Saturday, November 19, 2011

கொள்ளையர்கள் ஜாக்கிரதை


பதிவு செய்யப்பட்ட இந்திய தவ்ஹீத் பெயரைப் பயன்படுத்தி பொய்யன் சமாத்தார்கள் ரதிமீனா யாத்திரை நடத்துகிறோம் என்கிற பெயரில் தமிழகம் மற்றும் உலகம் முழுவதும் கடுமையான மோசடியில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் கிடைக்கின்றன. வேலூரில் கள்ள ரசீது அடித்து மோசடியில் ஈடுபட்ட இந்த அயோக்கியர்கள் சென்ற ரமலான் மாதத்தில் லட்சக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்து அதை அப்படியே வாயில் போட்டு அமுக்கிய இந்தக் கயவர்கள்இப்போது துவக்கியிருக்கும் ஒரு புதிய திட்டம் தான் இந்த ரதிமீனா யாத்திரை.

பாபர் மஸ்ஜித் மீட்பு யாத்திரை என்ற போர்வையில் இவர்கள் ஆடும் வசூல் வேட்டையை நம்பி தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல பாகங்களில் உள்ள மக்களும் தங்களின் பொருளாதாரத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். இந்த அயோக்கியர்கள் இந்த ரதிமீனா யாத்திரையை அறிவித்தன் நோக்கமே மக்களிடம் வசூல் செய்வதற்காகத்தான் எனவும் செய்திகள் கிடைக்கின்றன. எங்கள் மாவட்டமான நெல்லையின் பல இடங்களில் இந்தக் கயவர்கள் தவ்ஹீத் ஜமாத் தான் ரதிமீனா யாத்திரை நடத்துகிறது என்று கூறி பல லட்சங்களை வசூல் செய்துவிட்டாகள். பல மக்கள் பின்னர் விசாரித்த பிறகுதான் இது அயோக்கியர்கள் ஜமாத்தார்களின் வேலை என்பது தெரியவந்தது.
இதுபோல உலகின் பல பகுதிகளில் தவ்ஹீத் ஜமாத் பெயரைப் பயன்படுத்தியும்பதிவு செய்யப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் பெயரைப் பயன்படுத்தியும் இந்த அயோக்கியர்கள் காசுகளை மோசடி செய்து வருவதாக பல தகவல்கள் வருகின்றன. இதுசம்பந்தமான புகார்களுக்கு உங்கள் அருகில் உள்ள பதிவு செய்யப்பட்ட இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு தகவல் தரவும்.
தகவல்
அப்துல் மஜீது
குவைத்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons