
நிகழ்ச்சியின் இறுதியில் எழுச்சியுரையாற்றினார் சகோதரர் செங்கிஸ்கான். இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து என்னை நீக்க முயற்சி எடுப்பதாக சில பொய்யர்கள் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செய்தியை பரப்பி வருகிறார்கள். ஆனால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்பது என்னுடைய இயக்கம் என்பதை நான் இங்கே தெரியப்படுத்திக் கொள்கிறேன். அண்ணனின் அல்லக்கைகள் சிலர் என் மீது வேண்டுமென்றே களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கில் என் நான் உம்ராவுக்குச் சென்றிருந்த போது என்னை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து நீக்கி விட்டதாக புரளி கிளப்பினர். ஆனால் மீண்டும் குறிப்பிடுகிறேன்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்னுடைய இயக்கம். நான் அகில இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இயக்கம் பதிவு செய்து வைத்திருப்பதாக சில விசமிகள் என் மீது களங்கம் சுமத்துகிறார்கள். நான் எழுதிய கடிதத்தை வேண்டுமென்றே வெளிப்படுத்தி என்னை அவமானப்படுத்தி விட்டனர். ஆனால் என்னை எக்காரணம் கொண்டும் என் இயக்கமாகிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து நீக்க முடியாது. என்னுடைய வெப்சைட்டை அபகரித்து வைத்து விட்டால் மட்டும், என் பணிகளை முடக்கி விடலாம் என சில மூடர்கள் என் இயக்கத்தின் பாஸ்வேர்டை முடக்கி வைத்திருக்கிறார்கள்.
இவ்வாறு சகோதரர் செங்கிஸ்கான் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான செங்கிஸ்கான் ஆதரவாளர்கள் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கலந்து கொண்டார்கள்.
0 comments:
Post a Comment