Monday, September 3, 2012

தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதா?


அஸ்ஸலாமு அலைக்கும்அண்ணன் நிலைப்பாட்டில் அதிரடி மாற்றம்!

கடந்த காலங்களில் நாங்கள் எந்த அரசியல்வாதியையும் சந்திக்க மாட்டோம்! நீங்கள் இடஒதுக்கீட்டை அறிவித்தால் நாங்கள் எங்கள் உயிரைக் கொடுத்து(?) வேலை செய்து உங்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்வோம்! வெறும் சந்திப்பு தேவையில்லை "கையில காசு வாயில தோசை'' ஆர்டர் போடுங்க - ஆதரவு தருகிறோம் என்றெல்லாம் கூறியவர், தற்போது எந்த வாக்குறுதியும் தராமல் பிரதமரை ஓடோடிச் சென்று மாநாடு முடிந்த மறுநாளே சந்தித்து இருப்பது அவருக்கு ஏற்பட்டிருக்கும் தடுமாற்றத்தையே எடுத்துக் காட்டுகிறது.

மாநாட்டின் தோல்விக்கு மன்மோகன் சிங்கிடம் மருந்து தேடுகிறார் பாவம்! மேலும் பிரதமரைச் சந்தித்தது, பெரிய சாதனை போல் அவர்களால் பரப்பப்படுகிறது.  பிரதமரை இதற்கு முன் தமிழகத்தில் தமுமுக தலைவர்களும், ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்களும், தேசிய லீக் தலைவரும் எந்த மாநாடும் நடத்தாமலேயே ஜே.எம். ஹாரூண் எம்.பி. மூலம் மிக சுலபமாக சந்தித்திருக்கின்றனர். ஆனால் பிரதமரே தங்களை அழைத்தார் என்று "பில்டப்' யாரும் கொடுக்கவில்லை. இது இவர்களது தரத்தையும், நிறத்தையும் எடுத்துக் காட்டுகிறது!

-செங்கிஸ்கான்.




தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலையில் மாற்றம் ஏற்பட்டதா


யாரையும் மேடையில் ஏற்றுவதில்லை என்று கூறி வந்த தவ்ஹீத் ஜமாஅத்இப்போது தனது நிலையை மாற்றிக் கொண்டது என்ற வாதம் சிலரால் எடுத்துவைக்கப்படுகிறது. 
இதற்கு உரிய பதிலைச் சொல்வதற்கு முன்னால் இப்படி கேட்பவர்கள் பற்றியும்நாம் சுட்டிக்காட்டும் அவசியம் இருக்கிறது. 

மாநாடு நடப்பதற்கு முன் அனைவரையும் அழைக்க வேண்டும்; எங்களையும்அழைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர். பல்வேறு கட்சிகளின்தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில்தெளிவுபடுத்தப்பட்டது. அப்போது இந்தக் கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை.ஏனெனில் மாநாட்டுக்கு மக்கள் வர மாட்டார்கள்; மாநாட்டுக்குப் போகக் கூடாதுஎன்று நாம் பரப்பிய செய்திகளால் தீவுத்திடலில் சமாதி கட்டப்படும் என்று கனவுகண்டார்கள். அதை வெளிப்படையாகவும் சொன்னார்கள். அவர்களுக்குப் பலநாட்கள் தூக்கம் இல்லாமல் செய்யும் அளவுக்கு மாநாடு முஸ்லிம் சமுதாயத்தின்பேராதரவுடன் வரலாற்றுச் சாதனை படைத்ததைப் பார்த்து திகைத்துப்போனவர்கள் மாநாட்டின் நோக்கத்தைத் திசை திருப்பும் வகையில் எதையாவதுஎழுதாவிட்டால் தங்கள் மண்டை வெடித்து விடும் என்று கருதி ஏற்கனவேசரியாகப் புரிந்து வைத்திருந்ததை இப்போது தவறாகச் சித்தரிக்கமுயற்சிக்கிறார்கள். இதை முதலில் பதிவு செய்ய விரும்புகிறோம். 
பிறரை மேடையில் ஏற்றுவது குறித்த தவ்ஹீத் ஜமாஅத் நிலை இவர்களுக்குத்தெரியவில்லை. இவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் இது குறித்து எடுத்துள்ளநிலைபாட்டை அறிவதற்கு உரிய முறையில் முயற்சிக்க வேண்டும். இதுவிஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாட்டில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. 

மார்க்கம் சம்பந்தமான நிகழ்ச்சிகளில் தஹீத் ஜமாஅத் எந்தக் கொள்கையைச் சரிகாண்கிறதோ அந்தக் கொள்கையை ஏற்காத எவரையும் மேடையில்ஏற்றுவதில்லை என்பது தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு. 

இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 
சமுதாயப் பிரச்சனைக்காக போராடும் போதும் கோரிக்கை வைக்கும் போதும்பிறரை ஏற்றுவது, பிறருக்குப் பேச வாய்ப்பளிப்பது ஆகியவற்றில் கோரிக்கையநிறைவேற்றுபவர்களும் அல்லது அதற்கு உதவியாக இருப்பவர்களும் கடந்தகாலங்களில் தேவைப்பட்டால் மேடையில் பேச அனுமதிக்கப்பட்டுள்ளனர். எந்தக்கோரிக்கை குறித்து மாநாடு பொதுக்கூட்டம் நடக்கிறதோ அந்தக் கூட்டத்தில் நான்கோரிக்கைக்கு ஆதரவாக இருப்பேன் என்று உறுதியளிக்க விரும்பினால் அதற்குஅனுமதி அளிக்கப்பட்டதுமுண்டு. 

உதாரணமாக சென்னை மண்ணடியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 தந்ததற்காக இப்போது ஓட்டு போடுகிறோம்.அதை ஏழு சதவிகிதமாக ஆக்கினால் அடுத்த சட்டசபை தேர்தலிலும்வாக்களிப்போம் என்று பிஜே பேசினார். அந்தக் கூட்டத்தில் மேடையில் இருந்ததயாநிதி மாறன் இதற்காக முயற்சி செய்ய வேண்டும். அது பற்றி அவர் உறுதிஅளிப்பதாக இருந்தால் அளிக்கலாம் என்று பீஜே குறிப்பிட்டார். தயாநிதி மாறனும்எழுந்து அது சாத்தியமில்லாமல் உள்ளது இருந்தாலும் நான் தலைவரிடம் இதுகுறித்து எடுத்துச் சொல்வேன் என்று கூறினார். அத்துடன் திமுக செய்த இலவசதிட்டங்களைப் பற்றியும் பேசினார். அவர் பேசி முடித்ததும் எழுந்து இது போன்றஇலவசங்கள் எங்களுக்கு முக்கியம் அல்ல. எங்களுக்கு கல்வியும் வேலைவாய்ப்புமே முக்கியம் என்று அவரை மேடையில் வைத்துக் கொண்டே பீஜேகூறினார். 
பார்க்க வீடியோ ஆதாரம் 
 
அது போல் தான் இட ஒதுக்கீட்டுக்கான மாநாடு என்பதால்அழைக்கப்பட்டவர்களில் இதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் வந்தால்அவர்களிடம் உறுதி மொழி கொடுக்கச் சொல்ல வேண்டும் என்று தவ்ஹீத்ஜமாஅத் முடிவில் இருந்தது. ஆனால் அழைப்பு கொடுக்கப்பட்டவர்களில்அதிகமானவர்கள் வரவில்லை. வந்த பிரமுகர்களில் ஹாரூன் அவர்கள்நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பல வகையில் உதவ முடியும்நிலையில் இருந்தார். துறைமுகம் ஹாஜா, தேசிய லீக் பஷீர் ஆகியோர் மத்தியஅரசாங்கத்தில் வாதாடும் இடத்தில் இல்லை. எனவே தான் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் இட ஒதுக்கீடுக்காக நான் எல்லா வகையிலும் குரல்கொடுப்பேன். தர்காவாதியாக நான் இருந்தாலும் இட ஒதுக்கீடு கோரிக்கையைஆதரித்ததால் கலந்து கொண்டேன் எனக் கூறினார். அதன் பின்னர் பீஜே எழுந்துஹாரூன் அவர்கள் சொன்னபடி இட ஒதுக்கீடு கொடுத்தால் தான் ஓட்டு என்றநிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். 
தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு நுணுக்கமான வேறுபாடுகளைக் கவனத்தில்கொண்டு தான் தவ்ஹீத் ஜமாஅதின் நிலைபாடு அமைந்துள்ளது. இடஒதுக்கீடுக்காக கூடிக் கலைவது இதன் நோக்கம் அல்ல. அந்தக் கோரிக்கையைவென்றெடுப்பதற்காக தொடர் முயற்சிகளை தவ்ஹீத் ஜமாஅத் விட்டு விடாது. 
கருணாநிதியோ ஜெயலலிதாவோ மாநாட்டுக்கு வந்து இட ஒதுக்கீடுக்க்காக நாங்கள் முயற்சிப்போம் என்று வாக்குறுதி அளிக்க விரும்பினால் அதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கும். அதே நேரத்தில் மாலை சால்வை உள்ளிட்ட விஷயங்களில் சமரசம் செய்யாது !

Wednesday, August 8, 2012

மணித நேயத்திற்கு எதிராக செயல்பட்ட ம.ம.க மற்றும் த.மு.மு.க கட்சியினர்


நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பஷீரப்பா தெருவை சார்ந்த ஹயாத் முகம்மது ஈஸா (வயது 19) என்பவர் தினக்கூலி அடிப்படையில் பிளம்பிங் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். 

இவர் கடந்த 03.08.2012 வெள்ளிக்கிழமை பகல் 12 மணியளவில் திருநெல்வேலி பாளையங்கோட்டை சமாதானபுரம் அருகில் உள்ள ஹோண்டா மோட்டார் வாகன புதிய கட்டிடத்தின் மாடியில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் கயிறு கட்டி வேலை செய்து கொண்டிருந்த போது ஆர்க் கன்சல்டிங் பில்டர்ஸ் நிறுவனத்தின் கட்டிட பொறியாளர் குமார் மற்றும் மேற்பார்வையாளர் அருள்இ ஆகியோரின் கவனக்குறைவால் கயிறு அறுந்து விழுந்து தலையில் அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

உடனடியாக அவரது உடல் அருகில் உள்ள பெல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

 

சம்பவத்தை கேள்விபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளையம்;இ பாளையங்கோட்டை கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெல் தனியார் மருத்துவமனையில் பெருந்திரளாக குழுமினர். 

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். மேலும் கட்டிட பொறியாளர் குமார்இ பார்ட்னர் ஆதித்தன் மற்றும் கட்டிட மேற்பார்வையாளர் அருள்இ ஆகியோரிடம் இறந்து போனவர் குடும்பத்திற்கு ரூ.20இ00இ000ஃ- (இருபது இலட்சம்) உடனடியாக வழங்க வேண்டும் என பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் கட்டிட பொறியாளர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோருக்கு ஆதரவாக அ.தி.மு.க-வின் முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க நெல்லை மாவட்ட த.மு.மு.க மற்றும் ம.ம.க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து இப்பிரச்சினையில் தலையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தார்கள் விரும்பாத நிலையில் நஷ்ட ஈட்டுத் தொகையை குறைக்கும் வகையிலும்இ பிரச்சினையை திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இந்த செயல்பாடு சம்பவ இடத்தில் குழுமியிருந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உறவினர்கள் ஊர் ஜமாஅத்தார்கள் மற்றும் இன்னபிற முஸ்லிம் அமைப்புகள் மத்தியில் மிகப்பெரும் வெறுப்பையும்இ கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இறந்தவரின் குடும்பத்தாருக்கு இருபது லட்சம் நஷ்டஈடு தர வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கை விடுத்த போது, மாமா கட்சியினர் தங்களது கூட்டணிக் கட்சியான அதிமுக நிர்வாகிகளிடம், ‘இவர்களுக்கு (தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு) அவ்வளவு விபரம் போதாது. 

ஒரு லட்சம் கொடுத்து பிரச்சனையை முடித்து விடுங்கள்’ என்று கூறியுள்ளனர். நஷ்டஈட்டுத் தொகையைக் குறைப்பதன் மூலம் கம்பெனி முதலாளிக்கு லாபம் ஏற்படுத்திக் கொடுத்தால் அதற்காக குறிப்பிட்ட தொகையைக் கமிஷனாகக் கொடுப்பார்கள் என்பது தான் இதற்குக் காரணம்.

பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பத்தாருக்கு ஆதரவாகக் களமிறங்க வேண்டியவர்கள், கமிஷனைக் கருத்தில் கொண்டு, முதலாளிகளுக்கு ஆதரவாகக் களமிறங்கிய த.மு.மு.க மற்றும் ம.ம.க நிர்வாகிகளுடைய நடவடிக்கைகளைக் கண்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உறவினர்கள் மற்றும் ஊர் ஜமாஅத்தார்கள் கடும் வெறுப்படைந்தனர். 

தேவையில்லாமல் நீங்கள் இதில் தலையிட வேண்டாம் உடனடியாக இந்த இடத்திலிருந்து வெளியேறிவிடுகள் என்று தமுமுகவினரை விரட்டி, காரிதுப்பும் அளவிற்கு தமுமுக மற்றும் மமக மாவட்ட நிர்வாகிகள் நடந்து கொண்டனர்.

இந்நிலையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் இன்னபிற முஸ்லிம் அமைப்புகளின் நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கபட்ட குடும்பத்தாருக்கு ரூ.6இ00இ000ஃ- (ஆறு இலட்சம்) வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. 

மறுநாள் இறந்தவரின் உடல் முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளையம் கிளை ஆம்புலன்ஸ் மூலம் இறந்தவரின் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

மேற்கண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மணிதநேய பணியை பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களும் ஊர் ஜமாஅத்தார்களும் மற்றும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டினார்கள்.

அல்லாஹ்விற்காக இந்தக் காரியத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் தொடர்ந்து ஈட்டுத்தொகை கிடைப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட மாமா கட்சியினர், பத்திரிகையாளர்களிடம் தாங்கள் தான் இறந்தவருக்கு ஆதரவாக முற்றுகையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 

இதனால் மறுநாள் வெளியான ஒரு தமிழ் நாளிதழில் நமது ஜமாஅத் சகோதரர்கள் முற்றுகையிட்டிருந்த படத்தை வெளியிட்டு தமுமுக, மமகவினர் முற்றுகையிட்டதாக செய்தி வெளியிட்டது. 

மாமா கட்சியினரின் இந்த துரோகச் செயலையும் பத்திரிகையில் செய்தியைத் திரித்துக் கூறிய இழிசெயலையும் கண்டு மக்கள் கொதித்துப் போயினர்.

இவர்களின் கட்ட பஞ்சாயத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது ...

இவர்களின் இந்த இழிவான செயல்களுக்கு இறைவன் மிக விரைவில் ஒரு முற்று புள்ளி வைப்பான் ..இன்ஷா அல்லாஹ்...

Saturday, August 4, 2012

ஜமாத்தே இஸ்லாமி , இக்வான் சகோதரர்களுக்கு மனம் திறந்த மடல்

உலக முஸ்லிம்களை காபிர்கள் என்று சொல்லும் வழிகெட்ட கொள்கையை கொண்டுவந்ததே வழிகெட்ட இக்வானிய கூட்டம்தான். செய்யித் குதுப் உலக முஸ்லிம்கள் அனைவரும் காபிர்கள் ஆகிவிட்டனர் என்றார் ஆனால் இன்று வந்த வழிகெட்ட கர்ளாவி செய்யித் குதுப் வழிகேடர் என்றார். மேலும் வழிகேட்ட மவ்தூதி தஜ்ஜாலின் வருகையை மறுத்துள்ளார், எவருமே மறுக்க முடியாத தஜ்ஜாலின் வருகை பற்றிய "முதவாதிரான" ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் தவறாக சொல்லிவிட்டதாக நபி (ஸல்) அவர்களை பிழை காண்கிறார் மவ்தூதி.

இக்வாங்களின் தலைவர் உமர் தில்மிசாணி கபுர்வணக்கம் செய்வது சரி என்கிறார். எடுத்த எடுப்பில் யாரையும் நாம் வழிகேடு என்று சொல்லவில்லை உசூல் விதிகளை பேணி ஆய்வு செய்து அதில் பிழை வந்தால் வழிகேடு அல்ல ஆனால் இஸ்லாத்தில் "மா உளிம பி அத்தீனி பிள்ளரூரா " என்ற மிகவும் அறியப்பட்ட விடயங்களில் அத்து மீறி இஜ்திஹாத் செய்து வலிகேடான பத்வா சொல்லும் கூட்டத்தையே நாம் வழிகேடு என்று சொல்கிறோம்.

பன்றிக்கொழுப்பு ஹராம் என்று அறியப்பட்டது அதை ஹலால் என்று கர்ளாவி சொல்கிறார், கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்து சொல்வது ஹராம் இதை கூடும் என்று கர்ளாவி சொல்கிறார், அல்லாஹ்வுக்கு அர்ஷ் எனும் சிம்மாசனம் உள்ளது என்று கருத்து வேறுபாட்டுக்கு அப்பாற்பட்ட விடயத்தை செய்யித் குதுப் இல்லை என்கிறார், இது இது வழிகேடு இல்லையா ? நன்மை தீமை அளக்கும் மீசான் எனும் தராசு பற்றி அல்லாஹ் சொல்லியிருக்க அது இல்லை என்று செய்யித் குதுப் அல்லாஹ்வுக்கு பாடம் சொல்லிகொடுக்கிறார் இது வழிகேடு இல்லையா ?..............

பெண்களுக்கு கைகொடுப்பது ஹராம் என்று அறியப்பட்ட விடயம் ஆகும் அதை கூடும் என்று கர்ளாவி சொல்கிறார் இது வழிகேடு இல்லையா ? இந்த வழிகேட்டை சாதாரண மஸாயில் பிரச்சினை என்று வழிகெட்ட மன்சூர் சொல்கிறார் இது வழிகேடு இல்லையா ? சியோநிசத்துடன் முஸ்லிம்களுக்கு மார்க்க ரீதியான பிரச்சினை இல்லை அரசியல் ரீதியான பிரச்சினைதான் உள்ளது என்று யூத சியோனிச கொள்கைக்கு வக்காலத்து வாங்குகிறார் கர்ளாவி இது வழிகேடு இல்லையா 
?.....

பன்றி கொழுப்பு , இசை, கிறிஸ்மஸ் வாழ்த்து , புத்தாண்டு வாழ்த்து, பெண்களுக்கு கை கொடுத்தல், என்பவை ஹலால் என்று சொல்லும் ஜமாத்தே இஸ்லாமி இக்வான் அதை எதிர்க்க ஒன்றும் இல்லை என்று இந்த கூட்டம் கருதினால் இவ்வாறான எந்த வழிகேடும் இல்லாத தவ்ஹீதை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் ?......

உலக முஸ்லிம்கள் அனைவரும் ஜாஹிலிய கால காபிர்கள் நிலையை அடைந்த காபிர்கள் என்று செய்யித் குதுப் சொன்னது வழிகேடு இல்லை என்று ஜமாத்தே இஸ்லாமி கூட்டம் கருதினால் இவ்வாறான் எந்த வழிகேடும் இல்லாத தவ்ஹீதை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும் ?......

கபுர்வணக்கம் சரி என்று சொல்லும் இக்வானின் தலைவர் உமர் தில்மிசாணி வழிகேடர் இல்லை என்றால் அல்லாஹ்வுக்கு இணைவைப்பது வழிகேடு இல்லை என்றால் இந்த இணைவைப்புக்கு எதிராக எந்த பிரச்சாரமும் செய்யாத இக்வான்கள் இப்படியான ஷிர்க் இல்லாத தவ்ஹீத் வாதிகளுடன் ஏன் எதிர் பிரச்சாரம் செய்கின்றனர் ?.......

மேலே சொன்ன வற்றில் பன்றி கொழுப்பு, இசை, கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வது , புத்தாண்டு கொண்டாடுவது கூடும் கபுர்வனங்குவது சரி என்று சொல்வது தஜ்ஜாலின் வருகை இல்லை என்று சொல்வது, அன்னிய பெண்ணுக்கு கைகொடுப்பது கூடும், அல்லாஹ்வின் அர்ஷ் அல்லாஹ்வின் மீசான் இல்லை என்று சொல்வது பாரதூரமாக எதிர்க்க வேண்டிய விடயங்கள் இல்லை என்றால் மற்ற விடயங்களை விட பாலஸ்தீன விடயத்தில் அதிக தீவிரம் காட்டும் ஜமாத்தே இஸ்லாமி இக்வான்கள் பலஸ்தீனை ஆக்கிரமித்திருக்கும் சியோனிச யூதர்களுடன் மார்க்க ரீதியான பிரச்சினை எதுவும் இல்லை என்று யூசுப் கர்ளாவி சொன்னதை கூட ஏற்றுகொள்வீர்களா ? அது வழிகேடு இல்லையா ?......

இவை எல்லாம் வழிகேடு இல்லை என்றால் எதற்காக கிளை விடயமான அரசியலில் அதிக தீவிர போக்கு கொண்டு மாற்று கட்சிகளை தீவிரமாக விமர்சிக்கின்ரீர்? அதற்காக சண்டை பிடிகின்ரீர், கிளை விடயமான அரசியலில் பேதம் கொண்ட சகோதரர்களை கொலை செய்கின்றீர் ?.....

இதுதான் உங்கள் கொள்கை என்றால் ஜமாத்தே இஸ்லாமி இக்வான்கள் வழிகேடர்கள் என்று சொல்வதில் கடுகளவு சந்தேகம் கூட எமக்கு கிடையாது, நீங்கள் இந்த கொள்கை சரி என்று வாதிக்கும்வரை உங்கள் கொள்கை வழிகேடே ......!

எப்போது இஸ்லாத்தின் அடிப்படையை சாதாரண மஸாயில் என்றும் இஸ்லாத்தின் கிளை விடயமான அரசியலை அடிப்படை போன்ற எண்ணத்துடனும் ஏற்று அதன்படி உங்கள் வழிகெட்ட தாவாவை செய்துவருகிண்றீர்களோ அப்போதே நீங்கள் வழிகேடர்கள் என்பதில் சந்தேகம் இல்லை ....!

அல்லாஹ் இவர்களுக்கும், இவர்களை நம்பியவர்களுக்கும் நேர்வழியை வழங்க வேண்டும் என பிராத்திக்கின்றேன் 





நன்றி -உங்கள் சகோதரன் : அஹ்மத் ஜம்ஷாத்

நக்கிப்பிழைக்கும் தமுமுக


பாகிஸ்தானில், கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது என்று ஒரு பொய்யை பரப்பி, அதன் மூலம் இங்குள்ள பெரும்பான்மை சமூகத்தை தூண்டி விடக்கூடிய விஷமமான செயலை கடந்த வாரம் தினத்தந்தி செய்தது.
அங்குள்ள இந்து பெண்கள் ஆயிரக்கணக்கில் கடத்தப்பட்டு முஸ்லிம்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள் என்றும், இந்தியாவில் முஸ்லிம்கள் எல்லா சலுகைகளையும் பெற்று சந்தோஷமாக வாழ்கிறார்கள் எனவும் கூறி, தனது பாஜக ஊதுகுழல் வேலையை வெளிப்படையாகவே செய்திருக்கிறது தினத்தந்தி !
இது குறித்து தமிழக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தினத்தந்தியை முழுமையான முறையில் புறக்கணித்து, அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற இறுமாப்புடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இரண்டு மாத செயல் திட்டம் வகுத்துள்ளது, அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், அரசியலில் கால் பதித்து அதன் மூலம் கிடைக்கும் விளம்பரத்தையும் சுயலாபத்தையுமே தமது ஒரே லட்சியமாக கொண்டு செயல்பட்டு வரும் தமுமுக போன்ற கேடுகெட்ட இஸ்லாமிய பெயர்தாங்கிகள், வழக்கம் போல இதற்கும் முட்டுக்கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.


தினத்தந்தியை கண்டித்தது போலவும் இருக்க வேண்டும் என்பதற்காக அதிரடியாக "தினத்தந்திக்கு தமுமுக மறுப்பு"என்று தலைப்பு இட்டு விட்டு, உள்ளே மிகவும் மென்மையான முறையில் தங்கள் மறுப்பை சொல்லிய விதத்தை படிக்கும் எவரும் புரிவார்கள், இவர்களின் கேடு கெட்ட பச்சோந்தித்தனத்தை.
மேலும்,
ஹிந்துக்களிடையே ஒரு வெறுப்பை ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக அவர்களை தூண்டி விட வேண்டும் என்று விரும்புகிற ஆர்எஸ்எஸ்ஸுக்கும், பாஜகவுக்கும் ஊதுகுழலாக செயல்பட்டு தங்களது காவி சிந்தனையை வெளிப்படையாகவே காட்டியுள்ள   தினத்தந்தியின் அந்த செய்திக்கு இந்த கேடுகெட்ட தமுமுக கொடுத்த மறுப்பின் லட்சணம்..

""பாகிஸ்தானில் வாழும் எமது தொப்புள் கொடி உறவான சிறுபான்மை இந்துக்கள் சந்திக்கும் இன்னல்களை குறித்து அத்தலையங்கம் கவலை தெரிவித்தது நியாயமே. அதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.""

முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதோ பற்றியோ, நமது மார்க்க கொள்கை கேலிக்குரியதாக ஆக்கப்படுவது பற்றியோ எள்ளளவும் அக்கறையில்லாதவர்கள் தான் இந்த தமுமுகவினர் என்பதை கடந்த பல வருடங்களாக பல சம்பவங்கள் நமக்கு உணர்த்தியுள்ளன. 

முஸ்லிம்களுக்கான இட ஒதிக்கீட்டை கூட தர விரும்பாமல் அரசியல் கட்சிகள் இழுத்தடித்த போது அதை கண்டு முஸ்லிம் சமுதாயமே வெகுண்டேழுத போது, இந்த கழிசடைகள் மட்டும், அது ரோஸ்டர் முறையில் கிடைக்கும் என்று கூறி அப்போதைய திமுக அரசுக்கு வால் பிடித்து சுயலாபம் அடைந்தது முதல், 
பாபர் மஸ்ஜித் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்பது முதல், 
தானே புயல் பாதிப்பிற்கு அம்மா செய்துள்ள நிவாரண உதவிகளை பார்க்கிற போது எங்கள் ஊரிலும் இது போன்று புயல் வந்து ஊரையெல்லாம் அடித்துக்கொண்டு போகாதா என்று ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படுகிறான் என்று கூறி ஜெயலலிதாவின் வாலை நக்கியது வரை, இவர்களின் அரசியல் ஜால்ரா பட்டியல் மிக நீளம்.

அந்த பட்டியலில் இப்போது தினத்தந்தியின் விஷமதனதிற்கு இவர்கள் அடித்துள்ள ஜால்ராவும் இடம் பிடித்துள்ளது. 
இந்த சமுதாயம் இவர்களை துடைப்பக்கட்டையால் துரத்துகிற காலம் வெகு தொலைவில் இல்லை என்பது மட்டும் தெரிகிறது.. இன்ஷா அல்லாஹ்!

இஸ்லாத்திற்கு எதிராக வேகமாக வளர்ந்து வரும் ஒரு கட்சி !


தமுமுகவும் அதன் செல்லப்பிள்ளையான மமகவும் திருந்துவார்கள் என்கிற கொஞ்ச நஞ்ச எதிர்ப்பார்ப்பையும் தவிடு பொடியாக்கும் வண்ணம் இவர்களது சமீபத்திய செயல் அமைந்துள்ளது.

இஸ்லாத்திற்கு எதிரான, அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் மாபாதக செயலை தலைமை தாங்கி நடத்தி, நரக படுகுழிக்கு தங்களை முன்பதிவு செய்து வருகின்றனர் இவர்கள். இணைப்பை பார்க்கவும்.

அல்லாஹ்வுக்கு இணை வைத்தால் என்ன? ஓட்டு கிடைக்கிறதா? அதை மட்டும் பார், என்பது தான் அவர்கள் பைலாவோ என்னவோ..

ஆர்எஸ்எஸ் , சிவசேனா பட்டியலில் இந்த சமுதாயத்தை இது போன்ற நயவஞ்சகர்களிடம் இருந்தும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
புனித ரமளானில் அனைவரும் இதற்காக துஆ செய்யுங்கள்.

Monday, July 9, 2012

இஸ்லாமிய குற்றவியலை கேவலப்படுத்தும் தமுமுக வும், ஜவாஹிருல்லாஹ்வும்


கடந்த 02ம் தேதி சென்னை சாந்தோம் மேல் நிலைப்பள்ளியில் மரண தண்டனை எதிர்ப்பு மாநாடுஎன்ற ஒரு நிகழ்ச்சி நடை பெற்றது.
அரசியல்வாதிகள் உற்பட பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் நமது மானசீக தலைவர் (?) ஜால்ரா மன்னர் ஜவாஹிருல்லாஹ்வும் கலந்து கொண்டார்.
மரண தண்டனையை எதிர்த்து நடத்தப்பட்ட இந்தமாநாட்டில் பேராசிரியரும் கலந்து கொண்டு மரண தண்டனையைத் தடுக்கப் பாடுபடுகின்றார். ஒரு பக்கம் ஜெயலதிதாவுக்கு ஜால்ரா. மறுபக்கம் சமுதாயத்திற்கு துரோகம்இதைத் தாண்டி சாமியார்களிடம் ஆசி வாங்குதல்ஜெப சீடி க்களை வெளியிடுதல். நடிகன் விஜய்க்கு பொன்னாடை போர்த்தி அழகு பார்த்தல்,மவ்லிது கூட்டங்களுக்கு போஸ்டர் அடித்து கலந்து கொள்ளுதல்நடிகர் ரசிகர் மன்றங்களுடன் ஜால்ரா என்று இது வரைக்கும் இவர்கள் செய்யாதஅயோக்கியத்தனங்கள் இல்லை.
இப்போது இவர்கள் கையில் எடுத்திருக்கும் செயல்பாடு மார்க்கத்தின் சட்ட மூலத்தையே கேள்விக் குறியாக்கி,கேவலப்படுத்திஉலகமே போற்றும் இஸ்லாமிய மார்க்கத்தின் குற்றவியல் தண்டணையைகேவலப்படுத்துவதாக அமைந்துள்ளது.
தீவிரவாதிகளான விடுதலைப் புலிகள் அமைப்பினால் இந்திய நாட்டின் பிரதமர் ராஜுவ்காந்தி கொலை செய்யப்பட்டார். ராஜுவ் காந்தி கொலை வழக்கில் நளினி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு பெரும்பாலும் மரண தண்டனை நிறைவேற்றும் நிலை இருந்துவருகின்றது.
தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்களை காப்பாற்றஅதிலும் விடுதலைப் புலிகளைக் காப்பாற்ற வைக்கோ போன்றவர்கள் எடுத்துக் கொண்ட முக மூடிதான் மரண தண்டனை எதிர்ப்புக் கோஷம்.
ஒரு பக்கம் தீவிரவாதத்திற்கு எதிராக பேசுவதாகவும்,பிரச்சாரம் செய்வதாகவும் நடித்துக் கொண்டிருக்கும்ஜவாஹிருல்லாஹ்வைக்கோ போன்ற சைக்கோக்கள் கொலைகொள்ளைகுண்டு வைப்புதீவிரவாதம் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களை காப்பாற்ற வேண்டும் என்று மறுபக்கம் வெற்றுக் கூச்சல் போடுகின்றார்கள்.
பாதிக்கப்பட்டவனின் இடத்தில் இருந்து சிந்திக்க வேண்டியவர்கள் கருணை மனு என்ற பெயரில் குற்றவாளியை விடுதலை செய்ய வேண்டும் என்று கூச்சலிடுகின்றார்கள். வைக்கோவின் உடன் பிறப்புகள் அல்லது சொந்தக் காரர்கள் அல்லது ஜவாஹிருல்லாஹ்வின் சொந்தங்கள் யாராவது கொலை செய்யப்பட்டால் அல்லது குண்டு வெடிப்புக்களில் சிக்கி உயிரிழந்திருந்தால் அவர்களை இவர்கள் மண்ணிக்க வேண்டும் என்று பொதுக் கூட்டம் போடுவார்களாமாநாடுகள் நடத்துவார்களா?மேடைகளில் முழங்குவார்களா?
மரண தண்டனையை ரத்து செய்யக் கூடாது ஏன்?
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் உணர்வு இதழில் எழுதப்பட்ட தலையங்கத்தை சில மாற்றங்களுடன் இங்கு வெளியிடுகின்றோம்.
தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் (?) ஜவாஹிருல்லாஹ் போன்ற ஜால்ரா வாதிகள் போராடிவரும் வேளையில்,தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக் கூடாது என்றுஓய்வு பெற்றுள்ள உச்சநீதிமன்ற நீதிபதி லகோதி சொல்லியுள்ளார். இதை ஒரு கருத்தாக மட்டும் சொல்லாமல் அதற்குத் தேவையான வாதங்களையும் அடுக்கடுக்காய் வைத்துள்ளார் லகோதி.
தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டுகளில் எத்தனையோ அப்பாவிகள் உயிரிழந்து இருக்கின்றனர். அந்த அப்பாவி மக்களுக்கு இந்தத் தீவிரவாதிகளால் உயிர் கொடுக்க முடியுமாகொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மறந்து விட்டு தண்டனை பெறப்போகும் ஒரு நபரைப் பற்றி மட்டுமே நாம் சிந்திக்கும் நிலை உள்ளது” என்று கூறி தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரும் மனித உரிமை அமைப்புகளுக்கு விடையளிக்க முடியாத வினாவை எழுப்பியுள்ளார் லகோதி.
ஒரு குற்றவாளியைத் தூக்கில் போட்டு விடலாம். ஆனால் அவனுக்கு வாழ்க்கை கொடுக்க முடியுமா?”என்று சிலர் கேட்கிறார்கள். இந்தக் கேள்வியை அவனை தீவிரவாதச் செயலுக்குத் தூண்டிவிடும்நபரைப் பார்த்து கேட்க வேண்டும் என்றார் லகோதி. தூக்குத் தண்டனைக் கைதிக்கு ஆதரவாக கருணை மனுபோடும் கண்ணியவான்கள் இந்தக் கேள்வியில் உள்ள அர்த்தத்தை சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.
ஒருவன் பத்துப்பேரைக் கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். அவனது தண்டனையை கருணை மனுவின் அடிப்படையில் ரத்துச் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது உலகின் பல நாடுகளிலும் பரவலாகக் காணப்படுகிறது.
கொல்லப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர்மாமனோ மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்குஅளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையை சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறதுஒருவன்மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விட்டால்,அதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண்,பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.
அதே நேரத்தில் கண்ணை இழந்தவன் குற்றவாளியைமன்னித்து விட்டால் குற்றாவளி தண்டிக்கப்பட மாட்டார். அல்லது குற்றவாளியிடம் நஷ்ட ஈட்டைக் கோரி பெற்றுக் கொண்டாலும் குற்றவாளிதண்டிக்கப்பட மாட்டார்.
அது போலவே கொல்லவப்பட்டவரின் வாரிசுகளில்யாரேனும் ஒருவர் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறினால் கூட குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படாது. இது இஸ்லாமியச் சட்டம்.
அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தை பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.
சட்டங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது. பாதிக்கப்பட்டவன் மனநிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.
கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும்சிறைச் சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின்உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.
இந்த நிலைமைக்கு என்ன காரணம்கொலையாளியைஇந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர். குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கியகாரணமாக உள்ளது எனலாம்.
ராஜிவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கருணை காட்டச் சொல்லி சிலர் வேண்டியுள்ளனர். அதுபோல் பாகிஸ்தானில் பயங்கரவாதச் செயல் புரிந்து மாட்டிக் கொண்ட ஒரு இந்தியரைத் தூக்கில் போட வேண்டாம் என்று இந்திய அரசே கருணை மனு போட்டுள்ளது. குறிப்பாக பி.ஜே.பி தலைவர் அத்வானி போன்றவர்கள் இதற்காகபடுபிரயத்தனம் எடுத்துக் கொண்டார்கள்.
பாராளுமன்றத் தாக்குதலுக்கு உதவி புரிந்ததாக பேராசிரியர் ஜீலானி கைது செய்யப்பட்டவுடன்,அப்படிப்பட்டவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று கர்ஜித்த இந்தப் புண்ணியவான்கள்(!) பாகிஸ்தான் நீதி மன்றத்தால் தூக்குத் தண்டனைவிதிக்கப்பட்ட ராஜேந்தர் சிங்குக்கு தூக்கு கூடாது என்கிறார்கள்.
இவ்வாறு நாட்டுக்கு நாடு ஒரு நீதி. இனத்துக்கு ஒரு நியாயம் பேசும் அத்வானி வகையறா – லகோதியின் கருத்தைக் கேட்டாவது திருந்த வேண்டும்.
தேர்ச்சக்கரத்தில் சிக்கி இறந்த கன்றுக்காக தனது மகனையே பலி கொடுத்த மன்னனை மனுநீதிச் சோழன் என்று போற்றுகிறார்கள். ஆனால்இறந்து போன பசுவின் தோலை உரித்தெடுத்த தலித் மக்களை ஹரியானாவில் கொன்று குவித்த சண்டாளர்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறோம். ஆனால் ஒரு மனிதனைக் கொன்ற கொலையாளிக்கு தூக்குத் தண்டனை கொடுப்பதை கடுமையாக எதிர்க்கிறோம்.
கொலையாளியை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொண்டு தூக்குத்தண்டனை கூடாது என்றுசொல்பவர்கள் கொலை செய்யப்பட்டவரையும்அவரது குடும்பத்தாரையும் கவனத்தில் கொள்ளட்டும். கொலையாளியைக் கொல்வதின் மூலம் அப்பாவி மக்களின் உயிர் பாதுகாக்கப்படுகிறது என்கிறது இஸ்லாம். இந்தக் கருத்தை தனது பாணியில் உரக்கச் சொன்ன லகோதி உண்மையில் பாராட்டுக்குரியவர் என்பதில் சந்தேகமில்லை.
பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் அமர்ந்து கொண்டு சட்டங்கள்இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. இஸ்லாமோ – இதைக் கவனத்தில் கொள்கிறது.
அறிவுடையோரேபழிக்குப்பழி வாங்கும் சட்டத்தில்உங்களுக்கு வாழ்வு உள்ளது. (இச்சட்டத்தினால்கொலை செய்வதிலிருந்துவிலகிக் கொள்வீராக! (அல்குர்ஆன் 2:179)
மார்க்கத்திற்கு விரோதமாக நடப்பதுடன் மார்க்க செயல்பாடுகளையும் கேள்விக்குறியாக்கி இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை கேவலப்படுத்தும் தமுமுக மற்றும் ஜவாஹிருல்லாஹ் வகையராக்களை சமுதாய சொந்தங்கள் அடையாளம் கண்டு கொள்ளுமாறு அன்பாய் வேண்டுகின்றோம்.

மீண்டும் சமுதாய பணியில் தமுமுக...(?)தனது சகோதர இயக்கமான பாஜகவுடன் கைகோர்த்த வாத்தி

 அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவாக செயல்படுவதிலிருந்து விலகி, பா.ஜ.கவின் சிறுபான்மைப் பிரிவாக மாறி அவர்களுடன் கூட்டணி வைக்க திட்டமா? – வெளிவராத உண்மைகள்!!

மாமல்லபுரத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளது தலசயன பெருமாள் கோயில். இதை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கும் முடிவை தொல்லியல் துறை எடுத்துள்ளது. இந்தக் கோவிலை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக்கூடாது. அவ்வாறு அறிவித்தால் அந்தக் கோவிலில் நடக்கக்கூடிய பூஜைகள் தடைபட்டுவிடும்; அதுமட்டுமல்லாமல் அங்கு பூஜை செய்ய வரக்கூடிய பக்தர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று சங்பரிவாரங்கள் கூப்பாடு போட்டு வருகின்றனர்.

ஏற்கனவே 6 ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழைய அலைவாயில் கோவில் மத்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் பூஜைகள் இன்றி பாழடைந்து கிடக்கும் நிலையில், 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பலமுறை புதுப்பிக்கப்பட்டு பக்தர்களின் அனுதின வழிபாட்டில் உள்ள கீர்த்திக்குரிய தலசயன பெருமாள் கோவிலை மத்திய தொல்பொருள் துறை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர கடந்த 20.05.2012 அன்று தேதியிட்ட நாளிதழ்களில் விளம்பரப்படுத்தி உள்ளது. இந்தக் கோவிலை மத்திய தொல்பொருள் துறை எடுத்துக் கொள்ள முயற்சிப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது” என்று இந்த கோவிலுக்கு ஆதரவாக கண்டன அறிக்கை விட்டு வருகின்றனர்.

பக்தியின் அடிப்படையில் இவ்வாறு அவர்கள் அறிக்கை விடுவது மேலோட்டமாக அணுகக் கூடிய விஷயம் அல்ல, பழமையான ஆலயங்களை பழமையான கட்டடங்களைப் பாதுகாக்க இந்த நாட்டில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்படி இவ்வளவு காலம் கடந்து விட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களை தொல் பொருள் துறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டத்தின் படியே ஏராளமான கோவில்களும் சில பள்ளிவாசல்களும் இன்னும் பல புராதனக் கட்டடங்களும் மத்திய அரசின் தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.

இப்படி ஒரு சட்டம் இருப்பது நமக்கு உடன்பாடானது அல்ல. பழைய கட்டடங்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மக்களின் கோடான கோடி ரூபாய்கள் பாழாக்கப்படு கின்றன. பழைய கட்டடங்களை இடிப்பது அல்லது அதுவாக விழும் வரை விட்டுவிடுவதுதான் இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு நல்லது. இதுதான் அறிவுப்பூர்வமானது.

ஆனால் இந்தச் சட்டம் இருக்கும் வரை அதற்கேற்ப நடவடிக்கை இருந்து கொண்டுதான் இருக்கும்.
இந்து பக்தர்கள் போராடுவதாக இருந்தால் அந்த சட்டத்தை நீக்கக் கோரி போராட்டம் நடத்துவதை விட்டு விட்டு சட்டப்படி ஒரு கோயிலை புராதனச் சின்னமாக அறிவிப்பதை எதிர்ப்பது பயனற்றதாகும். ஆனாலும் அவர்கள் பக்தியின் பெயரால் இப்படி செய்வதில் நமக்கு ஏதும் பாதிப்பு இல்லை.

ஆனால் வேலூர் கோட்டையில் உள்ள பள்ளிவாசலை தொல்பொருள் துறை எடுத்துக் கொண்டுள்ளது. அது போல் அதே கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தையும் எடுத்துக் கொண்டுள்ளது.

ஆனால் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இந்து பக்தர்கள் பூஜை செய்ய அனுமதிக்கப் படுகிறது. ஆனால் பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி இல்லை. இதை எதிர்த்து தவ்ஹீத் ஜமாஅத் உட்பட பல அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியுள்ளன. தமுமுகவும் போராட்டம் நடத்தியது. அப்போது இந்துத்துவா இயக்கங்கள் பள்ளிவாசலை வழிபாட்டுக்கு திறந்து விடக் கூடாது என்று எதிர்ப்போராட்டம் நடத்தின.

அப்படி இருக்கும் போது அதைக் கூட கவனத்தில் கொள்ளாமல் மானம் சூடு சொரணை அனைத்தையும் வந்த விலைக்கு விற்ற ம.ம.கட்சி ஜால்ரா மன்னன் செய்த வேலை ம.ம.கட்சியினருக்கே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அடிக்கும் ஜால்ரா பற்றி மாபெரும் மக்கள் வெள்ளத்தில் தோலுரித்துக் காட்டப்பட்ட பின்னர் சூடு சொரணை இல்லாதவனை அல்லாஹ் பார்க்க மாட்டான் என்று ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய பிறகும் ஜால்ரா தலைவருக்கு ரோஷம் வந்து கொஞ்சம் சமுதாய உணர்வோடு நடப்பார் என்று ம.ம.கட்சியின் தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.

சங்பரிவாரத்துடன் இணைந்து கொண்டு ஜால்ரா மன்னன் ஜவாஹிருல்லாவும் களத்தில் குதித்து தான் ஒரு மானம் கெட்ட ஜென்மம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார்.

மேலே உள்ள புகைப்படத்தில் பிஜேபியின் மூத்த தலைவர் இல.கணேசனுடன் கையோடு கைகோர்த்து போஸ் கொடுப்பது யார் என்று தெரிகின்றதா?

அட! நம்ம ம.ம.கட்சியின் வாத்தியார்தாங்க. இப்போது பிஜேபியுடன் புதிய கூட்டணி அமைத்துள்ளார்கள் போலும்.
கடந்த 28.06.12 அன்று தலசயன பெருமாள் கோயிலை தொல்லியல்துறை கையகப்படுத்தக்கூடாது என்று கூறி அதைக் கண்டித்து நடைபெற்ற தொடர் முழக்க போராட்டத்தில்தான் இந்த கேவலமான இழிசெயலை இவர் செய்துள்ளார். இஸ்லாமியர்களை கருவறுக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்களுடன் அவர்களது கொள்கை நிலைபெற வேண்டும் என்பதற்காக கூட்டுச் சேர்ந்து கைகோர்த்து இவர்கள் போஸ் கொடுக்கின்றார்கள் என்றால் இந்த சமுதாய துரோகிகளை என்ன செய்வது?

நரேந்திர மோடி வந்து இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தாலும் அவனுடனும் இந்த சமுதாய துரோகி கைகோர்த்து இருப்பார் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அந்த அளவிற்கு இவர்களுக்கு பதவி சுகம் தேவைப்படுகின்றது.




வாத்தியார் பா.ஜ.க வின் பினாமியா?:


பா.ஜ.க விடுக்கும் கோரிக்கையை நமது மானம்கெட்ட வாத்தியார் ஏன் வழிமொழிய வேண்டும். அவர் என்ன பா.ஜ.க வின் பினாமியா?. அநேகமாக வரக்கூடிய பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேசிய நீரோடையில் கலக்க திட்டம் தீட்டியுள்ளார்களோ என்னவோ தெரியவில்லை.


அம்மாவை குளிர்விக்க எந்த தியாகம் வேண்டுமானாலும் செய்யத் தயார் :


ஒருவேளை அம்மாவுக்கு ஜால்ரா தட்டும் இந்த ஜால்ரா மன்னன், பா.ஜ,கவுடன் நாம் நெருங்கினால்தான் அம்மா அவர்கள் மனம் குளிரும். அதனால் பா.ஜ.கவுடன் நாம் நெருக்கமாகிவிடலாம் என்று களத்தில் குதித்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை.

இப்படிக் கேவலப்படும் நிலையை அல்லாஹ் இவர்களுக்கு ஏற்படுத்திவிட்டான்.

இவர்களது இந்த செய்கையின் வாயிலாக எந்த அளவிற்கு கேவலாமான வேலையையும் தாங்கள் செய்யத் தயார் என்பதைத்தான் இந்த சமுதாய துரோகிகள் அடையாளம் காட்டியுள்ளனர்.

கொள்கைதான் இல்லை. மற்றவர்கள் திட்டுகின்றார்களே என்ற வெட்க உணர்விலாவது இது போன்ற கேடுகெட்ட செயல்களை செய்யாமல் தவிர்க்கலாமல்லவா? அந்த வெட்க உணர்வையும் இவர் உதிர்த்து விட்டார் என்றால் இனிமேல் இவரை எதைச் சொல்லி, என்ன சொல்லி திட்டுவது? எருமை மாட்டின் மேல் மழை பெய்தது என்ற பழமொழிதான் இங்கு ஞாபகம் வருகின்றது.

இந்த ஜனாஸாவின் அட்டகாசமும், அட்டூழியமும் தாங்க முடியவில்லை. இப்போதுதான் ஓராண்டு முடிந்துள்ளது. இன்னும் 4ஆண்டுகள் பாக்கி உள்ளன. அதற்குள் இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகின்றதோ இந்த ஜனாஸா? இந்த ஜனாஸாவிடத்திலிருந்து இந்த சமுதாயத்தை அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும்.
பாஜகவுக்கு ஜால்ரா அடிப்பது இது முதல் முறை அல்ல பாஜகவின் ஏஜெண்டாக இவர்கள் செயல்பட்ட பல சம்பவங்கள் உள்ளன. ஓரிரு சம்பவங்களை மட்டும் இங்கே சுட்டிக்காட்டுகின்றோம். 

• பாபர் மசூதி விஷயத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறிய கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பை அற்புதமான தீர்ப்பு என்று கூறி வரவேற்று அறிக்கை வெளியிட்டது

• இடஒதுக்கீட்டில் இழைக்கப்படும் துரோகத்தை ஆதரித்து அதற்கு முட்டுக் கொடுத்து ஆளுங்கட்சிக்கு ஜால்ரா தட்டி, முஸ்லிம்களை கருவறுக்கும் வேலையை கையில் எடுத்திருப்பது

• இராமேஸ்வரத்தை புனித நகரமாக அறிவிக்கச் சொல்லி கோரிக்கை வைத்தது
இது போன்ற சம்பவங்களுடன் தற்போது இல.கணேசனுடன் உற்சாகத்தோடு கைகோர்த்து போஸ் கொடுத்திருப்பதையும் இணைத்தால் இவர்தான் தமிழகத்தின் ஏஜெண்டாக இருப்பாரோ! என்ற
சந்தேகம் வலுப்பெறுகின்றதா? இல்லையா?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons