Sunday, January 8, 2012

பத்திரக்கள்ளன் சைபுல்லா – பாகம் 1



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரைப் பயன்படுத்தி தனிநபர் பெயரில் பதிவு செய்த ஸைபுல்லா அசரத்து அவர்கள் தற்போது அவரை நம்பிச் சென்ற ஒட்டு மொத்த மக்களையும் ஏமாற்றியுள்ளார்.
அவர் புதிதாக ”கடையநல்லூர் ஜமாஅத்து மஸ்ஜிதுல் முபாரக்” பதிவு எண் (123/2011) என்ற பெயரில் ஒரு சங்கத்தை பதிவு செய்து அதன் (நிரந்தரத்) தலைவராக தன்னை பத்திரத்தில் காட்டியுள்ளார்.
ஸைபுல்லா தன்னை நம்பியவர்களுக்கு பலவிதங்களில் மோசடி செய்துள்ளார்.
1. தற்போது ஸைபுல்லா மூன்று பெயர்களில் இயக்கம் நடத்தி வருகின்றார். ஒன்று முபாரக் பள்ளி வழக்கு வகைக்காக ”மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டி” இதற்குத் டம்மித் தலைவராக சேகுதுமான் இருக்கிறார். 
2. ஜஃபருல்லாஹ் என்பவரை மாநிலத் தலைவராகக் கொண்டு ”ஜமாஅத்துத் தஃவதில் இஸ்லாமிய்யா” என்று ஒரு அமைப்பு. இதற்கு ஸைபுல்லா மாநில் ஒருங்கிணைப்பாளர் ஆவார். தற்போது திருச்சியில் கூடிய தவ்ஹீத் ஜமாஅத் கழிவுள் அனைவரும் இந்த பெயரில்தான் செயல்படப் போகிறார்களாம்.
3. ”எம்.எம்,ஜே.” என்றொரு அமைப்பு. அதாவது (மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத்). இதற்கு ஸைபுல்லாஹ்தான் தலைவர். இந்தப் பெயரில்தான் அதாவது ”மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத்” என்ற சங்கப் பெயரில்தான் நாங்கள் பத்திரப் பதிவு செய்துள்ளோம் என்று மக்களை ஏமாற்றி வருகின்றார். ஆனால் பத்திரத்தில் ”மஸ்ஜிதுல் முபாரக் ஜமாஅத்” என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. மாறாக ”கடையநல்லூர் ஜமாஅத்து மஸ்ஜிதில் முபாரக்” என்ற பெயரே இடம் பெற்றுள்ளது. 
ஸைபுல்லா தான் எவ்வளவு பெரிய கள்ளப் பேர்வழி என்பதை தெளிவாக நிரூபித்து விட்டார்.
இனி 
1.மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகக் கமிட்டியில் உள்ள எவனும் அந்தப் பள்ளி கடையநல்லூருக்குரியது என்று கருதி இனவெறியில் உதவி செய்த எவனும் இந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது. ஏனெனில் ஜாக் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ள முபாரக் பள்ளிக்கும் தற்போது ஸைபுல்லா தன்னை தலைவராகக் கொண்டு பத்திரப்பதிவு செய்த இடத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
2.ஜமாஅத்து தஃவதில் இஸ்லாமிய்யா என்ற அமைப்பில் செயல்படும் எவனும் அவன் கடையநல்லூரைச் சார்ந்தவனாக இருந்தாலும் இதில் உரிமை கொண்டாட முடியாது. 
3.எம்.எம்,ஜெ. என்ற பெயரில் செயல்படுபவர்களும் இந்த இடத்தில் உரிமை கொண்டாட முடியாது.
அது போன்று எந்த ஒரு இயக்கத்தின் பெயரில் பத்திரப் பதிவு செய்யப்பட்டாலும் அதன் தற்போதைய தலைவர் என்றுதான் குறிப்பிடுவார்கள். ஆனால் ஸைபுல்லா இந்தப் பத்திரத்தில் தற்போதைய என்ற வார்த்தையை குறிப்பிடவில்லை. இதிலிருந்து ஸைபுல்லாஹ்வின் கள்ளத்தனம் மிகத் தெளிவாக வெளிப்படுகிறது. ஸைபுல்லாஹ் எத்தனை இலட்சங்கள் மோசடி செய்தாலும், அல்லது அவர் எந்தத் தவறை செய்தாலும் யாரும் அவர்மீது நடவடிக்கை எடுக்க முடியாது. நடவடிக்கை எடுத்தாலும் ஸைபுல்லா அவர்களை வெளியேற்றுவாரெ தவிர அவர்களால் ஸைபுல்லாவை ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் அவர்தான் பத்திரத்தின் பிரகாரம் நிரந்தரத் தலைவர். 
கடையநல்லூர் மக்களுக்காகத்தான் நான் பாடுபடுகிறேன் என்று கூறும் கள்ளப் பேர்வழி சைபுல்லா தன்னுடைய கூற்றில் உண்மையாளனாக இருந்தால் முபாரக் பள்ளி தலைவர் சேகுதுமானின் பெயரில் இந்த இடத்தை பத்திரப் பதிவு செய்திருக்கலாமே!.
அல்லது தன்னுடைய கள்ளக் கூட்டாளி பஷீர் உமரி பெயரிலோ அல்லது பங்காளி தஸ்லீம் மசூது பெயரிலோ அல்லது வெள்ளந்தியும் முபாரக் பள்ளி செயலளாரும் ஆன சின்ஷாவின் பெயரிலோ அல்லது சதிக் கூட்டாளி அப்துல் மஜீத் பெயரிலோ பதிவு செய்திருக்கலாமே. தன்னுடைய பெயரில் பதிவு செய்ததின் நோக்கம் என்ன?


ஸைபுல்லா அசரத்தின் பத்திர மோசடி:



பத்திரக் கள்ளன் தொடரும்…

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons