Wednesday, April 20, 2011

பெட்டி வாங்கிய அண்ணன் ஜமாத்..சின்ன மைனர் அப்பாஸுக்கு அதிரடி பதில்கள்


சிவப்பு எழுத்து: சின்ன மன்மதன் கேள்விகள்
ஊதா எழுத்து : பொய்யன்டிஜே பதில்கள்
எல்லோரும் சீட்டுக்காகவும்-நோட்டுக்காவும் தான் அரசியல் கட்சிகளோடு கை கோர்க்கிறார்கள். ஆனால் நாங்கள் மட்டும் தான் சீட்டு- நோட்டு என எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் சமுதாய நலனை முன்னிறுத்தி கட்சிகளிடம் கூட்டு சேர்கிறோம் என்று தங்களை தாங்களே பரிசுத்தவான்கள் என்று கூறிக்கொள்ளும் தனிநபர் ஜமாஅத்கடந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் பன்னீர் செல்வம் மூலமாக ஜெயலலிதாவிடம் பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டுள்ளதை படியுங்கள்;
சின்ன மன்மதன் அப்பாஸ் அவர்கள் எடுத்து வைத்துள்ள முதல் வாதம் மிக அருமையானது. ஒரு அரசியல் நிலைபாட்டை எடுக்க எல்லா அமைப்புகளும் 3 நிலையைக் கையாளுகின்றன.
1) 3 சீட்டு வாங்கிக் கொண்டு ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ என இளிப்பது.
2) எந்த நோக்கமும் இல்லாமல் திடீரென அம்மாவை ஆதரிக்கிறோம் என அறிக்கை விட்டு விட்டு தேவநாதன் மூலம் தூது விட்டு பெட்டி வாங்கிக் கொண்டு யோக்கியர்களைப் போல வேடமிடுவது.
3) சமுதாயத்துக்காக ஒரு நிலைபாட்டை முன் வைத்து பேரம் பேசி யார் ஒத்து வருகிறார்களோ அல்லது யாரால் நன்மையோ அவர்களை ஆதரிப்பது.
இதிலே மாமா கட்சி எந்த வகைமாமாக்கள் இருக்கும் கட்சி எந்த வகை,அண்ணன் ஜமாத் எந்த வகை என நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளலாம்.

''பன்னீர் செல்வம் மூலம் தேர்தல் செலவுக்காக பணம் வாங்கியது பாக்கர் அலவுத்தீன் முனிர் ஆகியோர்தான். அதை நிர்வகிக்கும் பொறுப்பு அலாவுத்தீனுக்கு கொடுக்கப்பட்டது. வாகனப்பிரச்சாரம்கொடிகள்,துண்டுப்பிரசுரங்கள் என்று ஒவ்வொரு செலவுக்கும் முறையாக அலாவுத்தீன் கணக்கு எழுதி நிர்வாகத்தில் ஒப்படைத்தார்.

என மன்மதன் அடுத்த வாதத்தை வைத்துள்ளார். அவர் குறிப்பிட்டுள்ள நபர்கள் இண்றைக்கு அண்ணன் ஜமாத்திலா இருக்கிறார்கள்அவர்கள் தானே இந்தக் காரியத்தை செய்தார்கள். எனவே அவர்கள் தான் அயோக்கியர்கள் என சொல்லி ஜகா வாங்குவதற்கு நாம் வரவில்லை.
பொதுவாக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை தேர்தலில் ஒரு அணியை தக்க காரணத்துடன் தான் ஆதரிக்கும். ஆதரிக்கும் முடிவை எடுத்த பின் ஆதரிக்கும் அணியினர் நம்முடைய பிரச்சாரத்தையும் தீவிர செயல்பாட்டையும் வேண்டினால் அதற்கான அனைத்து செலவுகளையும் நீங்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே நாங்கள் பிரச்சாரம். எங்களின் இயக்கத்தில் இருந்தோ அல்லது எங்கள் மக்களிடம் நிதி திரட்டியோ தேர்தல் பணி செய்ய மாட்டோம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சொல்லி விடும்.
இதனடிப்படையில் ஆதரிக்கப்படும் அணியினர் நம் ஜமாஅத்தின் தீவிரப் பிரச்சாரத்தை வேண்டினால் அதற்காக என்னென்ன தேவைப்படும் என்ற பட்டியலைக் கொடுத்து அந்த ஏற்பாடுகளைச் செய்து தருமாறு கேட்டுக் கொள்வோம்.
நோட்டிஸ்கள் பேனர்கள் சுவரொட்டிகள் வாகனங்கள் கொடிகள் போன்றவற்றின் பட்டியலை வழங்குவோம். நாம் ஆதரிக்கும் அணியினர் பொருளாகத் தராமல் பணமாகத் தான் தருவார்கள். நாம் தேர்தல் செலவுகள் முடிந்த பின் அந்தக் கணக்கை ஒப்படைத்து விடுவோம்.
இது மார்க்கப் பிரச்சாரப்பணியாக இல்லாததால் பிரச்சாரம் செய்வோருக்கும் உழைப்பவர்களுக்கும் அதற்கான ஊதியத்தையும் கொடுத்து விடுவோம். இது குறித்த கணக்கையும் சம்மந்தப்பட்டவர்களிடம் கொடுத்து விடுவோம்.
பொதுவாக எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் அதற்கான விமர்சனம் பீஜேயை நோக்கித் தான் திரும்புவது வழக்கமாக உள்ளதால் பீஜேயைப் பொருத்த வரை சூறாவளி பிரச்சாரம் செய்தாலும் பெரிய கூட்டங்களில் உரையாற்றினாலும் அதற்காக ஒரு பைசாவும் வாங்க மாட்டார். இன்றைய தேதி வரை வாங்கியதில்லை.
எல்லோரும் உழைப்பதற்கு ஏற்ப ஊக்கத் தொகை வாங்கும் போது நீங்களும் வாங்கிக் கொள்ளலாமே என்று வற்புறுத்திய போதும் தலைவராக இருப்பவர் இதில் தனித் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனக் கூறி விடுவார். அவர் தலைவராக இல்லாத போதும் இப்படித்தான் நடந்து கொண்டார்.
5 ரூபாயும், 10 ரூபாயும் சந்தாவாக பிச்சையெடுத்து வசூல் செய்த பணத்தில் இயங்கும் ஜமாத்தில்அந்த ஜமாத்தில் இருக்கும் தொலைப்பேசியில் நள்ளிரவில் தன் கள்ளக்காதலிக்கு போன் செய்து பேசியவர்கள் யாரும் இப்போது இந்த ஜமாத்தில் இல்லை.
அப்போது சுமார் ஒரு லட்சம் ரூபாய் மிச்சமிருந்தது. அந்தத் தொகையை ஜெகவீரபாண்டியன் வழியாக அதிமுகவுடன் கொடுத்து விடுவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஜெகவீர பாண்டியன் அதை வாங்க மறுத்து விட்டார்உங்கள் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார். எனவே அது ஜமாஅத் கணக்கில் சேர்க்கப்பட்டது. அதாவது தொண்டியப்பாவிடம் கொடுக்கப்பட்டது. (பொய்யன் டிஜே)
தேர்தலில் போட்டியிடாத தனிநபர் ஜமாஅத், ஜெயலலிதாவிடம் பெட்டி வாங்கியதை பற்றி விமர்சனம் கிளம்பும் வரை மக்களுக்கு சொன்னதுண்டாஇது அந்த தனிநபரை நம்பிய மக்களை ஏமாற்றும் செயலல்லவா?
மக்களுக்குச் சொன்னதுண்டா என்று கேட்கும் மூடனே! மன்மதன் தானே பொதுச் செயலாளராகவும், அவரது காக்கா தொண்டியப்பா தானே பொருளாளராகவும் இருந்தனர். அதை சொல்லாமல் இருந்தால் அது அவர்களின் தவறு தான். பணம் வாங்கிய முனீர் மன்மதன் பாக்கர் தான் பொறுப்பு, ஜெகவீர பாண்டியன் காசை திருப்பிக் கொடுக்கும் போது அதை உங்கள் பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று தான் கொடுத்தாரே தவிர அதை வைத்து பஸ்ஸிலே போங்கள் என்று சொல்லி கொடுக்கவில்லை.
அந்த காசை வாங்கி பிஜே வீட்டுக்கு பெயிண்டா அடிக்கப்பட்டதுஜமாத் கணக்கில் தானே சேர்க்கப்பட்டது. ஜமாத் கணக்கில் சேர்த்தது தான் தவறோ? அப்படியானால் செங்கிஸ்கான் கணக்கிலோ அல்லது கணக்கில் வராத வின்டிவி கருப்பு பண கணக்கிலோ போட்டு இருந்தால் இந்த சின்ன மன்மதன் கொஞ்சம் சாந்தமாகி இருப்பாரோ தெரியவில்லை?
அடுத்து ஜெயலலிதாவிடம் வாங்கிய பணத்திலிருந்து கொடிகள் தயாரித்தார்களாம். எந்தக்கொடிஅண்ணா திமுக கொடியாஇல்லையே! ததஜ கொடி தயாரிக்க ஜெயலலிதாவிடம் பணம் வாங்கியது எந்த வகை நியாயம்?
வாகனப் பிரச்சாரத்திற்கு செலவு செய்தார்களாம்! தன்னை ஆதரித்து பிரச்சாரம் செய்பவர்களுக்கு பிரச்சார வாகனத்தை சம்மந்தப்பட்ட வேட்பாளரே செய்து தருவார் என்பது அரசியலில் பச்சிளம் குழந்தையும் அறியுமே! துண்டு பிரசுரங்கள் அடித்தார்களாம்.
துண்டு பிரசுர மாதிரியை அண்ணா திமுகவிடம் கொடுத்தால் எத்தனை லட்சம் நோட்டீஸ் வேண்டுமானாலும் அடித்து தந்திருப்பார்களே! அல்லது கொட்டேஷனை கொடுத்துஇந்த தொகையை இந்த பிரஸ்ஸில் கட்டுங்கள் என்றால் அக்கட்சி கட்டியிருக்குமே! அவ்வாறு செய்யாமல் பணம் பெற்றது எதற்காக?
சின்ன மன்மதன் சொன்னது போலத்தான் தவ்ஹீத் ஜமாத் நோட்டீஸ் மாதிரியைக் கொடுத்தது. அவர்கள் அத்ற்கெல்லாம் நேரம் இல்லை என்று பணமாக கொடுத்ததாக சொல்லி அண்ணன் பாக்கரும் முனீரும் தான் பணமாக வாங்கி வந்தனர், இப்போது தான் தெரிகிறது அவர்கள் நோட்டீஸாக கொடுக்க தயாராக இருந்தும் பணமாகத் தான் வேண்டும் என்று அடம் பிடித்து பாக்கர் பணமாக வாங்கி வந்தார் என்பது. அதில் நடந்த உள்குத்துகளை அண்ணன் பாக்கரிடமே கேட்கலாம் சின்ன கவுண்டரே!
அந்த காசில் தவ்ஹீத் ஜமாஅத் கொடி தான் தயாரிக்கப்பட்டது. அப்படித்தான் அதிமுகவிடம் சொல்லப்பட்டது. நாங்கள் ஆதரிப்பது மக்களுக்கு தெரிய வேண்டுமானால் எங்கள் கொடிகள் தான் பரவலாக பறக்க விடப்பட வேண்டும். அதிமுக கொடிகளை பறக்க நாம் பறக்கவிட்டால் நாம் ஆதரிக்கிறோம் என்பது பொது மக்களுக்கு தெரியாமல் போய்விடும். அதே நேரத்தில் எங்கள் மக்கள் நம்பி வழங்கும் பணத்தில் இருந்து நம் தேவைக்கு அதிகமான கொடிகளுக்காக செலவிட முடியாது. இதனால் தான் எங்கள் கொடிகளையும் அதிக அளவில் தயாரித்து தர வேண்டும் என்று சொல்லப்பட்டது.
அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு அண்ணன் ஜமாத் ஏன் தன் சொந்த காசை செலவு செய்து கொடி தயாரிக்க வேண்டும் ? தேர்தல் உறவு தேர்தலுக்கு மறுநாளே முறிந்து விடும் என்பது தான் அண்ணன் ஜமாத்தின் நிலைபாடு. வாகனப் பிரச்சாரம் செய்ய வாகனத்தை அவர்களே ஏற்பாடு செய்து தருவார்களாம்! அது போல நோட்டீஸூம் அடித்து தருவார்களாம். சின்ன மன்மதன் என்னேரமும் ஐஸ்குச்சி மயக்கத்திலேயே இருந்தால் இதுதான் கதி. சாதாரணமாக போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் கூட இந்த மாதிரி வேலைகளை அவன் பார்க்க மாட்டான். நோட்டீஸ் அடித்து தருவதற்கு ஜெயலலிதா என்ன பிரிண்டிங் பிரஸ்ஸா நடத்துகிறார்?
தனது மைத்துனருக்கு அந்த ஆர்டரை தந்து லாபம் பார்க்கத்தானே!
சிவகாசி அக்பர் என்பவருக்குத் தான் ஆர்டர் கொடுக்கப்பட்டது. ஒரே ஒரு துடுப்பிரசுரம் பீஜேயின் மைத்துனரின் கொட்டேசன் குறைவாக இருந்ததால் அவருக்கு கொடுக்கப்பட்டது. அதைச் செய்தவர்கள் பாக்கர் முனீர் அலாவுத்தீன் ஆகியோர் தான். இதற்கும் பீஜேக்கும் சம்மந்தம் இல்லை.,
மைத்துனருக்கே ஆர்டர் தந்ததாக இருக்கட்டும்! அவர் என்ன மற்றவர்கள் 50 காசுக்கு அடிக்கும் நோட்டீஸை 5 ரூபாய் விலைபோட்டா அடிக்கிறார். அது தொழில்முறை. அதை விட குறைவாக யாராவது அடித்து தருகிறேம் என்று சொன்னால் அவர்களுக்கு இந்த ஆர்டர் வழங்கப்படும்.
அதேநேரம் பொய்யன் ஐந்து ரூபாய்க்கு சிடி வாங்கி அறுவது ரூபாய்க்கு விற்றது போல் இது இருக்கவில்லை.
அதோடு இன்னொரு செய்தி என்னவெனில்அப்போது ததஜ அடித்த அந்த மூன்று வகையான பிரசுரங்களை இப்போது வெளியிட்டால்திமுகவை ஆதரிக்கும் தனிநபர் ஜமாஅத்தின் முகமூடியை அந்த பிரசுரமே கிழிக்கும் என்பது தனி விஷயம்.
இன்றளவும் திமுக செய்த துரோகங்கள்அதிமுக செய்த துரோகங்கள் தேர்தல் நிலைபாடு என்ற பெயரில் இன்றைக்கும் ஆன்லைன்அண்ணன்.காம் தளத்திலே தான் இருக்கிறது. அதை இன்று வரை மறைக்கவும் இல்லைகுறைக்கவும் இல்லை. ஆனால் எம்.பி சீட்டுக்காக அம்மாவை திட்டித் தீர்த்தவர்கள் எல்லாம் இன்றைக்கு வெறும் சீட்டுக்காக வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மா என தூக்கத்திலும் புலம்புகிறார்களே! கலைஞரைப் பாராட்டியும் அம்மாவைத் திட்டித் தீர்த்தும் வெளியிட்ட வீடியோக்களை எல்லாம் தேடித்தேடி அழித்தார்களே! அவர்கள் யோக்கியர்களாம்ஆனால் அண்ணன் ஜமாத்தில் உள்ளவர்களின் முகமூடி கிழியுமாம்.வெளியிடுங்களேன்! கிளியட்டுமே! என்ன கொடுமை!

இதோடு ஜெயாவிடம் வாங்கிய பணத்தை வைத்து இன்னொன்றும் செய்தார்கள். தேர்தல் நேரத்தில் பணம் வாங்கிக்கொண்டு கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்ய சில நடிகர் கூட்டம் கிளம்பும்.
அதுபோலகடந்த தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்த ததஜவின் முக்கிய தனிநபர் பிரச்சாரகர் இருவருக்கு ஜெயலலிதாவிடம் வாங்கிய பணத்திலிருந்து ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதா இல்லையாகூலி வாங்கிக்கொண்டு கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்யும் நடிகர்கள் சிலருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்தனிநபருக்கு துணிவிருந்தால் ஜெயலலிதாவிடம் வாங்கிய தொகை எவ்வளவுஅது எந்தெந்த வகைகளுக்கு பயன்படுத்தப்பட்டது என்ற விபரத்தை மக்கள் மன்றத்தில் வைக்கத் தயாரா?
பீஜேயைத் தவிர மற்ற அனைவருக்கும் பொய்யனுக்கும் தான்  ஊக்கத் தொகை அளிக்கப்பட்டது உண்மை தான். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. அந்தக் கணக்கு உட்பட எல்லாக் கணக்கையும் தான் பொருளாளராக இருந்த தொண்டியப்பா இன்னும் தரவில்லையே. மிச்சர் விற்பவனிடம் கணக்கை ஒப்படைக்க மாட்டேன் என்று சொன்ன ஜாதி வெறியர் தொண்டியப்பாவிடம் முழு கணக்கையும் வாங்கி ஒப்படைத்தால் அதை நாம் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.
அதாவது அப்போது பொருளாளராக சையித் இபராஹீம் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டார். அவர் மிச்சர் வியாபாரம் செய்து வந்ததால் உயர் ஜாதியில்(?) பிறந்த தொண்டியப்பா கணக்கை ஒப்படைக்க மாட்டாராம்.
பெரிய அளவில் எல்லொரும் சேர்ந்து தேர்தல், மாநாடு உள்ளிட்ட கணக்குகளில் சுருட்டியதால் தான் கணக்கை ஒப்படைக்க மறுத்து விட்டனர் என்பதே உண்மை. விவாதத்திற்கு எந்த நேரமும் தயார். 24 X 7.
அதே போல இந்த தேர்தலுக்கு அம்மாவை எந்தவித நோக்கமும் இல்லாமல் மன்மதன் ஆதரித்த காரணத்தையும் இவர்கள் மக்கள் மன்றத்தில் வைப்பார்கள். சேப்பாக்கம் தொகுதியில் இவ்வளவு வீரியமாக(?) களப்பணியாற்றியது முதல் கடைசியில் தேர்தல் கமிஷனுக்கு ஐஸ்ஹவுஸிலும்எல்லீஸ் ரோடு மவுண்ட் ரோடு சந்திப்பிலும் வைத்த பிரம்ம்மாண்ட பேனர் வரைக்கும் ஆதாரங்களை அள்ளிக் கொட்ட அண்ணன் ஜமாத் தயார். அத்தோடு அம்மாவே சொல்லாத இடஒதுக்கீடு சம்பந்தமான தலையங்கம் குறித்தும் கிழித்து நாறாக்க அண்ணன் ஜமாத் தயார். நீங்கள் ஆக வேண்டியதைப் பாருங்கள். எப்பொழுது எங்கே என தெளிவான ஒப்பந்தம் போட வேண்டும். சீக்கிரம் சொல்லுங்கள் சின்ன கவுண்டரே! மண்டபம் கிடைப்பதில் ஏகப்பட்ட சிரமங்கள் இருக்கின்றன.
மக்களுக்கு ஒரு வேண்டுகோள்: தன்னை யோக்கியனாக காட்டிக்கொண்டு அண்ணன் ஜமாத்தை அயோக்கியனாக காட்டத்துடிக்கும் முகவை அப்பாஸ் அவர்களையும்இந்த செய்தியை வெளியிட்டு நல்ல பிள்ளை போல நடித்துக் கொண்டிருக்கும் மன்மதன் தளத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி விவாதத்திற்கு தேதி குறித்தால் இன்னும் பல விசயங்களை வெளிக்கொண்டு வர நன்றாக இருக்கும். எனவே தயவுசெய்து அப்பாஸை நேரில் பார்ப்பவர்கள் இது சம்பந்தமாக வலியுறுத்துங்கள். பொய்யன் தளத்தில் இருக்கும் கமேண்ட் பேடில் இது குறித்து தொடர்ந்து வலியுறுத்திக் கேட்டு தேதியைக் குறிக்கச் சொல்லுங்கள். முகவை அப்பாஸ் போன் நம்பரை நமக்கும்பல சகோதர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
அல்லது கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டு இவர்களிடம் தேதி கேளுங்கள்:
S.M.பாக்கர் (+91-94443 60006)
A.முஹம்மது சித்தீக் (+91-97101 18244)
A.அபூபக்கர் (எ) தொண்டியப்பா (+91-99620 79234)
M.I.முஹம்மது முனீர் (+91-98410 70558)
S.M.ஸையது இக்பால் (+91-96001 91610)
P.M.H.செங்கிஸ்கான் (+91-99768 85917)
இந்த விவாதத்தில் அண்ணன் அப்பாஸூம் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.

ஆகசகோதரர்களே! இவற்றை எல்லாம் எழுதும் எண்ணம் எமக்கு இவ்வளவு காலமாக இல்லை. ஆனால் தொடர்ந்து தாங்கள் மட்டுமே யோக்கியர்கள் என வேஷம் போடும் இவர்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறோம். அரசியல் கட்சிகளிடம் சீட்டும்- நோட்டும் வாங்கமாட்டோம் என்று சொல்லிக்கொண்டு ஜெகவீர பாண்டியனுக்கு ஜெயலலிதாவிடம் சீட்டுக் கேட்டார்கள். அதே ஜெயலலிதாவிடம் பணமும் பெற்றார்கள் என்பதை நாம் நிரூபித்துள்ளோம். நடுநிலையோடு சிந்தியுங்கள். இன்னும் இவர்களின் வேஷங்களை நம்பாதீர்கள்.

ஜெகவீரபாண்டியனுக்கு சீட்டுக் கேட்டதையும் அண்ணன் ஜமாத் நோட்டு வாங்கியதையும் சேர்த்தே மக்கள் மன்றத்தில் நிருபிக்கட்டும். யோக்கியர்கள் யார் என்பதை மக்கள் முடிவுசெய்யட்டும்
குறிப்புகடந்த தேர்தலின் போது பாக்கரும் தானே அங்கு இருந்தார் என்று திசை திருப்பக் கூடாது. அந்த காலகட்டத்தில் அந்த ஜமாஅத்தில் இருந்த மாநில நிர்வாகிகள் அனைவருமே இந்த விஷயத்தில் பங்காளிகளே!
-முகவை அப்பாஸ்.
மேற்கண்ட பத்திக்கு விளக்கமோ விபரமோ தேவையில்லை. தோலுரித்து காட்டிய அப்பாஸூக்கு நன்றி!!!
அது மட்டுமின்றி அண்ணன் அப்பாஸ் அவர்களுக்கு 100 கேள்விகள் கேட்கப்பட்டு அது இன்னும் அசையாமல் கிடப்பிலேயே கிடக்கிறது. அதற்கும் கொஞ்சம் கொஞ்சமாக பதில் தந்தால் நன்றாக இருக்கும்.
தொடரும் செய்தி: வேலூரில் கள்ள ரசீது அடித்து அடித்து அண்ணன் ஜமாத் பெயரை பயன்படுத்தி லட்சக்கணக்கில் வசூல் செய்து மாட்டிக்கொண்ட பொய்யன் கூட்டத்தின் முகமூடியை ஆதாரத்துடன் கிழிக்கும் செய்தி..... அடுத்து வருவது.....

0 comments:

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | JCPenney Coupons