Tuesday, April 10, 2012

19 கூட்டம் 10 ஆக குறைந்த அதிசயம் பாரீர்!


கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு எதிராக 19 இயக்கங்கள் ஒன்றினைந்து ஒரு போஸ்டரை சில இடங்களில் ஒட்டியிருந்ததும் அது தொடர்பாக நமது தளத்திலும் செய்தி வெளியானதும் சகோதரர்களுக்கு நினைவிருக்களாம்.
குறிப்பிட்ட போஸ்டர் தொடர்பாக ததஜ வின் தற்போதைய தலைவர் பி.ஜெ அவர்களும் அவருடைய ஆன்லைன் பி.ஜெ தளத்தில் விரிவான ஆக்கம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வகையில் மீண்டும் ஒரு நோட்டிஸ் வெளிவந்துள்ளது. ஆனால் இப்போது வெளிவந்துள்ள நோட்டிஸில் 09 கூட்டங்களை காணவில்லை.
கிருத்தவர்களுக்கும் தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையில் அண்மையில் இடம் பெற்ற விவாதம் தொடர்பான விவாத டிவிடி க்களை இலவசமாக பெற்றுக் கொள்ள எங்களை நாடுங்கள் என்ற வாசகம் அடங்கிய நோட்டிசுகள் மற்றும் போஸ்டர்கள், ஆட்டோ விளம்பரங்கள் என்று பலவிதத்திலும் இந்த சிடி க்கள் கிருத்தவ மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவது அனைவரும் அறிந்ததே.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன் நோட்டிசுகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
அந்த போஸ்டர்களுக்கும் நோட்டிசுகளுக்கும் எதிராகத் தான் இந்த அயோக்கியர்கள் குறிப்பிட்ட நோட்டிசைப் போட்டுள்ளார்கள்.
19 கூட்டம் பாதி குறைந்தது ஏன்?
தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக திரண்ட 19 கூட்டத்தில் இப்போது 09 கூட்டத்தை காணவில்லை. ஏன்? ஏன்? ஏன்?
அன்று
19 கூட்டம் ஒட்டிய போஸ்டரைப் பாருங்கள்.
இன்று
சிலுவை தூக்கும் 10 கூட்டம் விநியோகம் செய்த நோட்டிசைப் பாருங்கள்.
சிலுவை ஏந்தும் 10 க்கூட்டம்.
வல்ல ரஹ்மானுக்கு பிள்ளை இருப்பதாக கூறி அவன் மீது அபாண்டத்தை சுமத்துவோரிடத்தில் அது தவறு என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பதற்கு பல்வேறு பிரச்சாரப் பணிகளின் வாயிலாக டிஎன்டிஜே களம் கண்டு வருகின்றது.
அவற்றில் ஒரு பகுதி தான் கிறித்தவ பாதிரிகளுடனான தவ்ஹீத் ஜமாஅத்தின் தொடர் விவாதங்கள். இந்த விவாத டிவிடிக்களை இலவசமாக பெற வேண்டுமா? எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்ற வாசகங்களை போட்டு தவ்ஹீத் ஜமாஅத்தினர் வேலுர் மாவட்டம்  பேர்ணாம்பட்டில் ஒட்டிய சுவரொட்டிகளுக்கு கண்டனம் தெரிவித்துத்தான் இந்த துரோகிகள் ஓரணியில் திரண்டு இஸ்லாத்திற்கு எதிராகவும், திருக்குர்-ஆனுக்கு எதிராகவும் களம் கண்டுள்ளனர்.
கிறித்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியிலுள்ள சகோதரத்துவத்தை நாம் சீர்குலைக்கின்றோமாம். இப்படிப்பட்ட விவாதங்களை நடத்தி கிறித்தவ பாதிரிகளின் மனதைப் புண்படுத்துகின்றோமாம். எனவே நம்முடைய இந்த சத்தியப் பிரச்சாரத்தால் புண்பட்டுப் போன கிறித்தவர்களிடத்தில் இவர்கள் மன்னிப்பு கேட்கிறார்களாம்.
இஸ்லாமிய துரோகிகளே! நீங்கள் ஏன் இன்னும் இஸ்லாமிய வேடம் போட்டுக் கொண்டுள்ளீர்கள். அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து ஐக்கியமாகி விட வேண்டியது தானே!
இந்த கேடுகெட்டவர்கள் நம்மை ஒழிப்பதாக நினைத்துக் கொண்டு இஸ்லாத்தையும், திருக்குர்-ஆனின் போதனைகளையும் ஒழிக்க எத்தனித்துள்ளனர். நாம் கிறித்தவர்களது மனதை புண்படுத்தி விட்டதாக சொல்லி இவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்களே! இந்தக் கூறுகெட்ட இஸ்லாமிய துரோகிகளுக்கு சில திருமறை வசனங்களை சுட்டிக்காட்டுகின்றோம். இந்த திருமறையின் வசனம் நாம் அடித்த போஸ்டரை விட கடுமையானதாக இருப்பதால் திருக்குர்-ஆனில் அல்லாஹ் தவறாக சொல்லிவிட்டான். அதற்காக நாங்கள் வருந்துகின்றோம் என்று கூறி இந்த துரோகிகள் போஸ்டர் அடித்து ஒட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
வல்ல இறைவன் தன்னுடைய திருமறையில் கூறிக்காட்டுகின்றான் :
"உஸைர் அல்லாஹ்வின் மகன்'' என்று யூதர்கள் கூறுகின்றனர். "மஸீஹ் அல்லாஹ்வின் மகன்'' என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்அல்குர்-ஆன் 9 : 30
மேற்கண்ட வசனத்தில் “அல்லாஹ் அவர்களை அழிப்பான்” என்று சொல்லிக்காட்டுகின்றானே, இதற்காக கிறித்தவர்களிடத்தில் மன்னிப்புக் கேட்கப்போகின்றீர்களா?
"மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்'' எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். "இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும்உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை'' என்றே மஸீஹ் கூறினார்.
அல்குர்-ஆன் 5 : 72
மேற்கண்ட வசனத்தில் “அல்லாஹ் அவர்களுக்கு நிரந்தர நரகம்” என்று சொல்லியுள்ளானே, அதற்காக வருத்தம் தெரிவித்து அடுத்த போஸ்டர் அடித்து ஒட்டி அவர்களிடத்தில் சரணாகதி அடையப்போகின்றீர்களா?
இறுதி எச்சரிக்கை:
இப்படி அவர்களுடன் சேர்ந்து கொண்டு இஸ்லாத்திற்கு துரோகமிழைப்பீர்களானால், அவர்களுடைய தங்குமிடம் தான் உங்களுக்கும் என்பதை இப்போதைக்கு சொல்லி வைக்கின்றோம்.
தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் நரகத்திற்கு இப்பொழுதே முன்பதிவு செய்து கொள்ளாதீர்கள்.
அன்பின் வாசகர்களே!
இப்போது தெரிகிறதா? இந்த அயோக்கியர்களின் அற்புத ஒற்றுமைக் கோஷம்?

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons