழிப்போம் என்ற பெயரில் இஸ்லாமிய பெண் ஒருத்திக்கு இந்து (வன்னியன்) பையனை பார்த்து திருமணம் முடித்து வைத்தார்கள். இந்த சம்பவத்தை கண்டு நாம் ஒன்றும் சொல்லப் போவதில்லை.

அல்லாஹ் ஒருவருக்கு நன்மையை நாட எண்ணி விட்டான் என்றால் அதனை யாராலும் தடுத்துவிட முடியாது. அது போல் ஒருவரை வழி தவற இருக்கும் சமயத்தில் அவர்களை மீட்டெடுக்கும் அதிகாரம் அவனையன்றி வேறு எவருக்கும் இல்லை. இந்த பெண்ணும் சைத்தானின் பிடியில் சிக்கி வழி தவறுகின்றாள் என்பது இந்த முஸ்லீம் பெயர் தாங்கிக்கு தெரியாமலில்லை. இது போன்ற முஸ்லீம் பெயர் தாங்கிகளை எல்லாம் பொதுச் செயலாளராக வைத்திருக்கும் அந்த [தமுமுக] உத்தமர்களே நாளை மறுமையில் பதில் சொல்ல கடமைப்பட்டு உள்ளார்கள்.

நாங்களும் தவ்ஹீத்வாதிகள் என்று சில அடிவருடிகள் இன்று வரை முகநூலில் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். இவர்களிடம் நாம் வைக்கும் கேள்வி? அல்லாஹ்வின் இறை வேதத்தில் கூறப்பட்டுள்ளவற்றிற்கு மாறு செய்யும் இத்தகையோர் தான் நேர்வழி பெற்றவர்களா? நீங்களே சிந்தித்து தெளிவு பெறுங்கள்.

இந்த செய்தி வெளியான பதிவின் ஒரிஜினல் லிங்க்:https://www.facebook.com/photo.php?fbid=522287217794551&set=a.104550569568220.8627.100000398329669&type=1&theater
இவர்கள் இதனையும் கிராபிக்ஸ் என்று சொன்னாலும் சொல்வர்.

அல்லாஹ்! இது போன்ற திருமணம் குறித்து கூறப்பட்டுள்ள வசனத்தை கொஞ்சம் படித்து பாருங்கள். முடிந்தால் உங்களின் [தமுமுக] பொதுச் செயலாளருக்கும் எத்தி வையுங்கள்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவு படுத்துகிறான். 91

திருக்குர்ஆன்-2:221

விரிவான தகவல் விளக்கம்:

முஸ்லிமல்லாதவர்களைத் திருமணம் செய்யத் தடை
'
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்' என்று திருக்குர்ஆனின் 2:221, 60:10 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது.

இது மதவெறிப் போக்காக சிலருக்குத் தோன்றலாம். ஆழமாகச் சிந்திக்கும் போது மனித குல நன்மைக்காகவே இவ்வாறு சட்டம் இயற்றப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடியும்.

எந்தவொரு மதத்தையும் இன்னொரு மதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவற்றுக்கிடையே அதிகமான ஒற்றுமை களும், குறைந்த அளவு வேற்றுமை களும் இருப்பதைக் காணலாம். ஆனால் இஸ்லாம் மார்க்கத்தை எந்த மதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தாலும் வேறுபாடுகள் அதிகமாகவும், ஒற்றுமை மிக மிகக் குறைவாகவும் இருக்கும்.
இப்படி மிகப் பெரிய கொள்கை வேறுபாடுகளுடைய முஸ்லிமும் முஸ்லிமல்லாதவரும் திருமண பந்தத்தின் மூலம் இணைவார்களானால் அந்த இணைப்பு உளப்பூர்வமானதாக இருக்க முடியாது; அது நீடிப்பதும் சிரமமாகும்.

இதனால் தான் கடவுள் இல்லை என்ற கொள்கையில் உறுதியுடைவர்கள், தங்கள் குடும்பத்துப் பெண்களைக் கடவுள் நம்பிக்கையுடையவருக்கு மணமுடித்துத் தர மாட்டார்கள். இதைக் கொள்கை உறுதி என்று தான் அறிவுடையோர் எடுத்துக் கொள்வார்களே தவிர துவேஷமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஒரே ஒரு கடவுள் தான் உலகத்திற்கு இருக்கிறான் என்றும், அவனுக்கு மனைவி, மக்கள், குடும்பம் மற்றும் பலவீனங்கள் எதுவுமே இல்லை என்றும் இஸ்லாம் சொல்கிறது. இந்த நம்பிக்கைக்கு எதிராக நடந்தால் மறுமையில் கடும் தண்டனை உண்டு எனவும் இஸ்லாம் கூறுகிறது. இதை நம்புகின்ற ஒருவர் இதற்கு நேர் மாறாக நடப்பவர்களுடன் திருமணம் செய்தால் அவர்களிடையே புரிந்துணர்வோ, நல்லிணக்கமோ நீடிக்க முடியாது.

திருமணம் என்பது இயன்ற அளவுக்கு எல்லா வகையிலும் மகிழ்ச்சியாகச் செல்ல வேண்டிய ஒரு வாழ்க்கை. தம்பதியரிடையே கொள்கை அளவிலான மிகப் பெரிய வேறுபாடுகள் இருந்தால் அவர்களின் இல்லற வாழ்வு நரகமாகி விடும்.

நிறைய கடவுள்கள் இருக்கலாம் என்று சொல்கின்ற ஒருவரோடு ஒரே ஒரு கடவுள் தான் என்று சொல்கின்ற கொள்கை உடையவரால் கடைசி வரை ஒத்துப் போக முடியாது.

இது போல் ஒரே ஒரு கடவுள் இருக்கிறான் என்று நம்புகின்ற முஸ்லிம், கடவுளே இல்லை என்று சொல்கின்ற குடும்பத்தோடு திருமண சம்பந்தம் வைத்துக் கொள்ள முடியாது. அப்படி வைத்துக் கொண்டாலும் அது நல்ல வாழ்க்கையாக அமையாது.

அதிகக் கட்டுப்பாடுகளை விரும்பக் கூடியவருக்கும் கட்டுப்பாடுகள் தேவை இல்லை என்போருக்கும் இடையே உள்ள நுணுக்கமான வித்தியாசத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கட்டுப்பாடுகள் தேவை இல்லை என்போர் யாருடனும் இணங்கிப் போக முடியும். கட்டுப்பாடுகளுடன் இருப்பவர் களால் அவ்வாறு இணங்கிப் போக இயலாது.

அனைத்து வகை உணவுகளையும் உட்கொள்ளக் கூடியவராக ஒருவர் இருக்கிறார். அதில் எந்தக் கட்டுப்பாடும் இவருக்கு இல்லை என்று வைத்துக் கொள்வோம். இவர் சைவ உணவு விடுதியிலும் சாப்பிடுவார். அசைவ உணவு விடுதியிலும் சாப்பிடுவார்.

ஆனால் அசைவ உணவு சாப்பிடுவதில்லை என்ற கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் சைவ உணவு விடுதியில் மட்டுமே சாப்பிட முடியும். இது போல் தான் பல கடவுள் கொள்கை உடைய ஒருவர் முஸ்லிம்கள் நம்பும் கடவுளையும் ஏற்றுக் கொள்வதில் அவருக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் அல்லாஹ்வைத் தவிர யாரும் கடவுளாக இருக்க முடியாது என்பதைக் கொள்கையாகக் கொண்ட முஸ்லிம் வேறு கடவுளை ஏற்றுக் கொள்ள முடியாது.

குழந்தையை எப்படி வளர்ப்பது, சொத்துக்களை எப்படிப் பிரித்துக் கொள்வது என்று பல விஷயங்களில் அத்தம்பதிகள் வேறுபடுவார்கள்.
அதே சமயம் பல கடவுளை நம்புகின்ற ஒருவர் அது தவறு என்பதை உணர்ந்து ஒரு கடவுள் தான் உலகத்திற்கு இருக்க முடியும் என்று கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவர் எந்தச் சாதியில் பிறந்திருந்தாலும், எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருடன் முஸ்லிம்கள் திருமண உறவை வைக்கிறார்கள்; வைத்துக் கொள்ளலாம்.

சாதி அடிப்படையிலான துவேஷ உணர்வு இஸ்லாத்தில் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

பிறப்பின் காரணமாக உள்ள உயர்வு தாழ்வு இதற்குக் காரணம் இல்லை. 'இவர் ஒரு கொள்கையில் இருக்கிறார்; அவர்கள் வேறொரு கொள்கையில் இருக்கிறார்கள்; இது இணைந்து வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது' என்பதற்காக அவர் தவிர்க்கிறார்.

இதில் எந்த விதமான துவேஷமும் இல்லை.

நாத்திகம் பேசும் நாயகர்களே! உங்களுக்கு தைரியமிருந்தால் தீண்டாமை ஒழிப்பு என்று சொல்வது போல் இதே ஒரு வன்னியனுக்கும் ஒரு தீண்டாமை கொடுமை இழைக்கப்பட்டவருக்கும் திருமணம் நடத்தி பாருங்கள்.

இவர்கள் கூறுவது எல்லாம் வெறும் போலியானவையே ஒரு வன்னியன்னும் தீண்டாமை என்று கூறும் ஒரு இனத்தவருக்கும் இடையே நடந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை எத்தனை பேர்கள்? சூறையாடப்பட்ட சொத்துகளின் மதிப்புக்கள் தான் எத்தனை எத்தனை?

இதோ அதற்கான ஒரு உதாரணமான லிங்க்:
http://kractivist.wordpress.com/2012/12/07/attack-on-dalits-of-dharmapuri-a-fact-finding-report/

தகவல் பகிர்வு :

கருத்தாக்கம்: அதிர்வுகள் தொடரும்.

#பூமி பூஜை என்பது அல்லாஹ்விற்கு இணை வைக்கும் செயலா இல்லையா??



கடந்த ஜனவரி26 ஆம் தேதி திருவாரூர் நகராட்சி சார்பில் கொடிக்கால்பாளையம் பகுதியில் நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.. 

பூமி பூஜையில் கொடிக்கால்பாயம் 7வது வார்ட் கவுன்சிலர் கலிபுல்லாஹ் அவர்கலும் மேலும் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..!!!!

நம்முடைய கேள்வி..!!!
----------------------------------------------------

#பூமி பூஜை என்பது அல்லாஹ்விற்கு இணை வைக்கும் செயலா இல்லையா??

#ஒரு சபையில் அல்லாஹ்வினுடைய வசனங்கள் புறக்கனிக்க பட்டால் அந்த சபைகளில் நாம் கலந்து கொள்ளலாமா??

#அப்படி கலந்து கொண்டால் நாமும் அதை செய்த குற்றம் வருமா வராதா???

#இப்படிப்பட்ட இஸ்லாத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால் தமுமுக தலைமை என்ன நடவடிக்கை எடுக்கும்???

#இது வரைக்கும் என்ன நடவடிக்கை எடுத்து இருக்கிறது???



தமுமுகவின் அரசியல் வாழ்கையில் மறுமையை மறந்து செய்த செயல்கள் எத்தனை எத்தனை... எதனை தடவை சுட்டி காட்டினாலும் திருத்திக்கொள்ள மனமில்லை போல ...!!!!

அல்லாஹ் ஒருவனே நம் அனைவரையும் காப்பாற்ற வலிமை படைத்தவன்..

இன்றைய சூழ்நிலையில் அரசியலில் இறங்கினால் இப்படிபட்ட கேவலமான நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதாலேயே தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் முதல் அடிமட்ட உறுப்பினர்கள் வரைக்கும் அரசியலில் இறங்கக்கூடாது என்று சட்டம் வகுத்துள்ளனர்..!!!!

அவர்கள் மறுமையை விட, இவ்வுலக வாழ்க்கையை விரும்பினார்கள் என்பதே இதற்குக் காரணம். (தன்னை) மறுக்கும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.1
Al-quran 16.107.

சத்திய கொள்கையில் இருந்து மரணிக்கும் வாய்ப்பை அல்லாஹ் நம் அனைவருக்கும் ஏற்படுத்தி மறுமையில் வெற்றி அடையும் கூட்டத்தில் நம்மையும் சேர்ப்பானாக...!!!!


nantri -Nagore Sadiq

Wednesday, January 9, 2013

காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை – சிறைநிரப்பும் போராட்டம் வாபஸ்!

முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப்போட்டும், நள்ளிரவில் முஸ்லிம்களின் வீடுகளுக்குள் புகுந்து தரைக்குறைவாக நடந்து கொண்டும், தட்டிக்கேட்ட முஸ்லிம்கள் மீது தடியடிநடத்தியும், அராஜகம் புரிந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 03.01.13அன்றுசிறைநிரப்பும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதிமொழியளித்ததால் 10.01.13க்கு போராட்டம் மாற்றப்பட்டது.
காவல்துறை உயர் அதிகாரிகள் வாக்களித்தபடி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் மூலம் மேற்கண்ட அராஜகத்துக்கு தமிழக அரசோ, ஒட்டுமொத்த காவல்துறையோ காரணமில்லை என்பதை நிரூபித்துள்ளதால் 10.01.13 அன்று நடைபெற இருந்த சிறைநிரப்பும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இப்படிக்கு,
மாநிலப் பொதுச் செயலாளர்
TNTJ HQ

Friday, January 4, 2013

புத்தாண்டு கொண்டாடும் முஸ்லிம்கள் சிந்திப்பார்களா?




கடந்தவாரம் ஜனவரி 1 அன்று புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்ற பெயரில் பல அனாச்சாரமான அருவருக்கத்தக்க காரியங்கள் அரங்கேறி முடிந்தன. இந்த நிலையில் இத்தகைய காரியங்களில் முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லி கொள்ளக்கூடியவர்களும் கலந்து கொண்டிருப்பது தான் மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருவிழாவில் ஆலிம்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளக்கூடிய போலி உலமாக்கள் சிலர் கலந்து கொண்டு கேக் வெட்டி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் சூடு ஆறுவதற்குள் மதுரையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பெயர்தாங்கி முஸ்லிம் பெண்களில் சிலர் கிறிஸ்த்தவ பாதிரியாரிடத்தில் ஆசிவாங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில், கடந்த வாரம் இந்து முன்னனி தலைவர் ராமகோபாலன் விடுத்த அதிரடி அறிவிப்பு ஒன்று அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தது. கோவில்களில் நடைதிறப்பது என்பதை இந்துக்களின் ஆகமக விதிகளின்படி சூரியன் உதிக்கும் நேரத்தில் தான். அன்று தான் நாளில் துவக்கம் என்று இந்துக்கள் நம்புகின்றனர். அதற்கு மாற்றமாக சிலகோவில்களில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12மணிக்கு கோவில் நடைதிறக்கப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தனர். அதைக் கண்டிக்கும் விதமாக இந்துமுன்னனி தலைவர் ராமகோபாலன் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
”நமது நாட்டில் நாள் பிறப்பு என்பது சூரிய உதயத்திலிருந்துதான் ஆரம்பமாகும். ஆகவே கோவில் நடைதிறப்பது விடியற்காலை நேரத்தில் தான். இரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து நடை மூடினால், அடுத்த நாள் விடியற்காலைதான் கோவில் நடை திறக்கப்படும். இது தான் மரபு.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் கோவில் நடை திறப்பது ஆகம விதிகளுக்கு முரணானது. இதனால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்று ஆன்மிக பெரியோர்கள் எச்சரித்தும், கோவிலை காட்சிப்பொருளாக்கி கடைவிரித்து காசு பார்க்கிறார்கள்..
நள்ளிரவு நடைத்திறப்பை அறநிலையத்துறை அனுமதிக்கக்கூடாது என்றும், ஆலயங்களில் நள்ளிரவு நடைத்திறப்பது குறித்து அறிவிப்பு வைத்தால் அதனை எதிர்த்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தும் என்பது தான் . அந்த அறிவிப்பு
மேற்கண்ட அறிவிப்பை கிறிஸ்த்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடக்கூடிய முஸ்லிம்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்க கடமைப்பட்டுள்ளனர். அர்த்தஜாம பூஜை முடிந்து நடையைச் சாத்தினால், சூரிய உதயத்திற்கு பிறகுதான் நடை திறக்க வேண்டும் என்று தவறான கொள்கையை பின்பற்றக்கூடியவர்கள் கூட அவர்கள் கொண்டகொள்கையில் இந்த அளவுக்கு உறுதியாக இருக்கும் நேரத்தில், சத்தியக்கொள்கையில் இருக்கும் நம் சமுதாயம் அதை மற்ற மக்களுக்கு எடுத்தியம்ப வேண்டிய இந்த சமுதாயம் பிறமத கலாச்சாரத்தை பின்பற்றக்கூடாது என்று தெளிவான நபிகளாரின் கட்டளையிருந்தும் அதை அலட்சியம் செய்து விட்டு இத்தகைய மார்க்கத்திர்கு முரணான செயல்களில் ஈடுபடுவது சத்தியப்ப்ரச்சாரம் இன்னும் பலரது உள்ளங்களுக்கு சென்றடைய வேண்டியதன் கட்டாயத்தை உணர்த்துகின்றது. இஸ்லாமிய பெயர்தாங்கிகளிடத்தில் இம்மார்க்கத்தின் முக்கித்துவமும், இதன் மகத்துவமும் எடுத்தியம்பும் பணியை நம் ஜமா-அத் இன்னும் வீரியமாக எடுத்துச்செல்லவேண்டியதன் அவசியத்தை இந்நிகழ்வுகள் நமக்கு படம் பிடித்துக்காட்டுகின்றன

Monday, December 10, 2012

கடையநல்லூரில் கொலைகாரக் கும்பல் (SDPI) ABCD - ன் அட்டகாசம் - ஓர் அலசல்

கடையநல்லூரில் நேற்று (09-12-2012) இரவு 8.30 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டைக் கிளை சார்பில் காவல் துறை முன் அனுமதி பெற்று பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் பொதுக் கூட்டத்தில் சகோ. M.S. சுலைமான் அவர்கள் இஸ்லாமும் பெண்களின் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் உறையாற்றுவதாக இருந்தது. ஆனால் அவரின நெருங்கிய உறவி
னரின் வஃபாத்துக்கு சென்றுவிட்டதால் இந்த தலைப்பில் சகோ. அப்துந் நாஸிர் அவர்கள் உறையாற்றினார்கள். சகோ. ரஹ்மதுல்லாஹ் அவர்கள் சுய பரிசோதனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

ரஹ்மதுல்லாஹ் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இரவு சுமார் 9.55 மணியளவில் கொலைகாரக் கும்பல் ABCD (SDPI) யினயிரனின் வண்டவாலங்களைத் தோலுறித்தார்கள். அதில் கொலைகாரக் கும்பல் பற்றி அவர் பேசும் போது "பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை என்று சொல்லுகின்றார்கள்.

பசியிலிருந்து விடுதலை என்பது ஊர் ஊராய் வசூல் செய்து அவர்களின் வயிற்றை நிறப்புவதுதான் பசியிலிருந்து விடுதலை.

பயத்திலிருந்து விடுதலை என்பது ஊரெல்லாம் கட்டப்பஞ்சாயத்து செய்வதுதான் இவர்களின் பயத்திலிருந்து விடுதலை."

என்று பேசிக் கொண்டிருக்கும் போதே கொலைகாரக் கும்பலின் ஒருவன் SDPIயைப் பற்றி நீங்கள் எதுவும் பேசக் கூடாது என்று கொக்கரித்தான்.

காவல்துறையினரின் அனுமதி பெற்று நடைபெறும் கூட்டம் என்பதால் அவனை காவல்துறையினர் அப்புறப்படுத்திக் கொண்டிருக்கும் போதே SDPI யைச் சேர்ந்த குண்டர்கள் கூட்டமாக வந்தனர். அவர்கள் பேசிய வார்த்தை...

உங்களது மாநிலச் செயலாளரை வெட்டிடுவோம்,

உங்களை விடமாட்டோம், அவன் நாளைக்கு இருக்க மாட்டான்.

இங்கிருந்து ஒருவரும் நகர முடியாது என்று கூச்சல் போட்டனர்.

இது மட்டுமில்லாமல் சொல்வதற்கே கூசக் கூடிய வகையில் ஆபாச வார்த்தைகள் பேசினர்.

கூட்டத்திற்கு வந்தவர்களை நோக்கி கற்களை வீசினர். குறிப்பாக கூட்டத்திற்கு வந்த பெண்களை நோக்கியே கற்களை வீசியிருக்கின்றனர். இந்த காட்டுமிராண்டிகள்.

இவ்வளவு நடந்தும் TNTJ சகோதரர்கள் அமைதி காத்தனர். காரணம் கூட்டத்திற்கு வந்திருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதை மனதில் வைத்து செயல்பட்டனர்.

ஆனால் இந்தக் கொடியவர்களின் சூழ்ச்சியை அல்லாஹ் முறியடித்தான். அல்ஹம்துலில்லாஹ்... கூட்டம் சிறப்பாக முடிவுற்றது.

சிறிது நாட்களுக்கு முன்புதான் அதிரையில் ஹாஜா மைதீன் என்பவரைக் கொலை செய்த இந்த கொலைகாரக் கும்பலின் கொலை வெறி தணியாமல் தொடர்ச்சியாக கடையநல்லூரிலும் தங்களது கீழ்த்தனமான வேலையை ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பு : பொதுக் கூட்டம் முடிந்து ஆட்டோவில் சென்ற பெண்களை வழிமறைத்து " எங்கடீ போய்ட்டுவாரீங்க" என்று தகாத வார்த்தைகளாலும் பெண்களை நோக்கி பேசியுள்ளனர்.

நாங்கள் இஸ்லாமியர்களை காக்க வந்த கூட்டம் என்று பீற்றுகின்றனர். ஆனால் இவர்களின் செயல்பாடுகளைப் பார்த்த மக்கள் இவர்கள் இஸ்லாமியர்களை காவு கொடுக்க வந்த கூட்டம் தான் என்பதை புரிந்து கொண்டனர். இவர்கள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றோம் என சொல்லும் இந்த கொலைகார கும்பல் குட்டி சங்பரிவாரர்கள் தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

விமர்சனத்தை விமர்சனமாக எதிர்கொள்ள திராணியற்றவர்கள் ஒரு அமைப்பை நடத்த தகுதி இல்லாதவர்கள்.

ABCD ன் செயல்பாடுகளின் மூலமாக இவர்களை இந்த சமூகம் நன்றாக உணர்ந்து வைத்துள்ளது. இந்த சமூகத்திலிருந்து இவர்களை அனாதையாக்கும் நிலை வெகு தொலைவில் இல்லை.

இன்ஷா அல்லாஹ்... இவர்களின் முகத்திரையை மக்கள் மத்தியில் கிழித்து தொங்கவிட என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராக உள்ளது.

அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன். (அல்குர்ஆன் 8:30)

(இவர்களின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று TNTJ போட்டை கிளை கொடுத்த காவல்துறை கம்ப்ளைண்ட் படத்தில் உள்ளது.)

Thursday, December 6, 2012

அதிராம்பட்டினத்தில் SDPI யின் காமெடி ஆர்ப்பாட்டம்





அதிரையிலே நேற்று நடந்த காமெடி தவ்ஹீத் ஜமாஅத் எதிர்ப்பு போராட்டத்திலே அந்த ஊர் மக்கள் அனைவரும் புறக்கணித்தனர் அல்ஹம்துலில்லாஹ் .. இவர்களின் பித்தலாட்டங்கள் கயவாலித்தனதிர்க்கு முற்று புள்ளி வைத்து முகத்திலே கறியை பூசி விட்டனர் அல்ஹம்துலில்லாஹ் ...

அதில் பேசிய ஒருவன் சகோதரர் அல்தாபியை பற்றி சில தவறான செய்திகளை வெயிட்டு தனஊகு ஒன்றுமே தெரியாது என்று தன்னை தானே பொய்யன் என்று ஒத்துகொண்டுல்லான் ..

கொலையையும் பண்ணி விட்டு இதை கண்டிக்க துப்பு இல்லாத இந்த ABCD அமைப்பினர் . இதை தட்டி கேட்ட தவ்ஹீத் ஜமாத்தை பழிவாங்குவதாக நினைத்து கொண்டு தனக்கு தானே சூனியம் வைத்து கொண்டனர் என்று ஊர் மக்கள் கூறுகின்றனர் .

அடேய் SDPI மாநில செயலாளர் பதவியில் இருக்கும் கூமுட்டையே கூமுட்டையே, சகோதரர் மவ்லவி பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் தென்காசியில் சுன்னத் ஜமாஅத் மதரஸாவில் ஓதியவர். வேண்டுமானால் போய் தென்காசியில் விசாரித்து கொள். அவர் எங்கேயடா கடையநல்லூர் மதராசாவிற்கு வந்தார்? உன்னுடைய உளறலுக்கு ஒரு அளவே இல்லையா? உங்களை குறித்து அவர் உண்மையை சொல்லிவிட்டதால் எதையாவது புலம்பி தள்ளுவீர்களா SDPI கூமுட்டை மாநில செயலாளரே?

குறிப்பு - இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கலை விட கூட்டத்தில் கலந்து கொண்ட கொடிகள் தான் அதிகம் என்பதை கீழே உள்ள போட்டோவை பார்த்தாலே தெரிகிறது.. இதை அந்த ஊர் மக்களே உறுதி படுத்தியது வேடிக்கையாய் இருந்தது.

மொத்தத்தில் உடைந்த அப்பலாமாக ஆனது இந்த கயவர்களின் போராட்டம் 

முஸ்லீம்களிடையே காணப்பட்ட பல மூடநம்பிக்கைகளையும்



அல்லாஹுவின் திருப்பெயரால்....

தமிழக வரலாற்றில் 1984 காலகட்டங்களில் முஸ்லீம்களிடையே காணப்பட்ட பல மூடநம்பிக்கைகளையும்,மாற்றுமத கலாசாரங்களையும்,வரதட்சணை கொடுமைகளையும் நீக்க தௌஹீத் அமைப்புகள் அரும்பாடுபட்டுள்ளது.பல்வேறு மார்க்க அறிஞர்களும் ஆற்றிய சீரியப்பணிகளால் அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் இன்று ஏகத்துவதில் தமிழகம் மற்றமாநிலங்களுக்கு ஒரு உதாரணமாக விளங்குகிறது.

ஆனால் இன்று SDPI,PFI,MNP,ABCD ect
,போன்ற அமைப்புகள் தன்னுடைய சுயலாபத்திற்காக மக்களை வழிகெடுத்து மீண்டும் பழைய போக்கிலேயே அழைத்து செல்ல முயல்வது வேதனைக்கும்,கண்டனத்திற்கும் உரியது.

விநாயகர் சதுர்த்திக்கு நோட்டீஸ்,நாகூர் கந்தூரி விழாவிற்கு வாழ்த்து,பொங்கல்வாழ்த்து.பிறந்தநாள் வாழ்த்து என்று மனம்போனபோக்கில் மார்க்கத்தை கையாழ்வது இவர்கள் வாடிக்கையாகிவிட்டது.

நாங்கள் ஒட்டுப்பொறுக்கத்தான் அரசியலில் இறங்கினோம் அதனால் மார்க்கத்தை எங்களிடம் எதிர்ப்பார்க்க வேண்டாம் என்று இவர்கள் வெளிப்படையாக அறிவித்துவிட்டால் நாம் இவர்களை பெரிதாக எடுக்கத்தேவையில்லை.ஆனால் முஸ்லிம்களின் உரிமை மீட்க அமைப்பு ஆரம்பித்ததாக சொல்லி போலி முகமூடி அணிந்துகொண்டு மக்களை ஏமாற்றுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இன்ஷாஅல்லாஹ் துரோக வரலாறின் பட்டியல் தொடரும்.
                                


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons