Saturday, June 11, 2011

ஜிஹாதியம் பேசி வன்முறை வளர்க்கும் சகோதரர்களுக்கும் !தனிமனித வெறுப்பில் வயிறு (இயக்கம்)வளர்க்கும் சகோதரர்களுக்கும்


 
சகோதரர் பீ ஜே ! சிறைவாசிகளைக் காட்டிக் கொடுத்ததாக !அவதூறு பரப்பி ஆள் சேர்க்கும் இயக்கங்களின் முகத்திரையை கிழிக்கும் முகமாக அவர் அளித்த பதில்களின் இன்னும் சில பகுதிகளைப்பார்ப்போம்.

“சிறைவாசிகள் தொடர்பாக பலவிதமான அவதூறுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வந்த போதும் தமுமுகவில் இருந்த போது தமுமுக சார்பில் அதிகாரப்பூர்வமாக நான் பதிலளித்துள்ளேன். அதில் ஒரு பகுதியைத் தான் மேலே பார்த்தீர்கள்.

ஆனால் அதன் பின்னர் சிறைவாசிகளை பீஜே காட்டிக் கொடுத்தார் என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வந்த போதும் நான் அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் சென்றடையும் வகையில் பதில் அளிக்கவில்லை. தனிப்பட்ட சில சந்திப்புகளின் போது இது குறித்து கேள்வி கேட்டவர்களுக்கு விளக்கம் அளித்தது தவிர பரவலாக அனைவரையும் சென்றடையும் வகையில் அது குறித்து நான் விளக்கம் அளிக்கவில்லை. இதற்குக் காரணம் இருக்கிறது. இது குறித்து நான் பதில் சொல்லப் போனால் தவறுகள் அனைத்தும் சிறைவாசிகள் மீது தான் என்பது உறுதியாகும். இதன் காரணமாக சிறைவாசிகளின் குடும்பத்தினருக்குக் கிடைக்கும் உதவிகள் குறைந்து விடக் கூடாது என்று நான் கருதியது தான் அந்தக் காரணம்.

அந்த நிலை இப்போது இல்லை. சிறைவாசிகளில் அதிகமானோர் விடுதலை ஆகி விட்டனர். நான் இது குறித்து விளக்காமல் இருந்தால் பீஜே சிறைவாசிகளைக் காட்டிக் கொடுத்தார் என்ற பொய் வரலாற்றில் உண்மையாகி விடும். அவ்வாறு ஆகக் கூடாது என்பதாலும், அனைத்தையும் எழுத்து வடிவில் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் அது குறித்து விரிவாக இப்போது விளக்குகிறேன்.
பாஷா அவர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டனர். அவர்களைக் காவல்துறை கஸ்டடி எடுத்து விசாரித்த போது அவர்கள் கையெழுத்துப் போட்டு அளித்த சட்டப்பூர்வமான வாக்கு மூலத்தில் கோவை குண்டு வெடிப்பு வழக்கிற்கு பீஜே தான் பண உதவி செய்தார் என்று கூறி இருந்தனர்.
இப்படி பீஜேயைச் சம்மந்தப்படுத்தி கூறி இருந்தும் பீஜேயை ஏன் வழக்கில் சேர்க்கவில்லை? இதில் இருந்து பீஜே அரசாங்கத்தின் உளவாளி என்பது தெரியவில்லையா? என்று பிரச்சாரமும் செய்து வந்தனர்.

நாங்கள் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்கப்படாததால் நாங்கள் காட்டிக் கொடுப்பவர்கள் என்றும் பிரச்சாரம் செய்து வரலாயினர்.
அப்துன்னாஸர் மதானி எங்களுக்கு உதவினார்; அடைக்கலம் தந்தார் என்று கைது செய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தினர் கூறியதால் அவர் வழக்கில் சேர்க்கப்பட்டார். ஆனால் பீஜே மீது வலிமையாக நாங்கள் குற்றம் சுமத்தி இருந்தும் அவர் ஏன் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்படவில்லை என்ற பிரச்சாரம் என்னுடைய எதிரிகள் மத்தியில் நன்றாக எடுபட்டது.
இது குறித்த விளக்கத்தை நான் இப்போது தெளிவுபடுத்துகிறேன்.
பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் எனக்கு எதிராக அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் என்னை நிச்சயம் வழக்கில் சேர்க்க முடியும்.
ஆனால் தமுமுகவுக்கும் அல்உம்மாவுக்கும்  இருந்த பகை பற்றியும், அல் உம்மா இயக்கத்தினர் தமுமுக அலுவலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது பற்றியும், தமுமுக கொடிக் கம்பங்களை அவர்கள் வெட்டிச் சாய்த்தது பற்றியும், எங்களைக் கொல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தது பற்றியும் அனைத்தும் அரசுக்கு நன்றாகத் தெரிந்திருந்ததால் எதிரி இயக்கத்தின் மீது பழி சுமத்தவே இதைக் கூறுகின்றனர் என்பது அதிகாரிகளுக்கு எடுத்த எடுப்பிலேயே தெரிந்து விட்டது. இதனால் எங்களில் யாரையும் அவர்கள் வழக்கில் சேர்க்கவில்லை.

ஆனாலும் அரசாங்கம் பீஜேயையும் தமுமுகவையும் வழக்கில் சேர்க்காமல் எங்கள் குற்றச் சாட்டைக் கண்டு கொள்ளாமல் காப்பாற்ற நினைக்கிறது என்று பல முனைகளில் அல்உம்மா தரப்பில் பிரச்சாரம் செய்து வந்ததால் வேறு வழியில்லாமல் இது குறித்து விசாரித்து என்னை வழக்கில் சேர்க்க எஸ்.ஐ.டி (ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம்) முடிவு செய்தனர்.
அதன் படி பீஜே ஜவாஹிருல்லா, ஹைதர் அலி,  பாக்கர் ஆகிய நால்வருக்கு எதிராக நீதி மன்ற அனுமதி பெற்று விசாரனைக்கு அழைத்து வரும் உத்தரவு பெற்றனர். மேலும் தமுமுக அலுவலகம், மற்றும் எனது வீடு ஆகியவற்றைச் சோதனை செய்யும் உத்தரவோடு வந்தனர்.
திடீரென தமுமுக அலுவலகத்தில் ரைடு நடத்தினார்கள். அதே நேரம் எனது வீட்டிலும் ஒரு நாள் முழுவதும் சின்னச் சின்ன துரும்பைக் கூட விடாமல் சோதனை செய்தனர்.
எனது வீட்டில் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. தமுமுக அலுவலகத்திலும் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சில ஃபைல்களையும், அலுவலகத்தில் இருந்த அனைத்து வீடியோ கேஸட்டுகளையும் அள்ளிச் சென்றனர்.

அத்துடன் எங்கள் நால்வரையும் விசாரணைக்காக கோவை வருமாறு உத்தரவிட்டுச் சென்றனர்.
இதன் அடிப்படையில் இந்த வழக்கில் நிச்சயம் சேர்த்து விடுவார்கள் என்பது திட்டவட்டமாக எனக்குத் தெரிந்ததால் குடும்பத்துக்குச் சொல்ல வேண்டிய வஸிய்யத்களைச் செய்து விட்டு மற்ற மூவருடன் கோவை புறப்பட்டேன்.

ஜவாஹிருல்லா, ஹைதர், பாக்கர் ஆகிய மூவர் மீதும் பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் சாதாரணமான குற்றத்தையே சுமத்தி இருந்தார்கள். அவர்கள் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்படுவார்கள் என்பது என்று எனக்குத் தோன்றியது.. ஆனால் நான் நிச்சயம் கைது செய்யப்படுவேன் என்று உள்ளுணர்வு சொன்னது. அவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுக்களை என் மீது கூறி இருந்தனர்.

நாங்கள் நால்வரும் நான்கு நாட்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவின் கஸ்டடியில் வைத்து விசாரிக்கப்பட்டோம்.
குண்டு வைப்பதற்காக ஒரு துணிப் பையில் வைத்து இரண்டு லட்சம் ரூபாய் பீஜே தந்தார். அதை மேலப்பாளையம் புகாரி, (அல்லது முஹம்மது அலி) பீஜே வீட்டுக்குப் போய் வாங்கி வந்தார். அந்தப் பணத்தில் தான் குண்டு வைப்பதற்கான பொருள்களை வாங்கினோம் என்பது பாஷா என் மீது சுமத்திய முதல் குற்றச்சாட்டு, என்னிடம் இரண்டு லட்சம் ரூபாய் வாங்கிச் சென்றதை புகாரியும் உறுதி செய்துள்ளார். இது பொய் என்பதை நான் தான் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்கத் தவறினால் வழக்கில் முதல் குற்றவாளியாகக் கூட நான் சேர்க்கப்படலாம் என்று விசாரனை அதிகாரிகள் தெரிவித்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்டனர்.
நான் இது குறித்து கீழ்க்கண்டவாறு விளக்கினேன்.

பாஷா ஜாமீனில் வெளியே வந்து தமுமுக அலுவலகத்தில் தங்கி இருந்த காலகட்டத்தில் ”நான் அடிக்கடி கைது செய்யப்படும் நிலையில் இருக்கிறேன். அப்படி கைது செய்யப்பட்டால் என் குடும்பம் பாதிக்கப்படக் கூடாது. எனவே இரண்டு லட்சம் ரூபாய் தருகிறேன். அதை உங்களுக்குத் தெரிந்த தொழில் அதிபரிடம் கொடுத்து மாதாமாதம் இலாபம் வரும் வகையில் முதலீடு செய்து உதவுங்கள்’’ என்று கூறி பாஷா இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை என்னிடம் கொடுத்து வைத்திருந்தார். அதைத் தொழில் அதிபர் அன்வர் பாஷா அவர்களிடம் கொடுத்து வைத்து மாதாமாதம் லாபம் வரும் வகையில் அவருக்கு உதவினேன். திடீரென ஒரு நாள் அந்தப் பணம் உடனே வேண்டும் என்று பாஷா கேட்டு அனுப்பினார். உடனே நான் அன்வர் பாஷாவிடம் நிலைமையை விளக்கி பணத்தைத் திருப்பிக் கேட்ட போது நாளை தருவதாகச் சொன்னார். அதன் படி மறுநாள் புஹாரியை (அல்லது முஹம்மது அலியை) வரச் செய்து அந்தப் பணத்தைக் கொடுத்து விட்டேன்.

பிற்சேர்க்கை
மேலப்பாளையம் புகாரியிடம் அதிகாரிகள் விசாரித்த போது அவர் உண்மையை உள்ளபடி சொல்லிவிட்டார். தொழில் செய்வதற்காக பாஷா அவர்கள் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தான் வாங்கினாரே தவிர குண்டு வெடிப்புக்காக பிஜே கொடுத்த பணம் அல்ல என்று புஹாரி அளித்த வாக்கு மூலமும் என்னைப் பொய் வழக்கில் சேர்க்காததற்குரிய காரணங்களில் ஒன்றாகும்.
பாஷா கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தான் திரும்ப வாங்கினார் என்று அதிகாரியிடம் நான் தெளிவுபடுத்தி எனக்கும் அல்உம்மாவுக்கும் உள்ள கடும் பகை, அவர்களின் கொலை மிரட்டல் காரணமாக எனக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு அகிய்வற்றையும் எடுத்துக் காட்டினேன். எங்களுக்குள் இவ்வளவு பகை இருக்கும் போது நான் எப்படி அவர்களுக்கு உதவ முடியும் என்று கூறினேன்.
என்னிடம் விசாரித்தது போலவே மற்ற மூவரிடமும் தனியாக இன்னொரு டீம் இது குறித்து விசாரனை செய்தது. அவர்களும் நான் கூறியது போலவே கூறினார்கள் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன்.
ஆனால் காவல்துறையினர் இதை முழுமையாக நம்பாமல் இதை மேலும் உறுதிப்படுத்த முடிவு செய்தனர். நாங்கள் போலீஸ் கஸ்டடியில் இருக்கும் போது மறுநாள் சென்னைக்குத் தகவல் கொடுத்து அன்வர் பாஷா அவர்களின் அலுவலகத்தின் கணக்குப் புத்தகத்தைச் சோதித்தனர். அதில் பாஷா பணம் முதலீடு செய்த விபரம் அவருக்கு திருப்பிக் கொடுத்த விபரம் ஆகியவை இருந்ததால் நான் சொல்வது முழு உண்மை என்று கண்டு கொண்டனர்.
அன்வர் பாஷா அவர்கள் இந்த விபரத்தை எழுதி வைத்திருக்காவிட்டால் நானும் 14 ஆண்டுகள் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். அல்லது சிறைக்குச் சென்றவுடன் அங்கேயே கொல்லப்படிருக்கவும் கூடும். அல்லாஹ் எனக்குச் செய்த மாபெரும் கருணையால சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக குற்றவாளியாக்கப்படுவதில் இருந்து நான் தப்பிக்க முடிந்தது.
அடுத்து பாஷாவின் மைத்துனர் ஜுபைர் என்பவர் ஒரு வாக்கு மூலம் கொடுத்திருந்தார். அது இதை விடக் கடுமையானது.
அவரிடம் கைப்பற்றப்பட்ட ஜெர்மன் துப்பாக்கி பற்றி காவல் துறை விசாரித்த போது நான் பீஜேயை 36 தாக்கர் தெருவில் உள்ள உணர்வு அலுவகத்தில் சந்தித்த போது ஐம்பதினாயிரம் ரூபாய் பனமும் இந்த ஜெர்மன் துப்பாக்கியும் கொடுத்தார் என்று பாஷாவின் மைத்துனர் கூறி இருந்தார்.
இது குறித்தும் அதிகாரிகள் விசாரித்தனர். ஒருவர் மாற்றி ஒருவராக பல வகையில் விசாரித்தனர்.
உண்மையில் இது பொய் என்றால் குற்றம் சுமத்தப்பட்ட நான் தான் இதை பொய் என்று நிரூபிக்க வேண்டும் என்று காவல் துறையினர் எதிர்பார்த்தனர்..
இது பொய் என்று என்னால் எப்படி நிரூபிக்க முடியும்? பாஷா மைத்துனர் ஜுபைர் கொடுத்த வாக்கு மூலத்தின் நகலைத் தாருங்கள் என்று நான் கேட்டேன். அவர்கள் நகலைத் தந்தனர்.
அவர் பொத்தாம் பொதுவாக இதைக் கூறி இருந்தால் நான் நிச்சயம் பொய் வழக்கில் சிக்கி இருப்பேன்.
ஜுபைர் என்னைச் சந்தித்த மாதத்தையும் வருடத்தையும் குறிப்பிட்டு இருந்தார். (அந்த வருடம் மாதம் இப்போது நினைவில் இல்லை)
அந்த இடத்தில் தான் அல்லாஹ்வின் மாபெரும்  அற்புதம் நிகழ்ந்தது எனலாம்.
புரசைவாக்கம் தாக்கர் தெருவில் தான் உணர்வு அலுவகம் இருந்தது.
பின்னர் இப்ராஹிம் ஷா தெருவுக்கு மாற்றப்பட்டு விட்டது.
அலுவலகம் மாற்றப்பட்டு விட்டாலும் நீதி மன்றத்தில் முகவரி மாற்றம் பற்றிய தீர்ப்பு பெற வேண்டும், அது தாமதமானதால் கடைசி பக்கத்தில் 36 தாக்கர் தெரு என்றே போட்டு வந்தோம். இதைப் பார்த்து விட்டுத் தான் ஜுபைர் தாக்கர் தெரு அலுவலகத்தில் என்னைச் சந்தித்ததாகக் கூறி விட்டார். ஆனால் அவர் கூறிய அந்தக் காலத்துக்கு ஆறு மாதத்துக்கு முன்பே நாங்கள் இப்ராஹீம் ஷா தெருவுக்கு மாறி விட்டோம்.
அதாவது எந்த மாதத்தில் என்னை தக்கர் தெரு அலுவலகத்தில் சந்தித்ததாக பாஷாவின் மைத்துனர் கூறினாரோ அந்த மாதத்தில் உணர்வு அலுவகமே அந்த முகவரியில் இல்லை என்று நான் தெரிவித்தேன்.
எங்களைக் கஸ்டடியில் வைத்துக் கொண்டே சென்னைக்குத் தகவல் கொடுத்து தாக்கர் தெரு முகவரியில் இருந்து உணர்வு எப்போது இடம் மாறியது என்பதை விசாரிக்கச் செய்தனர். அது போல் இப்ராஹீம் ஷா தெருவில் உள்ள உணர்வு அலுவலகத்தில் சென்று சோதித்து வாடகை ஒப்பந்தப் பத்திரத்தைப் பார்த்து நாங்கள் எவ்வளவு காலமாக இந்த முகவரியில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்தனர்.
மறுநாள் நீங்கள் கூறியது உணமை தான் என அதிகாரிகள் என்னிடம் கூறினார்கள். நான்கு நாட்கள் கோவையில் வைத்து விசாரித்து விட்டு என் மீதும் மற்ற மூவர் மீதும் பொய்யாகத் தான் பாஷாவும் அவரைச் சேர்ந்தவர்களும் புகார் கூறியுள்ளனர் என்பதைச் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் உறுதி செய்த பின் எங்கள் நால்வரையும் விடுவித்தனர்.
அப்துன்னாஸர் மதானி தங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இவர்கள் சுமத்திய குற்றச்சாட்டை அவரால் பொய் என்று நிரூபிக்க முடியாததால் அவர் பல காலம் சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவருக்கு குண்டு வெடிப்பில் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதும் இவர்களால் தான் அவர் வழக்கில் சேர்க்கப்பட்டார் என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்.?
அவரைப் போன்ற பெரிய தலைவர்களையும் வழக்கில் சேர்த்தால் பெரும் போர்ராட்டம் நடக்கும் அதனால் தாங்கள் தப்பிக்கலாம் என்று நினைத்து அவரை வழக்கில் இழுத்து விட்டதாக அவர்களைச் சேர்ந்த ஒருவர் பிற்காலத்தில் என்னிடம் கூறினார். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இப்போது அப்துன் நாஸர் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கும் இது போன்ற ஒருவரின் வாக்கு மூலமே காரணம்.
ஆனால் நான் நினைத்துப் பார்க்காத வகையில் அல்லாஹ்வின் உதவி எனக்கு இருந்ததால் இதில் இருந்தும் நான் தப்பித்தேன். அல்லாஹ்வுக்காகப் போராடப் போவதாகச் சொன்னவர்கள் சம்மந்தமில்லாதவர்கள் மீது பழி போடும் அளவுக்குக் கேவலமாக நடந்து கொண்டனர்.
என் மீது இவர்கள் ப்ழி சுமத்தியதால் தான் என்னையும் சாட்சிகள் பட்டியலில் காவல் துறை சேர்த்தது. எனக்கும் பாஷாவுக்கும் பகை தான் இருந்தது என்பதை நீதி மன்றத்தில் சொல்ல வைத்ததற்கு பாஷாவின் பொய்ப் புகார் தான் காரணம்.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பீஜே மட்டும் தான் சிறைவாசிகளுக்கு எதிராகச் சாட்சி சொன்னார் என்று இதையும் பரப்பினார்கள்.
குண்டு வெடிப்பு தொடர்பாக நான் எந்த சாட்சியமும் அளிக்கவில்லை. என் மீது பழி சுமத்தியதால் எனக்கும் இவர்களுக்கும் பகை தான் இருந்தது என்று சொன்னேன். அதுவும் நானாகப் போய் இதைச் சொல்லவில்லை. சிறைவாசிகளின் வழக்கறிஞர் என்னையும் விசாரிக்க வேண்டும் என்று மனு போட்டதன் அடிப்படையில் நீதி மன்றம் எனக்கு சம்மன் அனுப்பியதால் தான் நான் என்னைக் காத்துக் கொள்வதற்காக இவர்களுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்ற உண்மையைக் கூறினேன்.
என் மீது பொய்ப் பழியையும் சுமத்திவிட்டு, எனக்குச் சம்மன் அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுவும் போட்டு விட்டு நீதிமன்ற உத்தரவு காரணமாக பல முறை நீதி மன்றத்துக்கு என்னை அலைய வைத்து விட்டு, நான் குண்டு வெடிப்பு தொடர்பாக எதுவும் கூறாமல் இருந்தும் நான் குண்டு வெடிப்பு வழக்கில் சாட்சி கூறியதாகவும் பரப்பினார்கள்.
இதற்காக பாஷா அவர்கள் பிற்காலத்தில் என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும் மற்ற சிலர் இன்னும் திருந்தவில்லை என்பதைக் காண்கிறேன். அவர்களைத் தான் சிலர் உசுப்பி விட்டுள்ளனர்.
மீண்டும் நான் உறுதி படக் கூறுகிறேன், நான் எந்தக் காலத்திலும் எந்த மிரட்டலுக்கும் பயப்படக் கூடியவன் அல்ல. தவ்ஹீத்வாதியாக் இருப்பவன் யாருக்கும் பயப்பட மாட்டான். (பார்க்க:www.onlinepj.com - அல் உம்மாவுக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?)
தென்னிந்திய முஸ்லிம்கள் மிகப் பொரும் சோதனைகளை எதிர்நோக்கிய கால கட்டத்தில் அனைத்து முஸ்லிம்களுக்காககவும் ஏன் தாழ்தப்பட்ட இனங்களுக்காகவும் குரல் கொடுக்க ஒரு இயக்கத்தை ஏற்படுத்தினார்,பீஜே.
தமுமுக என்ற இந்த இயக்கத்தின் வளர்ச்சி அப்போது இலங்கை ஜமாஅதே இஸ்லாமியையும் அசைத்தது.அந்தளவுக்கு பீஜே உடைய உரைகள் தாக்கம் செலுத்தின. ஆசிம் அலவி என்பவர் மெஸையாவின் வருகையா என்று அல்ஹஸனாத்தில் கட்டுரை எழுதினார்.அவரது தவறான கருத்துக்களுக்கு இஸமாயில் ஸலபி மறுப்பு எழுதினார்.
அன்று தமுமுகவை விமர்சித்த ஜமாஅதே இஸ்லாமி இன்று போற்றிப் புகழ்கிறது.காரணம் பீஜே என்ற தனி மனிதன் மீது கொண்ட காழ்ப்புணர்வு. அவரது ஆளுமை மவ்தூதியின் தாக்கத்தையும் தாண்டி விகசிக்கின்றமையை இவர்களால் தாங்கமுடியவில்லை.
அதே போல் பீஜே அப்போது தன்மீது பரப்பப்பட்ட அவதூறுகளைக் கண்டுகொள்ளாமல் தனது பணியை மிகவும் விவேகமாக செய்து கொண்டிருந்தார்.தமுமுக ஆரம்பிக்கப்பட்டது சமுதாய நலன் காக்கவே.சிறைவாசிகள் பற்றி அப்போது அவர் பேசியிருந்தால் அது அவர்களுக்குப் பாதகமாக இருக்கும் என்ற நல்ல நோக்கில் தன் பெயர் பாதிக்கப்டுவதைக் கூட பொருட்படுத்தாமல் அவர் மவுனம் காத்தார். இந்த நிலையில்தான் விடியல் என்ற இக்வான் இயக்கம் சிலரது அவதூறு பரப்பும் பேட்டிகளை சம்பந்தப்பட்ட பீஜேவிடம் எந்தக் கருத்தும்  கேட்காமல் வெளியிட்டு மகிழ்ந்தது.இவர்கள் எந்தளவு நேர்மையான இஸலாமிய ஆட்சிக்காவலர்கள்(?) என்பது இதிலிருந்தே தெரிகிறதல்லவா?
பீஜே அப்போது தன் மீது சுமத்தப்பட்ட அவதூறுகளை ஏன் கண்டுகொள்ளவில்லை என்பதை இவ்வாறு விளக்குகின்றார்.
“இதற்குக் காரணம் இருக்கிறது. இது குறித்து நான் பதில் சொல்லப் போனால் தவறுகள் அனைத்தும் சிறைவாசிகள் மீது தான் என்பது உறுதியாகும். இதன் காரணமாக சிறைவாசிகளின் குடும்பத்தினருக்குக் கிடைக்கும் உதவிகள் குறைந்து விடக் கூடாது என்று நான் கருதியது தான் அந்தக் காரணம்.
அந்த நிலை இப்போது இல்லை. சிறைவாசிகளில் அதிகமானோர் விடுதலை ஆகி விட்டனர். நான் இது குறித்து விளக்காமல் இருந்தால் பீஜே சிறைவாசிகளைக் காட்டிக் கொடுத்தார் என்ற பொய் வரலாற்றில் உண்மையாகி விடும். அவ்வாறு ஆகக் கூடாது என்பதாலும், அனைத்தையும் எழுத்து வடிவில் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாலும் அது குறித்து விரிவாக இப்போது விளக்குகிறேன்.
தொலைநோக்குப் பார்வையும் சமூக அக்கறையும் கொண்ட அவரது மவுனத்திற்கு இந்த அற்ப இயக்கவாதிகள் எத்தகைய அவதூறுகளைப் புணைந்துரைத்துள்ளார்கள் என்பதைப் பார்க்கும் போது இவர்கள் எத்தகைய அபாயகரமானவர்கள் என்பது புலனாகிறது.
பீஜே மீது இத்தனை அவதூறுகளை அள்ளிவீசி பொய்யான தகவல்களை காவல் துறையிடம் கூறி அவரையும் சிறையில் தள்ள இவர்கள் எடுத்த முயற்சிகளை அல்லாஹ் முறியடித்தான். அதை அவர் இதில் நன்றியுடன் நினைவு கூறியுள்ளார்.
மனித திருப்திகளை எதிர்பாராமல் உண்மையை ஊர்வலமாக்குவோருக்கு அல்லாஹ்வின் உதவி நினையாப் புறத்திலிருந்து கிடைத்துக் கொண்டே இருக்கும். அல்லாஹ்வின் மார்கக்கத்தை அவனுக்காக ப் பிரசாரம் செய்வோரை அவன் கைவிடுவதில்லை........நன்றி  http://kadayanalluraqsa.com/?p=6205

1 comments:

முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரரே ஜெயலலிதா பதவி ஏற்பின் போது மோடி வருகை புரிந்ததை எந்தவொரு அமைப்பும் நேரடியாகவோ (அ) தங்களின் தளத்திலோ (அ) பத்திரிக்கைகளிலோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதாக நான் அறிந்தேன்.இதில் ததஜ எதிலேயாவது தங்களின் எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றதா என்பதை தயவு செய்து தெளிவு படுத்தவும்.
என்றென்றும் அன்புடன்
முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons