Saturday, July 30, 2011

சுயநலத்திற்காக ஜமாஅத்தைப் பயன்படுத்திய சைபுல்லா

             சைபுல்லா ஹாஜாவின் திருகு தாளங்கள் 6

சைபுல்லாஹ் ஹாஜாவின் திருகுதாளங்கள் தொடரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் மாநில நிர்வாகிய இருந்த சைபுல்லாஹ் ஹாஜா அவரின் சில சுயநல நடவடிக்கைகளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து தன் செயல்களை நியாயப்படுத்திக் கொள்வதறகாக வேண்டி சைபுல்லாஹ் ஹாஜா தர்பியா என்ற பெயரில் நடத்திய நிகழ்ச்சியில் அவர் எடுத்து வைத்த சொத்தை வாதங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கியது அப்துந்நாசர் மற்றும் அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸியின் விளக்கங்கள்.
அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளிடம் சுயலாபங்கள் அடைந்தது சம்பந்தமாகவும் அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. அதற்கு விளக்கம் தருகிறேன் பேர்வழி என்று நினைத்துக் கொண்டு அவர் செய்த சில விசயங்களை நியாயப்படுத்தி, மற்றைய சில விசயங்களை இருட்டடிப்பு செய்து விட்டார் சைபுல்லாஹ்.
முபாரக் பள்ளியைத் தவிர நான் வேறு எங்கும் ஜூமுஆவிற்கு போக மாட்டேன்,அதுபோல வேறு யாரும் இந்தப் பள்ளிக்கு ஜூமுஆவிற்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு சுயாட்சி நடத்தி வந்தார் சைபுல்லா. இது சம்பந்தமாக அவரிடம் மக்கள் கேட்ட போது, “ஏன் மேலப்பாளையத்தில் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளியில் லுஹாவைத் தவிர வேறு யாரும் ஜூமுஆ செய்ய முடியுமா?” அல்தாபி மேலப்பாளையத்திற்குள் நுழைய முடியுமா?என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
சம்சுல்லுஹாவைப் பொருத்தவரை அவர் மேலப்பாளையம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளியில் இமாமாக இருக்கிறார். அதற்காக அவர் சம்பளமும் பெற்றுக்கொள்கிறார். ஆக லுஹா அவர்கள் மேலப்பாளையம் பள்ளியில் இமாமாக இருப்பதால் அவர் வெளியிடங்களுக்கு ஜூமுஆ செல்வது குறைவு. ஆனாலும் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை வெளியிடங்களுக்கு ஜூமுஆவிற்கு சென்று வருகிறார். ஆனால் சைபுல்லா முபாரக் பள்ளிக்கு இமாம் அல்ல. ஆனால் நான் வேறு எங்கேயும் ஜூமுஆவிற்கு செல்ல மாட்டேன் என்று மறுக்கிறார்.
அடுத்து அல்தாபி மேலப்பாளையத்திற்குள் நுழைய முடியுமா? என்று ஒரு சிறுபிள்ளைத் தனமான கேள்வியைக் கேட்டிருக்கிறார். பாவம் சைபுல்லா வரலாற்றை மறைக்கப் பார்க்கிறார்.
மேலும் நான் மட்டுமா கட்டுப்பட மறுக்கிறேன், அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி மறுக்கவில்லையா? அவரை நம்பி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தால் அவர் கடைசி நேரத்தில் வயிற்று வலி என்று சொல்லி செல்ல மறுத்துவிடுவார் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார்.



ஆக அல்லாஹ்வின் கிருபையால் இந்த சைபுல்லா தன் உள்ளத்தில் மறைத்து வைத்திருந்த பல கசடுகளை மக்கள் மத்தியிலே வெளிப்படுத்த அவரே ஒரு களம் அமைத்துத் தந்தார் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளைச் சொல்லி ஊர் ஊராக வசூல் செய்து அதிலே ஒரு சொத்து வாங்கி அதைத் தனக்கு வேண்டியப்பட்ட ஒரு தனி நபரின் பெயரிலே பதிவு செய்து ஒரு மிகப்பெரிய மோசடியை சைபுல்லா செய்திருக்கிறார். ஆனால் தவறு செய்பவர்கள் வழக்கமாகத் தங்களின் செயல்பாடுகளை நியாயப்படுத்திக் கொள்வதற்காக ஏதையாவது சொல்லி அவர்களே அவர்கள் செய்த நிறைய தவறுகளை உறுதிப்படுத்திக் கொள்வது போலத் தான் சைபுல்லாவும் செய்தார். இதுபோன்ற நபர்கள் இங்கே மக்களை எளிதாக ஏமாற்றிவிட்டாலும் நாளை ஒரு விசாரனை இருக்கிறது என்பதை மறந்து விடவேண்டாம் என்பதே நமது அறிவுரை.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons