Thursday, June 9, 2011

காசு கேட்டு மாட்டிக்கொண்ட ஜாக்’ஸ் அமைப்பினர் உளறிக்கொட்டி வெளியிட்டுள்ள நோட்டீஸ்களுக்கு பதிலடி.







  • மேலப்பாளையம், திருச்சி, கடையநல்லூர் பள்ளிகள் TNTJ பெயர் சொல்லி வசூல் செய்யபட்டதாக ஆதாரம் இருக்கிறதா என கேட்கும் முட்டாள்களே! அன்றைக்கு TNTJ என்ற அமைப்பே கிடையாது என்பது உங்களுக்கும் தெரியும் தானே! ஜாக் பெயரைச் சொல்லித் தான் அப்போது வசூல் செய்யப்பட்டது. அதில் உறுப்பினர்களாக இருந்த அதிகமான நபர்கள் ஜாக் என்ற மோசடி அமைப்பை வெறுத்த காரணத்தால் அது ததஜ உறுப்பினர்களிடம் இருக்கிறது. இதிலே ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. காரணம் அன்றைக்கு ஜாக் பெயரைச் சொல்லி ஜாக் தான் வசூல் செய்தது. சுன்னத் ஜமாத் பெயரைச் சொல்லி வசூல் செய்தால் தான் அதைப்பற்றிக் கேட்க வேண்டும்.
  • பசுலுல் இலாஹியை வேட்பாளராக அறிவித்த நேரமும், கோட்டாறு இமாம் அரசியலை ஹராம் என்று சொல்லிய நேரமும் சம காலங்கள் என்பதால் தான் அதைக் கொண்டுவர அவசியம் ஏற்பட்டது. பசுலுல் இலாஹியை வேட்பாளராக நிறுத்த ஆர்பாட்டம் நடத்தியதாக நீங்கள் இட்டுக்கட்டிய(?) செய்தியை உங்களால் நிறுபிக்க முடியுமா என இத்தனை காலமும் கேட்டு வந்த இந்த கேடுகெட்ட ஜாக்கினர் இப்போது அதை அந்தர்பல்டியாக மாற்றி கரணம் போடுவதை நாம் இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.



  • கோவை அய்யூப் பீட்டர் அல்போன்சை ஆதரித்து பிரச்சாரம் செய்ததற்கான நோட்டீஸை மட்டும் வெளியிட்டீர்கள்,,அவர் பேசியதை வெளியிட வேண்டாமா என்ற முட்டாள் தனமானவாதத்தை வைக்கிறார்கள். ஆக இவர்கள் அய்யூப் பேசியதை மறுக்கவில்லை என்பது தெளிவாகிறது.
  • மனநோயை விட பதவி வெறி கொடியது என்று உணர்வில் கடிதம் எழுதியதால் தாங்களை மனநோயாளி என்று ஒத்துக் கொண்டார்கள் என்று கூறியிருக்கிறார்கள். பொதுவாக ஒரு மனநோயாளி தன்னை மனநோயாளி என ஒப்புக்கொள்ள மாட்டான். அதேபோல ஒரு திருடன் தன்னை திருடன் என ஒப்புக்கொள்ள மாட்டான். உதாரணம் ஜாக். ஆனால் ஒரு வாசகர் எழுதிய மனநோயை விட பதவி வெறி கொடியது என்ற விவகாரத்தை ஒப்புக்கொண்டு எழுதும் போது, அது கருத்தை எதிர்கொள்வதாக அமையுமே தவிர மனநோயை ஒப்புக்கொண்டதாக அமையாது என இந்த கள்ள அமைப்புத் திருடர்களுக்கு நாம் சொல்லிக்கொள்கிறோம்.
  • மலுக்கு முதலியை இப்போது யார் என்றே தெரியாதவர் போல கேட்கிறார்கள். பிறகு நாம் இதோ போட்டோ போட்டு நிறுபிக்கிறோம். மலுக்கு முதலி ஜாக் வகையறா என்பதற்கான ஆதாரத்தையும் இதோடு வெளியிடுகிறோம். இதன் பின்னர் நோட்டீஸ் அடிக்கும் இந்த பைத்தியக்காரர்கள் மலுக்கு முதலியை நாங்களும் கண்டித்தோம் என்பார்கள். இப்படித்தான் பசுலுல் இலாஹியை ஆதரித்ததாக ஒரு பிட் நோட்டீஸ் காட்ட முடியுமா எனக் கேட்டார்கள்.
  • பிஜே இறைமறுப்புக் கொள்கையில் கொஞ்ச காலம் இருந்த்தாக நீங்கள் சொல்லும் காலம் அவர் ஜாக் அமைப்பில் இருந்த காலம் என்பது தான் சரி. அப்போது நீங்களும் அவரோடு சேர்ந்து காபிராக இருந்தீர்கள் என சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.
  • பிஜே தொழுவதை ஏதாவது ஒரு பள்ளியில் பார்த்ததுண்டா என கேட்கும் இந்த உத்தமர்கள், தமிழகம் அல்லது இந்தியா முழுவதும் இருக்கும் பள்ளியில் ஒரே நேரத்தில் எல்லாரும் பார்க்கும் வகையில் பிஜே தொழ வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் போலும். அப்படி ஒரே நேரத்தில் எல்லா பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் தொழுதால் மட்டும் தான் எல்லார் கண்களிலும் படமுடியும். ஆனால் அது பிஜேவாலும் முடியாது, யாராலும் முடியாது.
  • தவ்ஹீத் ஜமாத் பெட்டி வாங்கியதாக எழுதியிருக்கும் இவர்கள் தான் அந்தப் பெட்டியை வாங்கிக் கொடுத்தார்களா? 2 லட்சம் ரூபாய் கொடுங்கள் எங்கள் பகுதி வாக்குகளை வாங்கித் தருகிறேன் என்று கேட்ட பாம்பன் ஜாக் வகையறாக்களுக்கும், தவ்ஹீத் பள்ளிக்கு காசு தாருங்கள் என கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் கேட்ட பாம்பன் ஜாக் அமைப்பின் கிளையே இப்படி என்றால் மாநில தலைமை எப்படி இருக்கும்?
ஆனால் ஜாக் அமைப்பினர் கேட்டு தவறிப் போய் தவ்ஹீத் ஜமாஅத்திற்க்கு வந்தக் காசைக் கூட வாங்கிக் கொள்ளாமல் அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, எங்கள் அமைப்பில் கிளை முதல் மாநிலம் வரை என யாரிடமும் காசு கேட்க மாட்டோம், யாரிடமும் விலை போக மாட்டோம் என ராமவன்னியிடம் தெளிவாக எடுத்துச் சொல்லிய தவ்ஹீத் ஜமாஅத் எங்கே? மானங்கெட்டு மற்ற அமைப்பின் பெயர் சொல்லி காசு கேட்ட ஜாக் எங்கே? ராமநாதபுரம் தவ்ஹீத் ஜமாத் நினைத்திருந்தால் சத்தமில்லாமல் அந்தக் காசை வாங்கி பதுக்கியிருக்கலாம். ஆனால் இறையச்சம் உள்ளவர்கள் இந்த அமைப்பில் உள்ளவர்கள் என்பதை இதன் மூலம் உலகிற்கு எடுத்துக் காட்டிவிட்டார்கள் இராமநாதபுரம் மாவட்ட தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர்.
  • ததஜ LTTE மாதிரி செயல்படுகிறதாம். அவர்களுக்கெதிரான அமைப்பு இருப்பதை விரும்பவில்லையாம். சரி இது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் கேள்வி அதுவல்ல. புலிகளை ஆதரிக்கும் சீமான் ஆதரித்த ஜவாஹிருல்லாவை இவர்கள் ஆதரித்தார்களா இல்லையா என்பது தான். அதற்கு இன்னும் பதிலைக் கானோம்.
  • பிஜே எழுதிய தர்ஜூமா விளக்கமா? குழப்பமா என தெளிவாகவே விவாதத்தில் சொல்லியிருக்கிறார் பிஜே. மதுரை பாதிரியார் ஜெபமணி குரானில் முரண்படும் வசன எண்கள் குறித்து கேலி செய்த போது பிஜே குர்ஆன் அன்றைக்கு நடப்பில் இல்லை. அன்றைக்கு இருந்த குரான்கள் அதற்கு பதில் சொல்வதாக அமையவில்லை. பிஜே குர்ஆன் தர்ஜூமா தவிர்த்து வேறு எந்த தர்ஜூமா இந்த கேள்விக்கு விளக்கமாக இருந்து விடைதரும் என்று ஜாக்கினர் சொன்னால் மிக நன்றாக இருக்கும். அதற்கு விடை சொல்லி விட்டு பிஜே தர்ஜூமா பற்றி பேசலாம் ஜாக்கினர்
  • சஹாபாக்களை இழிவுபடுத்துகிறாராம் பிஜே. ரசூலுல்லாஹ் இறந்த பிறகு சஹாபாக்களிடையே பதவிப்போட்டி வந்த்ததா இல்லையா? இல்லை என்றால் அதை இவர்கள் நிறுபிக்க வேண்டும். அதேபோல சகாபாக்கள் இருபிரிவுகளாக மாறி அன்னை ஆயிஷா தலைமையில் நடந்த ஒட்டகப்போர் எதைக் குறிக்கிறது என இவர்கள் விளக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக கவ்ஸர் தடாகத்தில் தடுக்கப்படும் தன் தோழர்கள் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) சொன்ன கருத்தை இவர்கள் மறுக்கிறார்களா அல்லது ஏற்றுக் கொள்கிறார்களா?
  • உணர்வு செய்தி சம்பந்தமாக பாம்பன் கிளைத் தலைவர் கலிபுல்லாவுக்கு 10/05/2011 பதிவுத் தபால் அனுப்பப்பட்டதே! அதற்கு இன்று வரை எந்த விதமான பதிலும் இல்லையே! அதையெல்லாம் இந்த யோக்கிய சீலர்கள் கேட்டுத் தெளிவு செய்யாமல் ஊருக்கு ஊர் நோட்டீஸ் போட்டு தங்களை உத்தமர்களாக காட்டிக் கொள்ள இவர்கள் நினைத்ததும் இப்போது கிழிந்து போனது. இவர்களை ரகசியக் கூட்டங்கள் போடுவதைப் போன்று ரகசியமாக இந்த நோட்டீஸைப் பரப்பலாம் என அனுப்பிய காப்பிகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்து இவர்களின் முகத்திரையை மேலும் கிழித்தது தான் நிஜம்.
ரசூல் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்று,
அவன் பேசினால் பொய்யே பேசுவான். அவன் வாக்களித்தால் அதனை மீறி விடுவான். அவனிடம் அமானிதங்கள் வழங்கப்பட்டால் அதனை நிறைவேற்ற மாட்டான். அவன் நோன்பு நோற்றாலும்தொழுதாலும்தன்னை ஒரு முஸ்லிம் என்று அழைத்துக்கொண்டாலும் சரியே.
அறிவிப்பாளர்: அபு ஹூரைரா (ரலி)
புஹாரிமுஸ்லிம்
உங்களிடம் நான்கு தகுதிகள் காணப்பட்டால் நீங்கள் உங்கள் வாழ்வில் எதனையும் தவறவிட்டுவிட்டேனே என கவலைப்படத்தேவையில்லை. அத்தகுதிகளாவன: அமானிதத்தை பாதுகாத்தல்,உண்மையை பாதுகாத்தல்நற்பண்புகளை பேணல்நேர்மையானதூய்மையான உணவை உட்கொள்ளல்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)
புஹாரி, அஹ்மத்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
எவரொருவரிடம் நம்பகத்தன்மை இல்லையோஅவரிடம் சத்தியம் அல்லது தீன் இல்லை. எவனொருவன் தனது வாக்குறுதியை அல்லது தான் செய்த சத்தியத்தினை நிறைவேற்ற இல்லையோ அவரிடம் தீன் இல்லை.
-அஹ்மத்

நடந்த ஒரு உண்மையை மறைக்க ஒரு பொய், அந்த பொய்யை மறைக்க ஆயிரம் பொய்., இவர்கள் தான் யோக்கியர்கள் என ஒரு ஹக்கை மறைப்பதற்காக ஊர் தோறும் நோட்டீஸ்கள், ஈ மெயில் மற்றும் இஸ்லாமிய மெயில் குழுமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இ மெயில்கள் என ஏகப்பட்ட பித்னாக்கள். இப்போது இதைப் படிக்கும் பொதுமக்கள் இதை எவ்வளவு பரப்ப முடியுமோ அவ்வளவு பரப்புங்கள் . ஜாக் என்ற பிராடு இயக்கத்தில் இருக்கும் நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள்.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons