Monday, February 21, 2011

சுயநலம் பிடித்த ஊழல் பெருச்சாளிகள்


சுயநலம் பிடித்த ஊழல் பெருச்சாளிகள் சிலரை எம்.பி. ஆக்குவதால் சமுதாயத்திற்கு என்ன பயன்?

சமுதாய நலனில் அக்கறை கொண்ட முஸ்லிம்களின் கவனத்திற்கு...
திமுக அரசு அமைந்த பின் தவ்ஹீது ஜமாஅத் இட ஒதுக்கீடு கோரிப் போராடிய போது மாமா கட்சியினர் என்ன சொன்னார்கள்?
மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அதிகாரமே இல்லை. அதனால் நாங்கள் டெல்லிக்குச் சென்று போராடப் போகிறோம் என்றார்கள். எதற்காக?
திமுக அரசை எதிர்த்துப் போராடினால் வாரியப் பதவி கிடைக்காது என்பதற்காக! ஹைதர் அலீ என்ற தனி மனிதருக்குக் கிடைக்க வேண்டிய பதவிக்காக ஒட்டு மொத்த முஸ்லிம்களின் நலனையும் திமுகவிடம் அடகு வைத்தார்களா இல்லையா?நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்.
அதன் பின்னர் தவ்ஹீது ஜமாஅத்தின் வீரியமிகு போராட்டத்தின் காரணமாக திமுக அரசு இடஒதுக்கீடு வழங்கியவுடன் அதற்கு உரிமை கொண்டாடுவதற்காக கோடிக்கணக்கான பணத்தைச் செலவு செய்து நேரு விளையாட்டரங்கில் கருணாநிதிக்குப் பாராட்டு விழா நடத்தி அதில் கருணாநிதியின் .............. தாங்கிக் கொண்டு சென்றார்கள்.
இடஒதுக்கீட்டில் குளறுபடிகள் இருப்பதை தவ்ஹீது ஜமாஅத் சுட்டிக் காட்டிப் போராடிய போதும் அதை விமர்சித்தார்கள். கருணாநிதி என்ன செய்தாலும் ஜால்ரா தட்ட வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு செயல்பட்டார்கள். இட ஒதுக்கீடுக் குளறுபடிகளை ஆதரித்து முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகப் பெரும் துரோகத்தைச் செய்தார்கள்.
தேர்தலில் திமுக ஜெயித்ததற்கு வெற்றி விழா நடத்தினார்கள். திமுக நடத்திய கூட்டங்களில் கலந்து கொண்டு கருணாநிதியை வானளாவப் புகழ்ந்தார்கள். சமுதாய நலனைப் பற்றிச் சிந்திக்காமல் திமுக நடத்திய போராட்டங்களில் போய் பங்கு கொண்டார்கள்.
எல்லாம் எதற்காகசமுதாயத்திற்காகவாமுஸ்லிம்களின் நன்மைக்காகவாஇப்படியெல்லாம் கருணாநிதியின் ....... கொண்டு அலைந்தால் தங்களுக்கு சீட் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் தானே! இதை மறுக்க முடியுமா?
இன்று தங்களுக்கு சீட் தரவில்லை என்ற ஒரே காரணத்துக்காக கருணாநிதியைத் திட்டுகிறாகள்.
இதில் எங்கே சமுதாய நலன் இருக்கிறதுசுயநலம் பிடித்த ஊழல் பெருச்சாளிகள் சிலரை எம்.பி. ஆக்குவதால் சமுதாயத்திற்கு என்ன பயன்?
விபச்சாரத்தை விடக் கேவலமான அரசியல் நடத்தும் மாமா கட்சிக்கு சீட் கொடுக்காததை முஸ்லிம் சமுதாயத்திற்குச் செய்யப்பட்ட துரோகமாகச் சித்தரிப்பது எந்த வகையில் சரி?
ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்காகவும் இடஒதுக்கீடு வழங்கியதற்காக திமுகவை ஆதரிக்க வேண்டுமா?
அல்லது பதவி வெறி பிடித்த ஊழல் பெருச்சாளிகள் சிலருக்கு சீட் கொடுக்காததற்காக திமுகவை எதிர்க்க வேண்டுமா?
முஸ்லிம்களே சிந்திப்பீர்!



- ஹபிப் உர் ரஹ்மான்

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons