Thursday, July 14, 2011

பிரவுன் ஷுகர் கடத்திய SDPI போராளிகள்(?)!





அரசியலை நமதாக்குவோம், தேசத்தைப் போதுவாக்குவோம் என்ற போலி வாக்குறுதிகளுடன் களமிறங்கியிருக்கும் SDPI யின் முக்கியப் பிரமுகர் செய்த கொலை செயல் கேரள முஸ்லிம்களிடையே மட்டுமின்றி காவல் துறையினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் மதிப்புடைய பிரவுன் ஷுகர் என்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருளைக் கடத்தி தேசத்தைப் பொதுவாக்கியுள்ள்ளார் SDPI யின் முக்கியப் பிரமுகர்.

கேரள மாநிலத்தில் பாலக்காடு அருகில் உள்ள பாரப்பட்டி என்னும் ஊரில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக கேரள போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 29 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் குறிப்பிட்ட அந்த இடத்தில் முகாமிட்டிருந்தது காவல்துறை. அந்த நேரத்தில் அந்தப் பக்கமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது SDPI முக்கியப் பிரமுகர் ஹாரிஸ் என்பவர் உள்ளிட்ட 4 பேர் அந்தக் காரில் இருந்தனர்.இவர்களின் காரை சோதனை செய்த போலீஸார் அந்த வாகனத்திற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பிரவுன் ஷுகர் என்னும் போதைப் பொருள்களை பாக்கெட் பாக்கெட்டுகளாக பறிமுதல் செய்தனர்.சோதனை நடந்து கொண்டிருக்கும்போது, இந்தக் குழுவிற்குத் தலைவனாக செயல்பட்ட ஹாரிஸ் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அதே காரில் தப்பி ஓடி விட்டார். ஹாரிஸை நோக்கி தேடுதல் வேட்டையை தொடர்ந்த காவல் துறையினர் ஹாரிஸ் தப்பிச் சென்ற காரினை மன்னார்க்காடு என்னும் இடத்தில் கண்டெடுத்தனர். அத்தோடு ஹாரிஸ் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர் கேரள காவல்துறையினர்.கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் மொத்த மதிப்பு ரூபாய் 2 கோடி என மதிப்பிட்டுள்ளது கேரள காவல்துறை. தப்பியோடிய ஹாரிஸ் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சார்ந்தவர். கடந்த முறை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காஞ்சிரப்புழா பகுதியில் SDPI யின் சார்பில் 18வது வார்டு உறுப்பினராக நின்றவர் இவர்.இஸ்லாமிய மார்க்கம், இசையை ஷைத்தானின் ஆயுதம் என்று சொல்லும் நேரத்தில் அதையெல்லாம் தூக்கி குப்பையில் எறிந்து விட்டு தங்கள் கட்சிக்கு அதிரடி இசைகளுடன் பாடல்களை உண்டாக்கி இசையை ஹலாலாக்கிய இவர்கள், நடந்து முடிந்த தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தனர். அதுவும் தமிழகத்தில் மூலைக்கு மூலை, தெருவுக்கு தெரு முஸ்லிம் வேட்பாளரை ஆதரியுங்கள், முஸ்லிம் வேட்பாளருக்கு மட்டும் வாக்களியுங்கள், இஸ்லாமிய ஆட்சி அமைய கரம் கொடுங்கள் என்று சொல்லி விட்டு கேரளத்தில் என்ன செய்தார்கள் தெரியுமா?கேரள மாநிலம் ஆலுவா என்ற தொகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தத் தொகுதியில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்றவை இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்திய நேரத்தில், அரசியலை நமதாக்குவோம் கோஷம் போட்ட இந்த போலிகள் மட்டும் ராய் அரக்கல் என்ற கிறித்தவ வேட்பாளரை தங்கள் கட்சியின் சார்பாக நிறுத்தி தங்களின் போலி முகத்தை வெளிப்படுத்தினர்.ஒவ்வொரு இடத்திலும் இவர்கள் செய்யும் அடாவடிகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிக் கொண்டு இருக்கும் நேரத்தில், கேரளாவில் பிரவுன் ஷுகர் கடத்திய ஹாரிஸ் என்னும் SDPI யின் முக்கியப் பிரமுகரால் இவர்களின் செல்வாக்கு இப்போது சரிய ஆரம்பித்துள்ளது.இவர்களின் போலி முகமூடிகளை தமிழகத்தில் இருக்கும் இவர்களின் தொண்டர்கள் புரிந்து கொண்டு இவர்களை தமிழகத்திலிருந்து அறவே அப்புறப்படுத்தினால் தான் இஸ்லாமியர்களின் மீது மாற்று மத சகோதரர்களுக்கு இருக்கு கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் எஞ்சியிருக்கும் என்பது நிதர்சனம்.நன்றி : உணர்வு ஜூலை 15 - 21

1 comments:

திருபுவனம் தஸ்லிம் said...

மற்ற இயக்கங்களை குறை கூறவே TNTJ என்ற ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளது. S.S.U.சைபுல்லா கேட்ட பல கேள்விகளுக்கு தங்கள் இயக்கத் தலைவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லயாமே? அவர் கேட்ட கேள்விகளின் வீடியோ பதிவை அனுப்பி வைத்தால் அதையும் தங்கள் இணையத்தளத்தில் பிரசுரிக்க தங்களுக்கு தைரியம் உண்டா?

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons