Tuesday, September 20, 2011

கடையநல்லூர் TNTJவும் செய்மாந்தரகன் சேகனாவும்.


கடந்த சில நாட்களாகவே எழுத நினைத்த இந்த ஆக்கம் சில காரணங்களினால் இன்றுதான் எழுதக் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.

தலைப்பைப் பார்த்ததும் கடையநல்லூர் வாசிகளைத் தவிர மற்றவர்களுக்கு பெரும்பாலும் பெரியளவில் அறிமுகமில்லாத ஒருவரின் பெயர் போடப்பட்டிருப்பது கொஞ்சம் சிந்திக்க வைக்கும். இருந்தாலும் அவர் யாரென்பதை நான் தெரிவித்துவிட்டு விஷயத்திற்கு வருகிறேன்.

செய்மாந்தரகன் சேகனா என்பவர் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் முன்னால் நகர துணைத் தலைவராக இருந்தவர். அதாவது சகோதரர் சைபுல்லாஹ் ஹாஜா அவர்களின் உடன் பிறந்த அண்ணன்.

இவரைப் பற்றிய உள்குத்து, வெளிக்குத்துத் தகவல்களைப் பகிருவது எனது நோக்கமல்ல. மாறாக கடையநல்லூரின் தற்போதைய நிலையை, இதற்கு முந்தைய நிலையுடன் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்க்க முனைகிறேன்.

ஆம்...................

கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னால் நடந்த சில சம்பவங்களை இங்கு நினைவுபடுத்த விளைகிறேன்.

“கடையநல்லூர் இஸ்லாமியக் கல்லூரி” இந்தப் பெயர் பலருக்கும் தெரிந்திருக்கும். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் இஸ்லாமியப் பிரச்சாரப் பணியின் ஓர் அங்கம் இந்தக் கல்லூரி.

இன்றைய தவ்ஹீத் ஜமாத்தின் இளம் பிரச்சாரகர்கள் பலரை உருவாக்கிய பெருமை இக்கல்லூரிக்கு உரியதுதான்.

மாநில பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் தொடங்கி பல எம்.ஐ.எஸ்.ஸி க்களை இக்கல்லூரிதான் வார்த்தெடுத்த்து.

யாரெல்லாம் இங்கு படித்தார்களோ அவர்கள் அனைவராலும் மறக்க முடியாத நபர்கள் இருவர் இருப்பார்கள் ஒருவர் சகோதரர் சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள், மற்றவர் அவர் உடன் பிறந்தவர் சேகனா.

கடையநல்லூர் கல்லூரி மாணவர்கள் மூலம் மாநிலத் தலைமைக்கு கடிதம் எழுதப்பட்டு கல்லூரியின் “வாடன்” பொருப்பை விட்டு அதிரடியாக நீக்கப்பட்டவர் தான் இந்த சேகனா.

இவரைப் பற்றி இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம். சைபுல்லாஹ் என்ற மனிதர் வெளிப்படுத்தும் பெரும்பாலான கருத்துக்களுக்கு அடிப்படையை இவர்தான் அமைத்திருப்பார்.

மாணவர்கள் இவரை செல்லமாக “எச்சிக் கையால் காக்காய் விரட்டாத கண்ணியவான்” என்று சொல்லுவார்கள்.

ஏன் தெரியுமா? மாணவர்களின் வயிற்றில் அடித்த ஒரு முக்கியபங்கு இவருக்குண்டு.

மாணவர்களுக்கு செலவு செய்வதாக வசூல் செய்யும் பணத்தை மாணவர்களுக்குக்கு சாப்பாடு கொடுப்பதற்கு செலவு செய்ய சங்கடப்படுபவர். இரட்டை அர்த்தத்தில் பேசி ஆபாசத்தைக் கூட அழகாக்க முனைவார்.

இதுவெல்லாம் இன்றும் அவர் திருத்தாத அவருடைய அழகிய குணங்களாகும்(?)

சைபுல்லாஹ் ஹாஜா அவர்களுக்கு இவர் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாகத் தெரிந்தும் கூட மீண்டும் மறுபடியும் கல்லூரியின் வாடனாக இவரை சேர்த்தார். ஏன் என்றால் அண்ணனுக்கு தொழில் வேண்டும். என்ற தம்பிப் பாசமாகவும் இருக்களாம்.

“என்றைக்கோ ஜமாத்தை விட்டு நீக்கப்பட வேண்டியவர்கள்” என்று இன்றைக்க அந்த ஊரே பேசுமளவுக்கு ஆகியிருக்கிறது இவர்களின் தவ்ஹீத்(?)

இந்த ஆக்கத்தில் மிகமிக குறைந்த செய்திகளைத் தான் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம் தேவைப்பட்டால் முழுத் தகவலையும் வெளியிடுவோம்.

இதனிடையே தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு செய்தியும் உள்ளது.

அதாவது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து பாக்கர் நீக்கப்படுவதற்கு முன்பே கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து நீக்கப்பட்ட மக்கா நகரைச் சேர்ந்த செய்யது அலி என்ற சத்திரப்பட்டி அலி பற்றிய ஒரு சில குறிப்புகள்.

ஆம் இவர்தான் சைபுல்லாஹ் ஹாஜா தலைமையில் இயங்கும் “கடையநல்லூர் இஸ்லாமிக் தஃவா” அல்லது “முபாரக் ஜமாத்”  தின் முக்கியஸ்தரும், முன்னால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நகரத் தலைவருமான முஹம்மது கோரி பற்றிய கசமுசாவை போட்டுடைத்தவர்.

மக்கா நகர் பகுதியில் வசிக்கும் ஒரு பெண் வீட்டிற்கு கோரி அடிக்கடி வந்து போகிறார் என்ற செய்தி சைபுல்லாஹ் விடம் சொல்லப்பட்ட நேரமெல்லாம் அவர் கண்டு கொள்ளாமலே இருந்தார் அது ஏனோ தெரியவில்லை. கோரி பற்றிய செய்திகள் மக்கா நகர மக்கள் அனைவருக்கும் தெரிந்து கேவளமான நிலை ஏற்பட்ட போதும் அவரை பொருப்பிலிருந்து சைபுல்லாஹ் ஹாஜா நீக்கவில்லை.

ஏன்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?

ஆனால் கோரியின் செய்தியை போட்டுடைத்த சத்திரப்பட்டி அலியின் பின்னணியும் மிக முக்கியமானது (தேவைப்பட்டால் வெளியிடுவோம்) ஆனால் இவரும் ஐ.என்.டி.ஜெ என்ற பொய்யன் டி.ஜெயின் மாவட்டத் தலைவராம்.

இவரை கடந்த 3 அல்லது 4 வருடங்களுக்கு முன்பு தவ்ஹீத் ஜமாத்தை விட்டு வெளியேற்றும் போது சைபுல்லாஹ் மற்றும் சேகனா உள்ளிட்டவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் அங்கத்தவர் படிவத்தைக் கூட வாங்கிவிட்டார்கள். ஆனால் இன்றைக்கு பெருநாள் தொழுகைக்கான கடையநல்லூர் காயிதே மில்லத் திடல் தவ்ஹீத் ஜமாத்திற்குக் கிடைக்கக் கூடாது அது சைபுல்லாஹ் மற்றும் செய்மாந்தரகன் கூட்டத்திற்குத் தான் கிடைக்க வேண்டும் என்பதற்காக போலிஸ் ஸ்டேஷனில் சைபுல்லாஹ் தரப்புக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார் இந்த அலி......................

எதிரிக்கு எதிரி நண்பன் தானே?

இறைவனின் கருணை என்றும் தவ்ஹீத் ஜமாத்திற்கு உண்டு.

குறிப்பு:
                       தேவைப்பட்டால் சைபுல்லாஹ் மற்றும் சேகனா உள்ளிட்ட கடையநல்லூர் முபாரக் ஜமாத்தினரின் முகத்திரை கிழிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.






0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons