Friday, February 4, 2011

அல்லாஹ்வின் கண்ணியத்தில் கை வைத்த மிர்ஸா குலாம் அஹ்மது



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

மிர்ஜா குலாம் அஹ்மது பொய்யன் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகள்

முன்னுரை
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே நாம் அனைவரும் பிறப்பின் அடிப்படையில் மனித சமுதாயமாகவும் ஆதம் (அலை) என்ற முதல் நபியின் பிள்ளைகளாகவும் இருக்கிறோம். நம்மில் நல்லவர்களும் உள்ளனர் தீயவர்களும் உள்ளனர் இதைப் பற்றி அறிந்து நம் பாதையை முறையாக்கிக்கொள்வதே இந்த கட்டுரையின் உட்கருத்தாகும்!

ஆதம் நபியின் நற்குணம்
முதல் மனிதராகவும், மனித வர்க்கத்தின் ஆதி பிதாவாகவும் திகழும் அன்பிற்கினிய நம் ஆதம் நபி (அலை) அவர்கள் இறைவனிடம் நேரடியாக பேச அனுமதியும், அருளும் பெற்றவராக திகழ்ந்தார். இறைவன் அவருக்கு கற்றுக்கொடுத்தான் இதற்கான ஆதாரம்

பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்;) எனவே இறைவன் அவரை மன்னித்தான்;நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.(அல்குர்ஆன் 2:37)

அல்லாஹ்வையே ஆசானாக பெற்ற மாபெரும் அருள் இந்த ஆதி நபிக்கு இருந்த போதிலும் அல்லாஹ் வகுத்த சட்டத்தை இவர் ஒருமுறை மீறினார். பின்னர் தாம் செய்த குற்றத்தை எண்ணி மனம் வருந்தி அல்லாஹ்விடம் தான் கற்றுக்கொண்ட வார்த்தைகளைக் கொண்டு அவனிடமே பாவ மன்னிப்பையும் பெற்றார். இதோ இதற்கான ஆதாரம்

பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர்உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயினஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்;இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்துஅதனால் வழி பிசகி விட்டார். (அல்குர்ஆன் 20:121)

இந்த சம்பவம் மனிதர்களான நமக்கு நேர்வழிபடுத்த கியாமநாள் வரைக்கும் ஒரு பாடமாக இருக்கிறது. இறுதியாக ஆதம் நபி தன்னுடைய ரஹ்மானிடம் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்பு கோரியதை பெருந்தண்மைமிக்க வல்ல ரஹ்மான் மன்னித்தான் மேலும் படைத்த ரப்புல் ஆலமீனிடம் மன்னிப்பு கோருதலை மனிதர்களுக்கான தலையாய கடமைகளில் ஒன்றாக்கினான்! சுப்ஹானல்லாஹ்! இதோ ஆதாரம்
எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும்இருக்கின்றேன். (அல்குர்ஆன் 2:160)

இப்லிஸ்-ன் அகம்பாவமும் மிர்ஸா குலாம் அஹ்மதுவும்
அகம்பாவம் என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும் இது இப்லிஸ் என்பவனது குணத்தின் பிரதிபலிப்பாகும். இதோ ஆதாரம்
நான் உனக்குக் கட்டளையிட்ட போதுநீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய்,அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.(அல்குர்ஆன் 7:12)

தாம் தவறில் ஈடுபடுகிறோம், இறைவன் விதித்த சட்டத்தை மீறுகிறோம் என்பதை நன்றாக உணர்ந்தும் தான் செய்தது முற்றிலும் நியாயம் என்று மரணிக்கும்வரையிலோ அல்லது அந்த நிலையிலேயே மரணித்துவிட்டு தன் எடுபடாத வாதத்தை தம்மை பின்பற்றுகிறவர்களி்ன் மீது முடக்கிட்டு கியாமநாள் வரையிலும் அவர்களையும் வழிதவறச் செய்துவிட்டு சென்ற ஷைத்தானியத் குணம் கொண்ட மனிதர்களும் நம்மில் உள்ளனர்.

இப்படிப்பட்ட ஆணவம், அகம்வாபத்தால் வழிகெட்ட ஒரு மனிதரைப் பற்றித்தான் நாம் இங்கு காணப் போகிறோம் அவன்தான் மிர்ஜா குலாம் அஹ்மது என்ற காதியாணிகளின் தலைவன். இவனைப் போன்று நாமும் நம் சந்தததிகளும் தரம்புரண்டு காபிர்களாக மாறிவிடாமல் இருக்க வல்ல ரஹ்மானிடம் பாதுகாப்பு தேடுவோமாக!

யார் இந்த மிர்ஜா குலாம் அஹ்மது?

பிரிட்டீஸ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காதியான் என்ற கிராமத்தில் 1835ம் வருடம் பிப்ரவரி மாதம் 13ம் நாள் பிறந்தவர்தான் இந்த மிர்ஜா குலாம் அஹ்மது என்ற மனிதர். இவருடைய தந்தை பெயர் மிர்ஸா குலாம் முர்தஜா என்பதாகும் இவர் ஒரு வைத்தியராவார்.

ஆங்கில நாட்காட்டியை கி.மு. மற்றும் கி. பி என்று கூறுவது போன்று இந்த மிர்ஸா குலாம் அஹ்மதுவின் வாழ்க்கையை இரண்டாக பிரிக்கலாம்.தந்தையின் அரவணைப்பில் மிர்ஜா குலாம் அஹ்மது மற்றொன்றுதந்தையின் மரணித்துக்கு பின்னர் மிர்ஜா குலாம் அஹ்மது
இவரது வாழ்க்கையை விவரிக்க இரண்டாக பிரித்து கூறுவதற்கும் ஒரு காரணமுண்டு ஏனெனில் மிர்ஸா குலாம் அஹ்மது தன் தந்தையின் அரவணைப்பில் ஒழுங்கான மனிதராக இருந்தார் ஆனால் தந்தையின் மரணித்திற்கு பின்னர் தரம்புரண்ட மனிதனாக காஃபிரா மாறினான். எனவேதான் தரம்புரள்வதற்கு முன் இருந்த மிர்ஸா குலாம் அஹ்மதை அவர் என்றும் காஃபிரான பின்னர் அவன் என்றும் இங்கு குறிப்பிடுகிறேன் இந்த மனிதனது வாழ்க்கையை பற்றி விரிவாக காணுவோம்.

தந்தையின் அரவணைப்பில் மிர்ஜா குலாம் அஹ்மது
கல்வி கற்கும் குழந்தைப் பருவத்தில் இவர் பாரசீக மொழியையும் அரபு மொழியையும் ஓரளவுக்கு கற்றுக்கொண்டார். (இதை நினைவில் நிறுத்துங்கள்). கூடவே மருத்துவப் பணியாற்றிய தன் தந்தையாருக்கு ஒத்தாசையாகவும் இருந்தார். பின்னர் இளைமைப் பருவத்தில் தன் தந்தையின் அறிவுரையின் படி 1864 முதல் 1868 வரை சியால்கோட் நகரில் கிளர்க் பணியாற்றினார். இக்கால கட்டத்தில் கிருத்தவர்களோடு மதவிவாதங்களில் ஈடுபடலானார். பின்னர் தன் தந்தையின் வற்புறுத்தலின் பேரில் 1868ல் மீண்டும் காதியாண் என்ற நகரில் உள்ள தனது தந்தையாரின் எஸ்டேட் விவகாரங்களை கவனித்து வந்தார்.

தந்தையின் மரணித்துக்கு பின்னர் மிர்ஜா குலாம் அஹ்மது
மிர்ஸா குலாம் அஹ்மது தனது 40வது வயதை எட்டிய போது 1875ம் ஆண்டு தனது தந்தையை இழந்தார். இதன் பின்னர் 1886ம் ஆண்டில் ஆரிய சமாஜத்துடன் கருத்து மோதல்களில் ஈடுபட்டார்.

மிர்ஸா குலாம் அஹ்மது  வழிகெடுவதற்கு ஆரம்பம் இதுதான்
1886ம் ஆண்டில் ஆரிய சமாஜத்துடன் கருத்து விவாதங்களில் மிர்ஜா குலாம் அஹ்மது ஈடுபட்ட போது ஆரிய சமாஜத்தார் ஒரு சவாலை முன்வைத்தனர் இதோ அந்த சவால்

அன்றைய ஆரிய சமாஜத்தின் சவால் இதுதான்
இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை மிர்ஜா குலாம் அஹ்மது நிறுபிக்க வேண்டும் அவ்வாறு நிறுபித்தால் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதை நம்புகிறோம் (என்றனர் ஆரிய சமாஜத்தார்)

மிக மிக எளிமையான இந்த சவாலிற்கான பதில் அந்த அருள்மறை குர்ஆனில் உள்ளது இதை படிக்கவும் உணரவும் தவறிய மிர்ஸா குலாம் அஹ்மது ஆரிய சமாஜத்தாரின் கேள்விக்கு பதில் கூற திணறினான், வாயடைத்து போனான்! பின்னர் என்ன செய்வது என்றே புரியாமல் குழம்பினான் இறுதியாக வழிகேட்டில் மூழ்க ஆரம்பித்தான் இதோ இவன் வழிகெட்ட விதம்!

ஆரிய சமாஜத்தை சேர்ந்த இந்துக்கள் எவ்வாறு சிறப்பு பூஜைகளையும் தவங்களையும் மேற்கொண்டு தங்கள் காரியங்களை சாதிப்பார்களோ அது போன்று இந்த மிர்ஸா குலாம் அஹ்மது என்ற சாதாரண மனிதர் சிறப்பு தவத்தின் மூலம் ஞானத்தை பெறுவது ஒன்றே சிறந்த வழி என்று எண்ணினான் அதற்காக காதியான் என்ற நகரத்தை விட்டு ஹோஸியார்பூர் என்ற நகரத்திற்கு சென்றான்.

ஹோஸியார்பூரில் குலாம் அரங்கேற்றிய கூத்துக்கள்
மிர்ஸா குலாம் அஹ்மது ஹோஸியார்பூருக்கு விஜயம் செய்யும் போது அவருடன் 3 நபர்களும் இருந்தனர். அந்த ஊரில் தன்னுடன் பயணித்த நபர்களில் ஒருவரது சிறிய இரண்டு அடுக்கு கொண்ட மாடி வீட்டில் தஞ்சம் புகுந்தான்.

பின்னர் மாடி வீட்டின் ஒரு அறையில் தனிமையில் அமர்ந்துக்கொண்டு யாருடனும் பேசாமல் இருந்தான் ஆனால் வேலா வேலைக்கு உணவை மட்டும் தன்னுடைய சகாக்களின் உதவியால் பெற்றுக்கொண்டான். இவன் அந்த தனி அறையில் நிகழ்த்திய தவத்தின் பெயர் சில்லாஹ்-நஸ்ஹினி என்பதாகும். இது வழிகெட்ட சூஃபிக்களிடம் காணப்படும் கடின தவமாகும்.

சில்லாஹ்-நஸ்ஹினி (Chilla-nashini) என்றால் என்ன?
சில்லாஹ் நஸ்ஹினி என்ற வார்த்தை பாரசீக மொழியிலிருந்து வந்ததாகும் CHILLA என்பது CHEHEL அதாவது 40 (நாற்பது) நஸ்ஹினி என்பது தனிமையில் தியானித்தல். அதாவது பாரசீகர்கள் பின்பற்றும் 40 நாள் தியானமாகும். இந்த 40 நாள் இரவு பகல் தவத்தின் போது தவத்தை மேற்கொள்பவர் பேசுதல், உணவு உட்கொள்ளுதல், தூக்கம், தண்ணீர் ஆகியவற்றை முற்றிலும் தவிர்ப்பார்கள்.

பாரசீகர்கள்தான் இந்த தவத்தை கண்டுபிடித்தனர் ஆனால் அவர்களே இந்த தியான முறையை மூடத்தனம் என்று வர்ணிக்கின்றனர் ஏனெனில் இந்த தவத்தின் மூலம் வெற்றி கிடையாது தோல்விதான் ஏனெனில் 40 நாட்கள் கடும் தவத்தின் மூலமாக தியானம் மேற்கொள்பவர்கள் உடநலம் கெட்டு புத்திசுவாதீனம் ஏற்பட்டு மரணித்துவிடுவார்கள். ஆதாரம் இதோ!

சில்லாஹ் நஸ்ஹினி தவத்தின் போது மரணம் நிச்சயம்!
14ம் நூற்றாண்டில் இந்த தவம் சூஃபிக்களின் புகழ்பெற்ற பாடகர் ஹபேஃஸ் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இவருடைய கொள்கையை பின்பற்றி 1884ம் ஆண்டு முதல் முறையாக ஷரியர் முன்டேகர் இராணி என்பவர் (அதாவது மெஹர் பாபா என்பவரின் தந்தை) இந்த சில்லாஹ் நஸ்ஹினி என்ற கடுமையான தவத்தில் ஈடுபட்டார் ஆனால் 40ம் நாளை நெறுங்குவதற்கு முன் 30வது தவத்திலேயே மரணித்துவிட்டார். ஏனெனில் எந்த ஆகாரமும், நீரும் எடுத்துக்கொள்ளாததே!

தியானத்திற்காக ஜும்மா தொழுகையை விட்ட மிர்ஸா குலாம்
சில்லாஹ் நஸ்ஹினி என்ற 40 நாள் தியானத்தின் போது தவமிருப்பவர் கடுமையை கடைபிடிப்பதால் யாரிடமும் பேசாமல், சிறிதளவும் உணவு உண்ணாமல், துளியளவும் தண்ணீர் பருகாமல், சிறுதூக்கம் கூட போடாமல் கடுமையாக தவமிருப்பார்கள் மேலும் இத்தவத்தை வெட்ட வெளியில் மேற்கொள்வார்கள் அதுசமயம் எப்படிப்பட்ட மிருகம் தாக்கினாலும் தாங்கிக்கொள்ளவார்கள் ஆனால் இந்த மிர்ஸா குலாம் என்பவனோ தனிஅறையில் மிருகங்கள் அண்டாத வகையில் தம்மை பாதுகாத்துக் கொண்டு ஊரை ஏமாற்றி ஒழிந்து மறைந்து உணவு உட்கொண்டான், தூங்கினான்.

இந்த மிர்ஸா குலாம் அஹ்மது தாம் மேற்கொண்ட தவத்தின் போது ஜும்மா தொழுகையை கூட தொழவில்லை அதாவது 40 நாள் தனிமை தவத்தில் வீட்டை விட்டே வெளியேறாமல் இருந்தான் எனவே இவனுக்கு ஜமாஅத் தொழுகை உண்டா?

தவம் மூடித்து மிர்ஸா குலாம் செய்த பிரகடனம்
ஆரிய சமாஜத்தாரின் சவாலுக்கு பதில் கூற தவத்தை மேற் கொண்ட மிர்ஸா குலாம் தவத்தில் தில்லுமுல்லுகளை மேற்கொண்டு உயிர்பிழைத்தான் 40ம் நாள் தவத்திற்கு பின்னர் தாம் இறைவனிடம் அருள்வாக்கு பெற்றதாக இட்டுக்கட்டி பொய்யை பரப்பினான்.

பின்னர் 1888ம் ஆண்டு தமக்கு அல்லாஹ்விடம் வஹி வந்ததாகும்  மக்கள் அனைவரும் மிர்ஸா குலாம் அஹ்மதாகிய தன்னிடம் பைஅத் பெற வேண்டும் என்று கட்டளையி்ட்டதாகவும் அல்லாஹ்வின் மீது வேண்டுமென்றே புரளியை கிளப்பினான்!
1889ம் ஆண்டு இந்த புரளியை தூண்டுப் பிரச்சுரங்கள் மூலமாகவும் ஊர் ஊராக பரப்பினான். பின்னர் அவசர அவசரமாக தன்னிடம் பைஅத் பெற்ற 40 மூரிதுகளின் உதவியால் 1889ம் ஆண்டு மார்ச் 23ம் நாளன்று அஹ்மதியா அமைப்பை உருவாக்கினான்.

மிர்ஸா குலாம் தன்னை இறுதி நபி என்று வாதிட்டான்
தவம் முடித்த மிர்ஸா குலாம் தன்னை மஸீஹ் என்றும் இமாம் மஹதி என்றும் பிரகடனப்படுத்தி பொய்களை பரப்பினான் அந்த பொய்களை வஹி (இறைவனிடமிருந்து வந்த செய்திகள்) என்று கூறினான். இந்த பொய்கள் மூலம் கிருத்தவர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி பிரச்சினையை காட்டுத்தீயாக பரப்பிவிட்டான்.

ஈஸா நபி மீது இட்டுக்கட்டிய செயல்
கிருத்தவர்கள் ஏசு எனும் ஈஸா மஸீஹ் சிலுவையில் அறையப்பட்டார் என்று நம்புகிறார்கள் ஆனால் இஸ்லாம் இதை மறுக்கிறது மாறாக சிலுவையில் அறையப்படும் முன் ஈஸா நபி மரணிக்கவில்லை விண்ணுலகிற்கு உயிருடன் எழுப்பப்பட்டார் என்றும் கியாமநாளுக்கு முன்னர் இறங்கி தஜ்ஜாலை கொன்று ஆட்சி நடத்துவார் பின்னர்தான் மரணிப்பார் என்பதாகும். ஆனால் இந்த இரண்டு கொள்கைளைக்கும் முரணாக மூன்றாவதாக ஒரு கொள்கையை இந்த குலாம் அஹ்மது கிளப்பினான் இதுதான்

ஈசா (ஏசு) நபி தம் பிரச்சாரத்திற்காக இந்தியா வந்தபோது இயற்கையாகவே மரணடைந்தார் என்றும் அவரை காஷ்மீரில் நல்லடக்கம் செய்யப்பட்டவிட்டது என்றும் கப்ருகூட உள்ளது என்றும் மாபெரும் பொய்யை இட்டுக்கட்டினான்.

மிர்ஸா தம்மை இமாம் மஹதி என்று பிரகடனப்படுத்துதல்
இந்த பொய்யன் மிர்ஸா குலாம் தம்மைத்தாமே இமாம் மஹதி என்று பிரகடனப்படுத்திக்கொண்டான் அதற்கு இவன் அவிழ்த்து விட்ட மாபெரும் சூழ்ச்சியுடன் கூடிய பொய் இதுதான்

நபி மூஸா அவர்களுக்கு மறித்து 1400 ஆண்டுகளுக்கு பின்னர் ஈஸா நபி வருவார் என்று முன்னறிவிப்பு செய்யப்பட்டது போன்று போன்றுதான் நபி முஹம்மதுவுக்கு பின்னர் 14 நூற்றாண்டுகள் கழித்து இமாம் மஹதி வருவார் என்று முன்னறிவிப்பு உள்ளது அந்த முன்னறிவிப்பின் படி மிர்ஸா குலாம் அஹ்மதாகிய தாம்தான் இமாம் மஹதி என்றான். இந்த பொய்களை வஹி என்று அறிவிப்பு செய்து அருள்மறை குர்ஆனுக்கு எதிராக தஸ்கிரதுஸ் ஸஹததன் என்ற நூலை உருவாக்கி அதில் எழுதிக்கொண்டான்.

தம்மை இறுதி நபி என்று பிரகடனப்படுத்துதல்
குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் உள்ள இமாம் மஹதியின் வருகைக் குறிப்புகளை திருடி தன்னுடைய தஸ்கிரதுஸ் ஸஹததன் என்ற நூலில் எழுதிக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை நபிமார்களுடன் ஒப்பிட்டு காட்டி தாம்தான் இஸ்லாத்தின் இறுதி நபி என்று பிரகடனப்படுத்தினான்.

நபிமார்களின் முத்திரை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் பிரகடனப் படுத்தியதற்கு மாற்றமாக இந்த மிர்ஸா குலாம் சூழ்ச்சி செய்தான் பின்னர் அல்லாஹ்வி்ன் அதிகாரத்தை கையில் எடுத்தான் முஹம்மது இறுதி நபியல்ல மிர்ஸா குலாம் ஆகிய தாம் மட்டும்தான் இறுதி நபி என்றும் தாம் இஸ்லாத்தை கட்டிகாக்க வந்தவன் என்றும் அபாண்டமான பொய்யை இட்டுக்கட்டினான்!
மிர்ஸா குலாமுக்கு விடப்பட்ட ஃபத்வா
தன்னை இமாம் மஹதி என்றும் இறுதி நபி என்றும் பிரகடனப்படுத்திய மிர்ஸா குலாம் முஸ்லிம்களை நோக்கி இனிமேல் யாரும் ஆயுதங்களைக் கொண்டு ஜிஹாது செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறினான் இதை அறிந்ததும் அக்காலத்து மார்க்க மேதைகள் மிகுந்த மனவேதனையடைந்தனர் அவர்களிடம் மிகப் பெரும் சலசலப்பு காணப்பட்டது மேலும் இதே காலகட்டத்தில் சூடான் நாட்டை மற்றொருவன் தன்னை இமாம் மஹதி என்ற பிரகடனப்படுத்தியதும் மார்க்க மேதைகளின் குழப்பத்தை மேலும் மேலும் அதிகரித்தது.

பின்னர் மார்க்க மேதைகள் அனைவரும் ஒன்று கூடி தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதில் ஒரு முடிவு பிறந்தது அதாவது ஆங்கிலேயர்கள்தான் ஜிஹாதை தடைசெய்தார்கள் என்றும் இந்த மிர்ஸா குலாம் அஹ்மது என்பவன் அதை ஆதரித்து பேசும்விதமாக ஜிஹாதை தடை செய்வதால் இவன் ஆங்கிலேயே கைக்கூலிதான் என்று பிரகடனப்படுத்தினர். இவன் ஆங்கிலேய நாய்களின் கைக்கூலி என்பதற்கான ஆதாரம் அடங்கிய  வாக்குமூலம்
Behold! I have come to you people with a directive that henceforth jihad with the sword has come to an end but jihad for the purification of your souls still remains. This injunction is not from me but rather it is the will of God. – British Government and Jihad pg.15
இறுதியாக காதியாணிகளின் தலைவனான பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மது என்ற மனிதன் சாதாரண மனிதர்தான் என்றும் இந்த மனிதன் தன்னை இறுதி நபி என்று பொய்ப் பிரச்சாரம் செய்வது இஸ்லாத்தின் கோட்பாடுகளுக்கு மீறிய செயல் என்றும் இவன் முழுக்க முழுக்க காஃபிர்தான் என்றும் மார்க்க அறிஞர்கள் ஃபத்வா கொடுத்தனர். இந்த ஃபத்வாவை இந்தியாவில் உள்ள 200க்கும் மேற்பட்ட பல்வேறு இந்து, புத்த, கிருத்த மத மற்றும் முஸ்லிம் மார்க்க அறிஞர்களும் ஒருமனதாக ஏற்றனர். (சுப்ஹானல்லாஹ்)

பொய்யன் மிர்ஸா குலாமுக்கு எதிர்ப்பு வலுத்தது
அன்றைய காலகட்டத்தில் வாழந்த மார்க்க அறிஞரான அஹ்மத் ரிதா கான்என்பவர் பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மது பற்றிய தகவல்களை சேகரித்துஹேஜாஸ் எனும் நகருக்கு பயணம் மேற்கொண்டார் அங்கு மக்கா மற்றும் மதீனத்து மார்க்க மாமேதகளின் கருத்துக்கணிப்பை கேட்டறி்ந்தார். அங்குள்ள மார்க்க மாமேதைகள் அனைவரும் இந்த பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மதுவை கைது செய்து தூக்கிலடவேண்டும் என்று முடிவு கூறினர்.

மிர்ஸா குலாம் அஹ்மது அரங்கேற்றிய பெருநாள் திடல் நாடகம்
1900ம் ஆண்டு தியாகத்திருநாள் (பக்ரீத்) அன்று பெருநாள் திடலில் இந்த பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மது உரையாற்றினான். இதுதான் காதியாணிகளின் முக்கிய பெருநாள் உரை நிகழ்த்தப்பட்ட தினமாகும். இந்த பெருநாள் உரையை இரண்டு காதியாணிகளின் குறிப்பெடுத்துவந்தனர் இறுதியாக இந்த பெருநாள் உரைக்கு குத்பா இல்மியாஹ் என்று பெயர் சூட்டினர்.

இந்த பெருநாள் உரையின் போது அங்கு குழுமியிருந்த காதியாணி அமைப்பின் பிற தலைவர்கள் மாபெரும் பொய்யை இட்டுக்கட்ட ஆரம்பித்தனர் அதாவது பெருநாள் உரையாற்றும் போது மிர்ஸா குலாம் அஹ்மதுவின் கை இதுவரை பார்த்திராத கையாக தென்பட்டது என்றும் கனீர் கனீர் என்ற குரள் புதுவிதமாக இருந்தது என்றும் இதுவரை பார்த்திராத கை, கேட்டிராத குரள் என்றும் பொய்யை ஜல்ரா தோரணையில் கூறினர் இட்டுக்கட்ட இதை கேள்விப்பட்ட பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மதுவோ பொய்யை மெருகூட்டும் விதமாக தன்னுடைய ஹகீகத்துல் வஹி என்ற நூலில் எழுதிய கட்டுக்கதை இதோ.

எனது பெருநாள் உரையானது மாபெரும் அதிசயமானது அந்த உரையை எனது நாவில் பேசியது நானா? அல்லது வானவர்களின் தூதரான மலக்குமார்களா? என்று எனக்கே ஆச்சரியமாக உள்ளது! நான் எனது நாவை அசைத்தேன் அந்த நாவினில் வந்தது எல்லாம் இறைவனிடமிருந்து வந்த வஹியாகும் – பொய்யன் மிர்ஸா குலாம் அஹ்மது

அல்லாஹ்வின் கண்ணியத்தில் கை வைத்த மிர்ஸா குலாம்
தந்தையின் அரவணைப்பில் மிர்ஸா குலாம் அஹ்மது அரபு மொழியை கற்றனான் என்பதை நினைவில் நிறுத்துங்கள் என்று மேலே சுட்டிக்காட்டியிருந்தேன். இதோ அதற்கான விளக்கம் கீழே உள்ளது.

தமக்கு அரபு மொழி தமக்கு தெரியாது என்றும் அல்லாஹ்தான் தமக்கு அரபு மொழியில் புத்தகம் எழுத உதவினான் என்றும் மிர்ஸா குலாம் அஹ்மது உளறினான் (ஆதாரம் – Mirza Ghulam Ahmad, Seerat-ul-Mahdi, Narration No. 104)

மேற்கண்ட வாக்குமூலத்தின் மூலம் இவன் அல்லாஹ்விடம் கல்வி கற்றதாக (தம்மை ஆதம்நபிக்கு ஈடாக) வாதிட்டு அல்லாஹ்வின் கண்ணியத்தில் கை வைக்கிறான்!

மேற்கண்ட வாதம் பொய் என்பதற்கு இவனுடைய மற்றொரு நூலே ஆதாரம் இதோ கீழே உள்ளது

தம்முடைய 10ம் வயதில் ஃபஜல் அஹ்மது என்ற அரபு மொழி ஆசிரியரின் உதவியால் தாம் அரபு மொழி கற்றதாக இந்த பொய்யனின் வாக்குமூலம் இடம் பெற்றுள்ளது (ஆதாரம்– Mirza Ghulam Ahmad, Kitab ul Bariyah, Roohani Khazain Volume 13, pages 180–181)

பள்ளிப் பருவத்தில் தாம் அரபு இலக்கணம் படித்ததாக ஒப்புக்கொண்டுள்ளான் (ஆதாரம் Mirza Ghulam Ahmad, Kitab ul Bariyah, Roohani Khazain Volume 13, pages 180–181)

மிர்ஸா குலாம் அஹ்மதுவின் மரணம்
1907 மற்றும் 1908ம் ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் இவன் பாகிஸ்தான் நாட்டு லாகூர் நகருக்கு குடும்பத்துடன் பயணமானான். அங்கு தன் பொய்ப் பிரச்சாரத்தை பரப்பினான். அதுசமயம் நோய்வாய்ப்பட்டு வயிற்றுப்போக்கு (பேதி) ஏற்பட்டு 1908ம் ஆண்டு மேமாதம் 26ம்நாள் மரணமடைந்தான்.

அஹ்மதியாக்களை காஃபிர்களாக உலக நாடுகள் பிரகடனம்
பாகிஸ்தான் நாட்டின் அறிவிப்பு
1974ம் ஆண்டு பாகிஸ்தான் நாடு தனது பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றி மிர்ஸா குலாம் அஹ்மது என்பவனையும் அவனை பின்பற்றும் அஹ்மதியாக்களை காஃபிர்கள் என்று பிரகடனப்படுத்தினார்கள்.

1984ம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டு பீனல் கோடு செக்சன் காஃபிர்களாக மாறிய அஹ்மதியாக்கள் எனும் காதியாணிகள் இனி தங்கள் பிரச்சாரங்களை அரங்கேற்றக்கூடாது என்றும் அவ்வாறு மேற்கொள்பவர்கள் கைது செய்யப்பட்டு தூக்கிலடப் படுவார்கள் என்றும் சட்டமியற்றியது.

2007ம் ஆண்டு பெலாரஸ் நாடு காஃபிர்களான காதியாணிகள் தங்கள் கீழ்த்தரமான பொய்களை அவிழ்த்துவிடுவதை தடை செய்தது.

காஃபிர்களின் நாயகன் மிர்ஸா குலாம் அஹ்மதுவின் வழிமுறையை படித்திருப்பீர்கள் இதோ கீழ்கண்ட இந்த அருள்மறை வசனம் இதை மெய்ப்படுத்துகிறதா? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின்வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள்.(அல்குர்ஆன் 16:105)

மிர்ஸா குலாம் அஹ்மது என்பவன் ஒரு பொய்யன்
இவனை பின்பற்றும் காதியாணிகள் பொய்யர்கள்

மிர்ஸா குலாம் அஹ்மது என்பவன் ஒரு காஃபிர்
இவனை பின்பற்றும் காதியாணிகள் காஃபிர்களே

காஃபிர்களுக்கு உதாரணம்
அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் – (எதுவரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்;மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன். (அல்குர்அன் 24:39)


காஃபிர்களின் வைராக்கியமும் முட்டாள்தனமும்
(காஃபிராக) நிராகரித்துக் கொண்டிருந்தார்களே அவர்கள் வைராக்கியத்தை – முட்டாள்தனமான வைராக்கியத்தை – தங்கள் உள்ளங்களில் உண்டாக்கிக் கொண்ட சமயம் அல்லாஹ் தன் தூதர் மீதும்,முஃமின்கள் மீதும் தன் அமைதியை இறக்கியருள் செய்து, அவர்களுக்கு (பயபக்தியூட்டும்) தக்வாவுடைய வாக்கியத்தின் மீதும் அவர்களை நிலை பெறச் செய்தான்; அவர்களோ அதற்கு மிகவும் தகுதியுடையவர்களாகவும், அதற்குரியவர்களாகவும் இருந்தார்கள் – அல்லாஹ் சகல பொருள்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 48:26)
நன்றி http://en.wikipedia.org/wiki/Mirza_Ghulam_Ahmad

அவுஜுபில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

நபிகள் நாயகம்தான் இறுதி நபியா?  காதியாணிகளின் கேள்வி

கேள்வி எழுப்பியது காதியாணிகள்
எழுப்பியவர் Sabar ( jafarla@yahoo.co.in )

கேள்வி
ஈசா (அலை) வானத்தில் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்புகிறீர்களே இது கிறிஸ்தவ நடைமுறை இல்லையா?

பதில்
காதியாணி அமைப்பை சேர்ந்த சகோதரர் சபர் அவர்களே நீங்கள் கேட்ட கேள்வியில் இரண்டு விபரீதமான கேள்விகள் அடங்கி யுள்ளன. உங்கள் கருத்துப்படி இதோ அந்த 2 விபரீதங்கள்
1)      ஈஸா நபி வானில் உயர்த்தப்படவி்ல்லை!
2)      ஈஸா நபி கொல்லப்பட்டார் அல்லது மரணித்துவிட்டார்!

விபரீதம் 1 (ஈஸா நபி வானில் உயர்த்தப் படவி்ல்லை) என்பதற்கான பதில்
ஈஸா நபி வானில் உயர்த்தப்பட்டார் என்று அருள்மறை குர்ஆனில் வல்லமைமிக்கவனும், ஞானமிக்க இறைவனாகிய எங்கள் இறைவன் அல்லாஹ் சாட்சி கூறுகிறான்!

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் – இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:158)

ஈஸா நபி வானில் உயர்த்தப்படவில்லை என்று நீங்கள் வாதிடுவதை ஏன் இங்கு விபரீதம் என்கிறோம் என்றால் இந்த அறிவிப்பை வெளியிடுபவன் அல்லாஹ்தான்! அதற்கு மேற்கண்ட 4-158 வசனம் சாட்சியாக உள்ளது. இதை காதியாணிகளாகிய  நீங்கள் மறுக்கிறீர்கள் இப்படி மறுப்பதனால் அந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள அல்லாஹ்வின் தன்மைகளாகிய வல்லமை மிக்கவன் மற்றும் ஞானமுடையவன் என்பதனை தாங்கள் நிராகரிக்கிறீர்கள். இதுதான் அந்த விபரீதம்.

அல்லாஹ் தன்னை வல்லமை மிக்கவன் என்றும் ஈஸா நபியை தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்றும் கூறுவதை நிராகரிப்பதனால் காதியாணியாகிய நீங்கள் அல்லாஹ்வுக்கு அந்த வல்லமை இல்லை என்று கூறவருகிறீர்களா?

அல்லாஹ் தன்னை ஞானமிக்கவன் என்றும் ஈஸா நபியை தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்றும் கூறுவதை நிராகரிப்பதனால் காதியாணியாகிய நீங்கள் அல்லாஹ்வுக்கு அந்த ஞானம் இல்லை என்று கூறவருகிறீர்களா?

அல்லாஹ்வுக்கு வல்லமையும் உண்டு, ஞானமும் உண்டு எனவேதான் தனது இரண்டு வல்லமைகளை சுட்டிக்காட்டி மனிதனால் சாதிக்க முடியாத இந்த காரியத்தை தான் சாதித்தாக கூறுகிறான். (அல்லாஹு அக்பர்)


விபரீதம் 2 (ஈஸா நபி கொல்லப்பட்டார் அல்லது மரணித்து விட்டார்) என்பதற்கான பதில்

ஈஸா (அலை) அவர்கள் கொல்லப்படவுமில்லை, சிலுவையில் அறையப்படவுமில்லை மேலும் இயற்கையாக இன்னும் மரணிக் கவுமில்லை என்று அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் சாட்சி கூறுகிறான்! இதோ அந்த வசனம்


இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின்குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில்சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் – வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது;நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (4:157)

காதியாணி அமைப்பை சேர்ந்த சகோதரர் சபர் அவர்களே உங்கள் கருத்துப்படி ஈஸா (அலை) அவர்கள் கொல்லப்பட்டார் என்றால் அவரை கொன்றது யார்? அல்லது அவர் இயற்கையாக மரண மடைந்தார் என்றால் அதற்கான குர்ஆன் ஆதாரம் எங்குள்ளது? காட்டவும்! இறுதியாக இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவதைப் போன்று நீங்கள் வெறும் யூகத்தைப் பின்பற்றுகிறீர்கள் உங்களுக்கு இதுபற்றிய எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக நீங்கள் மூடர்கள்தான் அதற்கான ஆதாரம் இதோ

  • ஒருவேளை நீங்கள் ஈஸா நபி கொல்லப்பட்டுவிட்டார் என்று கூறினால் யுதர்களை பின்பற்றிவிடுவீர்கள்,

  • ஒருவேளை நீங்கள் ஈஸா நபி சிலுவையில் அறையப்பட்டார் என்று கூறினால் கிருத்தவர்களை பின்பற்றிவிடுவீர்கள்

  • ஒருவேளை நீங்கள் ஈஸா நபி இயற்கையாகவே மரணித்து விட்டார் என்று கூறினால் அல்லாஹ்வை விட ஞானமிக்க வராகிவிடுவீர்கள்.
மேற்கண்ட இந்த மூன்றில் எந்த தத்துவத்தை பின்பற்ற போகிறீர்கள். அறிந்துக்கொள்க மேற்கண்ட 3 தத்துவத்தில் எந்த ஒன்றை பின்பற்றினாலும் அல்லாஹ்வின் லானத் (சாபத்திற்கு) ஆளாகிவிடுவீர்கள் என்று எச்சரிக்கிறோம்!

கேள்வி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு மூமின் ஒரு முறைதான் படு குழியில் விழுவான் என்று கூறினார்கள். ஏற்கனவே இரண்டு பெரிய சமுதாயங்கள் இறைத்தூதர்களின் இரண்டாவது வருகையை எதிபார்த்து படுகுழியில் விழுந்து கிடக்கிறார்கள் அதைப் பார்த்திருந்தும் அதே தவறை இந்த மூட முல்லாக்கள் செய்கிறார்கள் என்றால் இவர்களை நாம் எப்படி மூமின் என்று சொல்ல முடியும்.

பதில்
ஒருவன் மூமின் என்பதற்கு அடிப்படை அடையாளம் அவன் படைத்த ரப்புல் ஆலமீனையும், இறுதித்தூதரான நபிகள் நாயகத்தையும் நம்புவதாகும். இந்த அடையாளம் நம்மிடம் உள்ளது ஏனெனில் அல்லாஹ் ஈஸா நபியை உயர்த்திக் கொண்டதாக அருள்மறையில் கூறுகிறான் அதை நாம் நம்புகிறோம் அதே நேரத்தில் இறுதி நபியாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஈஸா நபி வானிலிருந்து இறங்கி வந்து தஜ்ஜால் என்ற கொடியவனை அழிப்பார் என்று கூறினார் அதையும் நாம் நம்புகிறோம். இந்த செய்தியின் மூலம் அல்லாஹ்வும் உண்மை கூறுகிறான் அவனது இறுதித்தூதரும் உண்மையை கூறுகிறார் இதனை முஸ்லிம்களாகிய நாம் நம்புகிறோம்! ஈஸா நபி வருவார் என்பதற்கான ஆதாரம் வேண்டுமா? இதோ
கஸ்பஹான் பகுதியல் வாழும் யூதர்களில் ஒருவனாக தஜ்ஜால் புறப்பட்டுவருவான். மதீனாவை நெருங்கி, அதன் எல்லையில் இறங்குவான். அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு நுழைவுப் பாதைகள் இருக்கும். ஓவ்வொரு நுழைவு பாதையிலும் இரண்டு மலக்குகள் இருப்பார்கள். அவனை நோக்கி (மதீனாவில் உள்ள) தீய மக்கள் புறப்பட்டுச் செல்வார்கள். பாலஸ்தீன் நகரின் ‘லுத்’ எனும் வாசலுக்கு அவன் புறப்பட்டுச் செல்வான். அங்கே ஈஸா நபி (அலை) அவர்கள் இறங்கி அவனைக் கொல்வார்கள். அதன்பின் நாற்பது ஆண்டுகள் ஈஸா நபி (அலை) அவர்கள் இந்த பூமியில் நேர்மையான தலைவராக, சிறந்தநீதிவானாகத் திகழ்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) நூல்- அஹ்மத்.

கேள்வி
மிஹ்ராஜ் பயணத்தின் போது நபி (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களையும் சந்தித்தார்கள் இரண்டாவது வானத்தில் இசா (அலை) அவர்களுடன் யோவான் (யஹ்யா) நபி பார்த்தார்கள். அங்கு யாருடைய சடலமும் தென்படவில்லை. எல்லா நபிமார்கள் ஆன்மீக ரீதியாக உயிருடன் இருந்தார்கள். அனால் இந்த மூட முல்லாக்கள் இசா நபி மட்டும் வானத்தில் உயிரோடு இருப்பதாக நம்புகிறார்கள்.

பதில்
அட அடி முட்டாள் காதியாணிகளே அல்லாஹ் விதித்த இந்த சோதனையில் சிக்கிவிட்டீர்களே, விரைவில் சுதாரித்துக் கொள்ளுங்கள். என்ன சோதனை என்பது உங்களுக்கு புரியவில்லையா? மிஹ்ராஜை நம்புவதுதான் அந்த சோதனை!

  • நபிகளார் (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் சென்றதும் உண்மை
  • அங்கு இறந்த நபிமார்களை கண்டதும் உண்மை
  • அங்கு உயிருடன் உள்ள ஈஸா நபியை கண்டதும் உண்மை

அறிந்துக்கொள்க மிஹ்ராஜ் எனும் பயணம் இந்த புமியில் நடைபெறவில்லை மாறாக விண்ணுலகத்தில் நடைபெற்றது புமியில்தான் மரணித்தால் சடலம் இருக்கும் விண்ணுலகத்தில் யாருடை சடலமாவது இருக்குமா? விண்ணுலகம் என்ன உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் கப்ருஸ்தானா? சடலம் இருக்க!அல்லாஹ் நாடினால் இறந்தவரை உயிர்ப்பிப்பான், உயிருள்ள ஈஸா நபியை தன்னிடம் வாழவழிவகையும் செய்வான்!
உங்கள் முட்டாள்தனத்தி்ற்கு இதோ மற்றுமொரு ஆதாரம் முன்வைக்கிறேன் கீழு உள்ளதை படியுங்கள்

எத்தனையோ நபிமார்கள் மரணித்தார்கள் அவர்களை நபிகள் நாயகம் மிஹ்ராஜில் சந்தித்தார்கள் என்பதை ஒத்துக்கொள்ளும் நீங்கள் அதுபோலத்தான் ஈஸா நபியும் மரணித்த நிலையில் அங்கு இருந்திருப்பார் அவரை நபிகளார் சந்தித்திருப்பார்கள் என்று கூற வருகிறீரா? அட காதியாணிகள் எனும் அடி முட்டாள்களே விண்ணுலகில் மரணித்த நபிமார்கள் இருந்தார்கள், உயிருன் ஈஸா நபியும் இருந்திருக்கிறார் என்பதை நபிகளார் (ஸல்) அவர்கள் தாம் உயிருடன் இருக்கும் போது பார்த்துள்ளார்கள் இதை மறுப்பீர்களா? புரியவில்லையா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தில் விண்ணுலகில் உயிருடன் சென்று திரும்பியுள்ளார் எனும்போது ஈஸா நபியினால் ஏன் அந்த விண்ணுலகில் உயிருடன் வாழ இயலாது?

கேள்வி
நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி என்று கூறுகிறீர்களே இது கிறிஸ்தவ நடை முறை இல்லையா?
பதில்
இத்தகுல்லாஹ் (அல்லாஹ்வுக்கு பயந்துக்கொள்ளுங்கள்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் இறுதி நபி என்று கியாம நாள் வரை உலகில் உள்ள அனைத்து காஃபிர்களும் கூட கூறுவார்கள் ஆனால் காதியாணிகளாகிய நீங்கள் கூறமாட்டீர்கள் போலும்! காஃபிர்களுக்கு உள்ள அடிப்படை அறிவு கூட உங்களுக்கு கிடையாதா? இதோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் இறுதி நபி என்று கூறும் அருள்மறை வசனம் (அல்லாஹ்வின் வார்த்தைகள்)

முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாகஇருக்கவில்லை. ஆனால், அவரோ அல்லாஹ்வின் தூதராகவும்,நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்,மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் பற்றியும் நன்கறிந்தவன்”(அல்குர்ஆன் 33:40)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி முத்திரை என்று அல்லாஹ் கூறுகிறான் இதன் மூலம் யாரும் அவருக்குப் பின் நபியாக வரமாட்டார்கள் என்பதும் உறுதியாகிவிட்டது! இதோ இறுதி நபியின் இறுதிப்பேருரையின் கட்டளை

மக்களே! எனக்குப் பின் எந்தவொரு நபியும் (இறைத் தூதரும்) இல்லை.உங்களுக்குப் பின் எந்தவொரு சமுதாயமும் இல்லை. உங்களைப் படைத்து காப்பவனான அல்லாஹ்வையே வணங்குங்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட ஐவேளை தொழுகையை நிறைவேற்றுங்கள். ரமழான் மாதத்தில் நோன்பு வையுங்கள். மனமுவந்து உங்கள் செல்வத்துக்கான (மார்க்க வரி) ஸகாத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் இறைவனின்இல்லத்தை ஹஜ் செய்யுங்கள். உங்கள் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். (மேற்கூறிய நற்செயல்களால்) இறைவன் உங்களுக்காக படைத்துள்ள கவனத்தில் நுழைவீர்கள்.…………………. (நூல்: முஸ்லிம்,திர்மிதி, அஹ்மத், இப்னு ஜரீர், இப்னு ஹிஷாம்)


காதியாணிகளே முத்திரை என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? யாருடைய உள்ளங்களில் இறைநிராகரிப்புக்கான முத்திரை குத்தப்பட்டுவி்ட்டதோ அவர்களுக்கு இறுதி முத்திரை யைப் பற்றி எங்கே தெரியப்போகிறது! இதோ இதை அறிந்துக்கொள்ளுங்கள்!

அல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும்முத்திரை வைத்துவிட்டான் இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது; மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.(அல்குர்ஆன் 2:7)

காதியாணிகளுக்கு எச்சரிக்கை
உண்மையை உணர மறுக்கும் காதியாணிகளே நீங்கள் உங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ் கூறும் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு வாரும்!
இன்னும், (முஹம்மது (ஸல்) (என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள். (அல்குர்ஆன் 2:23)
இது இயலாத காரியம் நீங்கள் பொய்யர்கள் என்பதற்கு நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள். உங்களுடைய குருட்டுத்தனமாக வாதம் எப்படி இருக்கிறதென்றால் இதோ இந்த அருள்மறை வசனத்தைத்தான் நினைவுட்டுகிறது!

அதற்கு, (இறைவன் அனுப்பிய அவர்களுடைய தூதர்கள் “வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம்? அவன்; உங்களுடைய பாவங்களைமன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம்அளிக்கின்றான்” என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள் “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை; எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அப்படியானால், எங்களுக்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்” எனக் கூறினார்கள்.(14:10)

யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையை காணும்வரை அர்ரஹ்மான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறான்; (அவ்வாறு காணும் போது) எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலஹீனமானது என்பதை திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 19:75)

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons