Monday, July 9, 2012

மீண்டும் சமுதாய பணியில் தமுமுக...(?)தனது சகோதர இயக்கமான பாஜகவுடன் கைகோர்த்த வாத்தி

 அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவாக செயல்படுவதிலிருந்து விலகி, பா.ஜ.கவின் சிறுபான்மைப் பிரிவாக மாறி அவர்களுடன் கூட்டணி வைக்க திட்டமா? – வெளிவராத உண்மைகள்!!

மாமல்லபுரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது தலசயன பெருமாள் கோயில். இதை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் முடிவை தொல்லியல் துறை எடுத்துள்ளது. இந்தக் கோவிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக்கூடாது. அவ்வாறு அறிவித்தால் அந்தக் கோவிலில் நடக்கக்கூடிய பூஜைகள் தடைபட்டுவிடும்; அதுமட்டுமல்லாமல் அங்கு பூஜை செய்ய வரக்கூடிய பக்தர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று சங்பரிவாரங்கள் கூப்பாடு போட்டு வருகின்றனர்.

ஏற்கனவே 6 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழைய அலைவாயில் கோவில் மத்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் பூஜைகள் இன்றி பாழடைந்து கிடக்கும் நிலையில், 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பலமுறை புதுப்பிக்கப்பட்டு பக்தர்களின் அனுதின வழிபாட்டில் உள்ள கீர்த்திக்குரிய தலசயன பெருமாள் கோவிலை மத்திய தொல்பொருள் துறை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர கடந்த 20.05.2012 அன்று தேதியிட்ட நாளிதழ்களில் விளம்பரப்படுத்தி உள்ளது. இந்தக் கோவிலை மத்திய தொல்பொருள் துறை எடுத்துக் கொள்ள முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது” என்று இந்த கோவிலுக்கு ஆதரவாக கண்டன அறிக்கை விட்டு வருகின்றனர்.

பக்தியின் அடிப்படையில் இவ்வாறு அவர்கள் அறிக்கை விடுவது மேலோட்டமாக அணுகக் கூடிய விஷயம் அல்ல, பழமையான ஆலயங்களை பழமையான கட்டடங்களைப் பாதுகாக்க இந்த நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்படி இவ்வளவு காலம் கடந்து விட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை தொல் பொருள் துறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டத்தின் படியே ஏராளமான கோவில்களும் சில பள்ளிவாசல்களும் இன்னும் பல புராதனக் கட்டடங்களும் மத்திய அரசின் தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.

இப்படி ஒரு சட்டம் இருப்பது நமக்கு உடன்பாடானது அல்ல. பழைய கட்டடங்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மக்களின் கோடான கோடி ரூபாய்கள் பாழாக்கப்படு கின்றன. பழைய கட்டடங்களை இடிப்பது அல்லது அதுவாக விழும் வரை விட்டுவிடுவதுதான் இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு நல்லது. இதுதான் அறிவுப்பூர்வமானது.

ஆனால் இந்தச் சட்டம் இருக்கும் வரை அதற்கேற்ப நடவடிக்கை இருந்து கொண்டுதான் இருக்கும்.
இந்து பக்தர்கள் போராடுவதாக இருந்தால் அந்த சட்டத்தை நீக்கக் கோரி போராட்டம் நடத்துவதை விட்டு விட்டு சட்டப்படி ஒரு கோயிலை புராதனச் சின்னமாக அறிவிப்பதை எதிர்ப்பது பயனற்றதாகும். ஆனாலும் அவர்கள் பக்தியின் பெயரால் இப்படி செய்வதில் நமக்கு ஏதும் பாதிப்பு இல்லை.

ஆனால் வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாசலை தொல்பொருள் துறை எடுத்துக் கொண்டுள்ளது. அது போல் அதே கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தையும் எடுத்துக் கொண்டுள்ளது.

ஆனால் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இந்து பக்தர்கள் பூஜை செய்ய அனுமதிக்கப் படுகிறது. ஆனால் பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி இல்லை. இதை எதிர்த்து தவ்ஹீத் ஜமாஅத் உட்பட பல அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியுள்ளன. தமுமுகவும் போராட்டம் நடத்தியது. அப்போது இந்துத்துவா இயக்கங்கள் பள்ளிவாசலை வழிபாட்டுக்கு திறந்து விடக் கூடாது என்று எதிர்ப்போராட்டம் நடத்தின.

அப்படி இருக்கும் போது அதைக் கூட கவனத்தில் கொள்ளாமல் மானம் சூடு சொரணை அனைத்தையும் வந்த விலைக்கு விற்ற ம.ம.கட்சி ஜால்ரா மன்னன் செய்த வேலை ம.ம.கட்சியினருக்கே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அடிக்கும் ஜால்ரா பற்றி மாபெரும் மக்கள் வெள்ளத்தில் தோலுரித்துக் காட்டப்பட்ட பின்னர் சூடு சொரணை இல்லாதவனை அல்லாஹ் பார்க்க மாட்டான் என்று ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய பிறகும் ஜால்ரா தலைவருக்கு ரோஷம் வந்து கொஞ்சம் சமுதாய உணர்வோடு நடப்பார் என்று ம.ம.கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.

சங்பரிவாரத்துடன் இணைந்து கொண்டு ஜால்ரா மன்னன் ஜவாஹிருல்லாவும் களத்தில் குதித்து தான் ஒரு மானம் கெட்ட ஜென்மம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார்.

மேலே உள்ள புகைப்படத்தில் பிஜேபியின் மூத்த தலைவர் இல.கணேசனுடன் கையோடு கைகோர்த்து போஸ் கொடுப்பது யார் என்று தெரிகின்றதா?

அட! நம்ம ம.ம.கட்சியின் வாத்தியார்தாங்க. இப்போது பிஜேபியுடன் புதிய கூட்டணி அமைத்துள்ளார்கள் போலும்.
கடந்த 28.06.12 அன்று தலசயன பெருமாள் கோயிலை தொல்லியல்துறை கையகப்படுத்தக்கூடாது என்று கூறி அதைக் கண்டித்து நடைபெற்ற தொடர் முழக்க போராட்டத்தில்தான் இந்த கேவலமான இழிசெயலை இவர் செய்துள்ளார். இஸ்லாமியர்களை கருவறுக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்களுடன் அவர்களது கொள்கை நிலைபெற வேண்டும் என்பதற்காக கூட்டுச் சேர்ந்து கைகோர்த்து இவர்கள் போஸ் கொடுக்கின்றார்கள் என்றால் இந்த சமுதாய துரோகிகளை என்ன செய்வது?

நரேந்திர மோடி வந்து இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தாலும் அவனுடனும் இந்த சமுதாய துரோகி கைகோர்த்து இருப்பார் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அந்த அளவிற்கு இவர்களுக்கு பதவி சுகம் தேவைப்படுகின்றது.




வாத்தியார் பா.ஜ.க வின் பினாமியா?:


பா.ஜ.க விடுக்கும் கோரிக்கையை நமது மானம்கெட்ட வாத்தியார் ஏன் வழிமொழிய வேண்டும். அவர் என்ன பா.ஜ.க வின் பினாமியா?. அநேகமாக வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேசிய நீரோடையில் கலக்க திட்டம் தீட்டியுள்ளார்களோ என்னவோ தெரியவில்லை.


அம்மாவை குளிர்விக்க எந்த தியாகம் வேண்டுமானாலும் செய்யத் தயார் :


ஒருவேளை அம்மாவுக்கு ஜால்ரா தட்டும் இந்த ஜால்ரா மன்னன், பா.ஜ,கவுடன் நாம் நெருங்கினால்தான் அம்மா அவர்கள் மனம் குளிரும். அதனால் பா.ஜ.கவுடன் நாம் நெருக்கமாகிவிடலாம் என்று களத்தில் குதித்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை.

இப்படிக் கேவலப்படும் நிலையை அல்லாஹ் இவர்களுக்கு ஏற்படுத்திவிட்டான்.

இவர்களது இந்த செய்கையின் வாயிலாக எந்த அளவிற்கு கேவலாமான வேலையையும் தாங்கள் செய்யத் தயார் என்பதைத்தான் இந்த சமுதாய துரோகிகள் அடையாளம் காட்டியுள்ளனர்.

கொள்கைதான் இல்லை. மற்றவர்கள் திட்டுகின்றார்களே என்ற வெட்க உணர்விலாவது இது போன்ற கேடுகெட்ட செயல்களை செய்யாமல் தவிர்க்கலாமல்லவா? அந்த வெட்க உணர்வையும் இவர் உதிர்த்து விட்டார் என்றால் இனிமேல் இவரை எதைச் சொல்லி, என்ன சொல்லி திட்டுவது? எருமை மாட்டின் மேல் மழை பெய்தது என்ற பழமொழிதான் இங்கு ஞாபகம் வருகின்றது.

இந்த ஜனாஸாவின் அட்டகாசமும், அட்டூழியமும் தாங்க முடியவில்லை. இப்போதுதான் ஓராண்டு முடிந்துள்ளது. இன்னும் 4ஆண்டுகள் பாக்கி உள்ளன. அதற்குள் இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகின்றதோ இந்த ஜனாஸா? இந்த ஜனாஸாவிடத்திலிருந்து இந்த சமுதாயத்தை அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.
பாஜகவுக்கு ஜால்ரா அடிப்பது இது முதல் முறை அல்ல பாஜகவின் ஏஜெண்டாக இவர்கள் செயல்பட்ட பல சம்பவங்கள் உள்ளன. ஓரிரு சம்பவங்களை மட்டும் இங்கே சுட்டிக்காட்டுகின்றோம். 

• பாபர் மசூதி விஷயத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறிய கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை அற்புதமான தீர்ப்பு என்று கூறி வரவேற்று அறிக்கை வெளியிட்டது

• இடஒதுக்கீட்டில் இழைக்கப்படும் துரோகத்தை ஆதரித்து அதற்கு முட்டுக் கொடுத்து ஆளுங்கட்சிக்கு ஜால்ரா தட்டி, முஸ்லிம்களை கருவறுக்கும் வேலையை கையில் எடுத்திருப்பது

• இராமேஸ்வரத்தை புனித நகரமாக அறிவிக்கச் சொல்லி கோரிக்கை வைத்தது
இது போன்ற சம்பவங்களுடன் தற்போது இல.கணேசனுடன் உற்சாகத்தோடு கைகோர்த்து போஸ் கொடுத்திருப்பதையும் இணைத்தால் இவர்தான் தமிழகத்தின் ஏஜெண்டாக இருப்பாரோ! என்ற
சந்தேகம் வலுப்பெறுகின்றதா? இல்லையா?

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons