Monday, April 4, 2011

ஆம்பூர் மக்களுக்கு அ.இ.மு.க முக்கிய கோரிக்கை


அகில இந்திய முஸ்லீம் முன்னேற்றக்கழகம் (அஇமுக) வின் தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் அளித்துள்ள பத்திரிகை செய்தி;
கண்ணியத்திற்குரிய எங்கள் உயிரினும் மேலான ஆம்பூர் வாழும் முஸ்லீம் சமுதாயமே! யாருக்கு வாக்களிக்கப்போகிறீர்கள்? நேற்றுவரை கருணா நிதிக்கு வால் பிடித்துக் கொண்டு வக்போர்டு சேர்மன் பதவியை அனுபவித்தும் பல கோடிகளை கொள்ளை அடித்து சம்பாதித்து விட்டு கருணா நிதியால் விரப்பட்டு இப்பொழுது ஜெயலலிதாவிடம் சரணடைந்து 3 எம்.எல்.ஏ தொகுதிகளை பெற்று மறுபடியும் இந்த முஸ்லீம் சமுதாயத்தை அடகுவைத்து விட்டு தான் பல கோடிகளை கொள்ளை அடித்துச்சம்பாதிக்க திட்டமிட்டு, மானங்கெட்ட மக்கள் கட்சி (மனித நேய மக்கள் கட்சி) வேட்பாளராக உங்கள் முன் நிற்கும் சமுதாய துரோகிகளை தோற்கடித்து இந்த நாட்டிற்கும் இந்த நாட்டு அரசியல்வாதிகளும் முஸ்லீம்கள் யாரும் இந்த மோசடி பேர்வழிகளுக்கு பின்னால் இல்லை என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்து முஸ்லீம்களின் கண்ணியத்தையும் மானத்தையும் காப்பாற்ற வேண்டுமாய் பேரண்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons