Monday, December 10, 2012

கடையநல்லூரில் கொலைகாரக் கும்பல் (SDPI) ABCD - ன் அட்டகாசம் - ஓர் அலசல்

கடையநல்லூரில் நேற்று (09-12-2012) இரவு 8.30 மணியளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டைக் கிளை சார்பில் காவல் துறை முன் அனுமதி பெற்று பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் பொதுக் கூட்டத்தில் சகோ. M.S. சுலைமான் அவர்கள் இஸ்லாமும் பெண்களின் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் உறையாற்றுவதாக இருந்தது. ஆனால் அவரின நெருங்கிய உறவி
னரின் வஃபாத்துக்கு சென்றுவிட்டதால் இந்த தலைப்பில் சகோ. அப்துந் நாஸிர் அவர்கள் உறையாற்றினார்கள். சகோ. ரஹ்மதுல்லாஹ் அவர்கள் சுய பரிசோதனை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

ரஹ்மதுல்லாஹ் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இரவு சுமார் 9.55 மணியளவில் கொலைகாரக் கும்பல் ABCD (SDPI) யினயிரனின் வண்டவாலங்களைத் தோலுறித்தார்கள். அதில் கொலைகாரக் கும்பல் பற்றி அவர் பேசும் போது "பசியிலிருந்து விடுதலை, பயத்திலிருந்து விடுதலை என்று சொல்லுகின்றார்கள்.

பசியிலிருந்து விடுதலை என்பது ஊர் ஊராய் வசூல் செய்து அவர்களின் வயிற்றை நிறப்புவதுதான் பசியிலிருந்து விடுதலை.

பயத்திலிருந்து விடுதலை என்பது ஊரெல்லாம் கட்டப்பஞ்சாயத்து செய்வதுதான் இவர்களின் பயத்திலிருந்து விடுதலை."

என்று பேசிக் கொண்டிருக்கும் போதே கொலைகாரக் கும்பலின் ஒருவன் SDPIயைப் பற்றி நீங்கள் எதுவும் பேசக் கூடாது என்று கொக்கரித்தான்.

காவல்துறையினரின் அனுமதி பெற்று நடைபெறும் கூட்டம் என்பதால் அவனை காவல்துறையினர் அப்புறப்படுத்திக் கொண்டிருக்கும் போதே SDPI யைச் சேர்ந்த குண்டர்கள் கூட்டமாக வந்தனர். அவர்கள் பேசிய வார்த்தை...

உங்களது மாநிலச் செயலாளரை வெட்டிடுவோம்,

உங்களை விடமாட்டோம், அவன் நாளைக்கு இருக்க மாட்டான்.

இங்கிருந்து ஒருவரும் நகர முடியாது என்று கூச்சல் போட்டனர்.

இது மட்டுமில்லாமல் சொல்வதற்கே கூசக் கூடிய வகையில் ஆபாச வார்த்தைகள் பேசினர்.

கூட்டத்திற்கு வந்தவர்களை நோக்கி கற்களை வீசினர். குறிப்பாக கூட்டத்திற்கு வந்த பெண்களை நோக்கியே கற்களை வீசியிருக்கின்றனர். இந்த காட்டுமிராண்டிகள்.

இவ்வளவு நடந்தும் TNTJ சகோதரர்கள் அமைதி காத்தனர். காரணம் கூட்டத்திற்கு வந்திருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதை மனதில் வைத்து செயல்பட்டனர்.

ஆனால் இந்தக் கொடியவர்களின் சூழ்ச்சியை அல்லாஹ் முறியடித்தான். அல்ஹம்துலில்லாஹ்... கூட்டம் சிறப்பாக முடிவுற்றது.

சிறிது நாட்களுக்கு முன்புதான் அதிரையில் ஹாஜா மைதீன் என்பவரைக் கொலை செய்த இந்த கொலைகாரக் கும்பலின் கொலை வெறி தணியாமல் தொடர்ச்சியாக கடையநல்லூரிலும் தங்களது கீழ்த்தனமான வேலையை ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பு : பொதுக் கூட்டம் முடிந்து ஆட்டோவில் சென்ற பெண்களை வழிமறைத்து " எங்கடீ போய்ட்டுவாரீங்க" என்று தகாத வார்த்தைகளாலும் பெண்களை நோக்கி பேசியுள்ளனர்.

நாங்கள் இஸ்லாமியர்களை காக்க வந்த கூட்டம் என்று பீற்றுகின்றனர். ஆனால் இவர்களின் செயல்பாடுகளைப் பார்த்த மக்கள் இவர்கள் இஸ்லாமியர்களை காவு கொடுக்க வந்த கூட்டம் தான் என்பதை புரிந்து கொண்டனர். இவர்கள் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றோம் என சொல்லும் இந்த கொலைகார கும்பல் குட்டி சங்பரிவாரர்கள் தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

விமர்சனத்தை விமர்சனமாக எதிர்கொள்ள திராணியற்றவர்கள் ஒரு அமைப்பை நடத்த தகுதி இல்லாதவர்கள்.

ABCD ன் செயல்பாடுகளின் மூலமாக இவர்களை இந்த சமூகம் நன்றாக உணர்ந்து வைத்துள்ளது. இந்த சமூகத்திலிருந்து இவர்களை அனாதையாக்கும் நிலை வெகு தொலைவில் இல்லை.

இன்ஷா அல்லாஹ்... இவர்களின் முகத்திரையை மக்கள் மத்தியில் கிழித்து தொங்கவிட என்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராக உள்ளது.

அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன். (அல்குர்ஆன் 8:30)

(இவர்களின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று TNTJ போட்டை கிளை கொடுத்த காவல்துறை கம்ப்ளைண்ட் படத்தில் உள்ளது.)

1 comments:

ibrahim said...

எல வாயவச்சிட்டு ஜும்ம கெடக வேன்டியதானே ஏண்டா அடிவாங்குரிங்க

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons